Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

சொந்த வீடு அமைய பரிகாரம் | Sontha Veedu Vanga Pariharam In Tamil

July 10, 2020 | Total Views : 2,372
Zoom In Zoom Out Print

உங்களுக்கு சொந்த வீடு அமையுமா?  - எந்த ராசிக்கு எந்த திசை வீடு?

இந்தப் பூ உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவைகள் ஆகும்.  பறவைகள் தமக்கென்று கூடு கட்டி அதில் வசிக்கின்றன. எலி கூட தனக்கென ஒரு வளை அமைத்து அதில் வசிக்கின்றது.   அப்படி இருக்கும் போது மனிதர்களாகிய நமது ஒவ்வொருவர்  மனதிலும் நமக்கென ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பே.  எலி வளை என்றாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி. 

சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது பலரின் கனவு. அவரவர் சக்திக்கேற்ப குடிசைவீடு, கூரை வீடு, ஓட்டு வீடு, காரை வீடு, கல்லு வீடு, மாடி வீடு என்கிற வகையில் இருக்க ஆசைப்படுவது  இயல்பு. இன்றைய காலக் கட்டங்களில் ‘அடுக்ககம்’ என்னும் அடுக்கு மாடி குடியிருப்புகள் தான் அதிக அளவில் எழுப்பப்பட்டு வருகின்றன. சொந்த வீடு அமைய பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிடம் வல்லுனர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுக்கு சொந்த வீடு அமையுமா?

எனக்கு சொந்த வீடு அமையுமா என ஒருவரின் மனதில் எழும் கேள்விக்கு விடை தரும் வழிகாட்டியாக விளங்குவது ஜோதிடம் என்றால் அது மிகை ஆகாது. ஜோதிடம் என்பது அண்டத்தில் கிரகங்களின் நிலை பற்றி கூறுவது. ஜாதகம் என்பது, ஒருவர் பிறக்கும் போது  அந்த கிரகங்கள் இருக்கும் நிலை ஆகும்.  அது அந்த ஜாதகருக்கு மட்டுமே பொருந்தும். அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் என்று கூறுவார்கள்.  எனவே அண்டத்தில் இருக்கும் கிரக கதிர்கள் நமது மூச்சுக் காற்றுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தான் அவைகளின் இயக்கம் நமது வாழ்வோடு தொடர்பு கொள்கின்றது.

நமது மனதில் பல ஆசைகள் இருந்தாலும் அந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு நமக்கு கொடுப்பினையும் வேண்டும். அந்த கொடுப்பினை உள்ளதா என்பதை நமது ஜாதகக் கட்டத்தில் இருக்கும் கிரக நிலைகள் மூலம் நாம்  அறிய முடியும். 

சொந்த வீடு என்பது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை, பார்வை கூட்டணியைப் பொறுத்தே அமைகின்றது.நவகிரகங்கள் தான் நம்மை ஆள்கின்றது என்றால் அது மிகை ஆகாது. சூரியன், சந்திரன்,  செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது – இவையே ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் நவ கிரகங்கள் ஆகும். இந்த நவகிரகங்களில் நிலம், பூமி இவைகளுக்கு காரகர் செவ்வாய்.  வீட்டிற்கு காரகர் சுக்கிரன். 

வீடு மனை அமைய நான்காம் பாவம் நிலை :

ஒருவருக்கு சொந்தமாக வீடு மனை அமைய ஜாதக ரீதியாக நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்க வேண்டும்.  இந்த நான்காம் அதிபதி கேந்திர ஸ்தானம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் இருப்பது நல்ல அமைப்பு ஆகும்.  5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

வீடு மனை அமைய சுக்கிரன், செவ்வாய் நிலை :

நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக நான்கில் அல்லது நான்காம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

வீடு கட்டும் யோகம்:

ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நான்காம் அதிபதியும், நான்காம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. நான்காம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

கிரகங்களின் அமைப்பும் வீட்டின் அமைப்பும்:

சொந்த வீடு அமையும் யோகம் இருக்கிறதா என்பது மட்டுமின்றி, அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் நான்காம் பாவத்தின் மூலம் அறியலாம். சிலருக்கு மாட மாளிகையும், உயரமான கட்டிடங்களில் வசிக்கக்கூடிய யோகமும், சிலருக்கு ஓட்டு வீடு, குடிசை வீடு என அவரவர் நான்காம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும். நான்காம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, நான்காம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, நான்காம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.

4 ஆம் பாவத்துடன் ஒரு உச்சம் பெற்ற கோள் இருந்தால் விசாலமான வீடு அமையும்:

சூரியன் 4 ஆம் பாவத்தில் இருந்தால் குடிசை / கீற்று  கூரைகள் முதலியவற்றால்  ஆன வீடு அமையும் 
சந்திரன், சுக்கிரன், குரு ஆகியவர்கள் 4 ஆம் பாவத்தில் இருந்தால் இணைவு பெற்றால் அரண்மனை போன்ற வீடுகள் அமையும் 
செவ்வாய் மற்றும் கேது முதலியவை 4 ஆம் பாவத்தில் இருந்தால் செங்கல் அல்லது  களிமண்ணால் உருவாக்கப்பட்ட வீடு அமையும்
குரு 4 ஆம் பாவத்தில் இருந்தால் இருந்தால் மரங்களால் ஆன வீடு அமையும் சனி ராகு 4 ஆம் பாவத்தில் இருந்தால் மற்றும்  பாறைகளால் ஆன வீடு அமையும் 

யாருக்கு சொந்த வீடு அமையாது:

ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 6,8,12 ல் மறைவுப் பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றிருந்தாலும், சனி போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்தவீடு அமைய தடை உண்டாகும். 4ம் அதிபதி நீசம், அஸ்தங்கம், பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் வீடு, அசையா சொத்துக்கள் அமையாது.

நிலம் பூமி இவைகளுக்கு காரகர் செவ்வாய். கட்டிடத்துக்கு காரகர் சுக்கிரன். சனி செவ்வாய்க்கு பகைக் கோள்.. எனவே சனி 4 ஆம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் நிலம் மற்றும் அசையாச் சொத்துக்கள் அமைவது கடினம் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒவ்வொரு ராசிக்குமான வீடு அமைக்க வேண்டிய திசைகள்:

எந்தத் திசையில் வீடு இருந்தால் நல்லது .எந்த திசையில் தலை வாசல் வைத்தால் நல்லது என்பன போன்ற சந்தேகங்கள் வீடு கட்டும் போது நம்முள் எழும். ஒருவர் சொந்த வீடு கட்டி அதில் குடி புகுந்து வாழும் போது வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படவும், பாரம்பரியமாக அந்த வீடு அந்த குடும்பத்தினருக்கு அமையவும், வீட்டில் மகிழ்ச்சி பொங்கவும், நல்ல சுப காரியங்கள் நடைபெறவும் எந்த திசையில் வாசல் வைத்து வீடு அமைக்க வேண்டும், எந்த திசையில் தலை வாசல் இருக்க வேண்டும் என அறிந்து வீடு கட்டிக் கொன்வது சிறந்தது. ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தெந்த திசையில் வீட்டின் வாசல் அமைத்துக் கொண்டால் வாழ்வாதாரத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதைக் காண்போம்.

•மேஷ ராசி – இராசி அதிபதி செவ்வாய் "

நட்சத்திரங்கள் அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் 
கிழக்கு பார்த்த வீடு சிறந்த முன்னேற்றத்தை அளிக்கும். 

•ரிஷப ராசி  இராசி அதிபதி சுக்கிரன்:

நட்சத்திரங்கள் கிருத்திகை 2,3,4 பாதங்கள்  ரோகிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள்  
தெற்கு நோக்கி தலை வாசல் இருப்பது அதிர்ஷ்டம் அளிக்கும், 

•மிதுன ராசி :

இராசி அதிபதி புதன்
நட்சத்திரங்கள்   மிருகசீரிடம் 3,4 பாதங்கள் , திருவாதிரை புனர்பூசம்1,2,3 பாதங்கள் 
மேற்கு பார்த்த வீடு அல்லது வட மேற்கு பார்த்த  தலை வாசல் அதிர்ஷ்டம் அளிக்கும். 

•கடக ராசி:

ராசி அதிபதி சந்திரன்  
நட்சத்திரங்கள்  புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம் ஆயில்யம்
வடக்கு பார்த்த மனை  அல்லது வட கிழக்கு பார்த்த தலைவாசல் சிறந்த முன்னேற்றங்களை அளிக்கும்,  

•சிம்ம ராசி:

ராசி அதிபதி சூரியன் 
நட்சத்திரங்கள் மகம் பூரம் உத்திரம் 1 ஆம் பாதம்
கிழக்கு பார்த்த மனை, வடகிழக்கு அல்லது வடக்கு பார்த்த தலை வாசல் 

•கன்னி ராசி:

ராசி அதிபதி புதன்
நட்சத்திரங்கள் உத்திரம் 2,3,4 அஸ்தம் சித்திரை 1,2,
தெற்கு நோக்கி இருக்கும் மனை தென் கிழக்கு தலை வாசல் சிறந்த வாழ்வாதாரத்தை அளிக்கும்.

•துலா ராசி :

ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரங்கள் சித்திரை 3,4 பாதங்கள்  சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் 
மேற்கு பார்த்த மனை  வட மேற்கு பார்த்த தலை வாசல் அதிர்ஷ்டம் அளிக்கும் 

•விருச்சிக ராசி :

ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரங்கள் விசாகம் 4 ஆம் பாதம்  அனுஷம் கேட்டை
வடக்கு பார்த்த மனை வட கிழக்கு  பார்த்த தலை வாசல்அதிர்ஷ்டம் அளிக்கும் 

•தனுசு ராசி:

ராசி அதிபதி குரு 
நட்சத்திரங்கள் மூலம் பூராடம், உத்திராடம்1 ஆம் பாதம் 
கிழக்கு பார்த்த மனை  வட கிழக்கு பார்த்த தலை வாசல் செல்வச் செழிப்பை அளிக்கும். 

•மகர ராசி:

ராசி அதிபதி சனி  
நட்சத்திரங்கள் உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் , திருவோணம், அவிட்டம்1,2 ஆம் பாதங்கள் 
தெற்கு பார்த்த மனை , தென் கிழக்கு பார்த்த தலை வாசல்  உத்தமம்

•கும்ப ராசி:

ராசி அதிபதி சனி
நட்சத்திரங்கள் – அவிட்டம் 3 4 ஆம் பாதங்கள், சதயம் பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் 
மேற்கு பார்த்த மனை வடமேற்கு நோக்கிய  தலைவாசல் சிறந்த வாழ்வாதாரத்தை அளிக்கும் 

•மீன ராசி:

ராசி அதிபதி குரு
நட்சத்திரங்கள் பூரட்டாதி 4 ஆம் பாதம்  உத்திரட்டாதி ரேவதி
வடக்கு பார்த்த வாசல் அதிர்ஷ்டத்தை பெருக்கும்.

banner

Leave a Reply

Submit Comment