தனுசு ராசி அன்பர்களே!
ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், தன் ஆட்சி வீடான தனுசு ராசியிலேயே, குரு பிரவேசிக்கிறார். இது, சுப கிரகமான குரு, நலம் விளைவிக்கும் இடமாக இருக்காது. இந்த வீட்டிலிருந்து இவர், மக்கட் செல்வம், பூர்வ புண்ணியம், அறிவுத்திறன், அன்பு, நினைவாற்றல், ஊக வணிகம் ஆகியவற்றைக் குறிக்கும் 5 ஆம் வீட்டையும்; வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளிகள், இன்பம், ஆகியவற்றைக் குறிக்கும் 7 ஆம் வீட்டையும்; பாக்கியம், அதிர்ஷ்டம், மதம், தர்மம், புண்ணியம், நற்குணங்கள், தந்தை, உயர் அதிகாரிகள், முன்னேர்கள், நம்பிக்கை, யோகா, தியானம் ஆகியவற்றைக் குறிக்கும் 9 ஆம் வீட்டையும்; பார்க்கிறார்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
2019 குரு பெயர்ச்சி பற்றிய முழு விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த குரு பெயர்ச்சியின் பொழுது, உங்கள் வாழ்வில், பல சாதகமற்ற நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுவாக வாழ்க்கை மந்தமாகவே செல்லும்; ஒளியிழந்தும் காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், தாய், தந்தை ஆகியவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது; அவர்களுடனான உறவும் சுமுகமாக இல்லாமல் போகலாம். பிற உறவினர்களுடன் மனக் கசப்பும் ஏற்படலாம். சில நேரங்களில், நீங்கள் அறிவுபூர்வமாகவும் செயலாற்றமாட்டீர்கள். இது போன்ற சூழ்நிலையில், ஊக வணிகம் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
இந்த நேரத்தில், உங்கள் தைரியம், பேச்சுத் திறன் போன்றவையும் குறைந்தே காணப்படும். திருமணத்திற்கு வரன் தேடுவதற்கும் இது உகந்த நேரம் அல்ல. இப்பொழுது, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும் தோன்றக்கூடும். தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் காண இயலாது. எனவே, புதுத் தொழில்கள் தொடங்கவோ, கூட்டு வர்த்தகம் செய்யவோ வேண்டாம். நிதிநிலை சாதாரணமாக இருக்கும். இப்பொழுது உடல்நிலை சுமாராகவே இருக்கும் என்பதால், அது குறித்தப் எந்த பிரச்சினையையும் கவனமாகக் கையாள வேண்டும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தனுசு ராசி - வேலை மற்றும் தொழில்
குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலம், வேலைக்கோ, தோழி;லுக்கோ சாதகமாக இருக்காது. ஆனால், பின்னர் இவை சற்றே மேம்படும். பொதுவாக, கடும் முயற்சிகளுக்குப் பின்னர் கூட, உங்களுக்கு, எதிர்பார்த்த பலன்களோ, திருப்தியோ கிடைக்காமல் போகலாம்.
தனுசு ராசி - நிதி
இந்த நேரத்தில், வருமானம், பணவரவு போன்றவை மிகச்சிறப்பாக இருக்கும் என்று சொல்ல இயலாது. ஆனால், உங்கள் செல்வம், வங்கியில் இருக்கும் பணம், கையிறுப்புகள் ஆகியவற்றைக் கொண்டு, செலவுகளை எளிதில் சமாளித்து விடலாம். இந்தப் பெயர்ச்சியின் துவக்க காலத்தில், சில அதிகப்படி வருமானங்களுக்கு, நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் பணத்தை விரயம் செய்ய வேண்டாம்.
தனுசு ராசி - குடும்பம்
குடும்ப வாழ்க்கையில், சுமாரான வளமும், முன்னேற்றமும் காணப்படும். வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர், மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் உங்கள் உறவும் சாதாரணமாகவே இருக்கும். எனவே குடும்பத்தினருடன் முடிந்த அளவு, நேரத்தை இனிமையாகச் செலவிடுங்கள். அவர்களிடம் நீங்கள் செலுத்தும் அன்பு, கண்டிப்பாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்; நீங்கள் கொடுத்தை விட, அதிகமாகவே கிடைக்கும்.
பரிகாரம்: கனகதாரா பாராயணம் மற்றும் ஸ்ரீசுக்த ஹோமம்
தனுசு ராசி - கல்வி
இது மாணவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்காது. படிப்பில் அவர்கள் ஆர்வமும், கவனமும் குறைவாகவே இருக்கும். ஆகவே வெற்றிகளை அடைவதற்கு, நீங்கள் கால, நேரம் பார்க்காமல், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்களும், அதற்காக தீவிரமாகப் போராட வேண்டியிருக்கும்.
பரிகாரம்: சுப்பிரமணிய யந்திரம்
தனுசு ராசி - காதல் மற்றும் திருமணம்
திருமணத்திற்காக துணை தேடும் முயற்சிகளுக்குப் பெரிய வெற்றி கிடைக்காது. தீவிர நடவடிக்கைகள் ஒருவேளை பயன் தரக்கூடும். மேலும் இதற்காக, குரு பகவானை வழிபட்டு, அவருக்குப் பரிகாரம் செய்யலாம். இதனால் நல்ல பயன் விளையக்கூடும். இந்த நேரத்தில், துணையிடம் உங்கள் அன்பையும், காதலையும், உங்களால் சரியாக வெளிப்படுத்த முடியாமால் போகலாம். மணவாழ்க்கையிலும், மகிழ்ச்சி குறைந்தே காணப்படும். ஆகவே, முழு மனதுடன் நேசிக்கப் பழகுங்கள். இதனால் மனநிறைவு உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ண யந்திரம்
தனுசு ராசி - ஆரோக்கியம்
இப்பொழுது, சில சிறிய உடல் உபாதைகள் ஏற்படலாம். இவற்றை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பத்திலேயே கவனித்து விடுவது நல்லது. இல்லாவிட்டால், இவை பெரிய நோய்களாக உருவெடுத்துவிடக் கூடும். குறிப்பாக, கண்கள், பல், தொண்டை, முகம் தொடர்பான பிரச்சினைகளில் எச்சரிக்கை தேவை.
எளிய பரிகாரங்கள்
- பகவான் விஷ்ணுவையும், சிவபெருமானையும் வணங்கவும்
- வயது முதிர்ந்தவர்கள், புரோகிதர்கள், அந்தணர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களிடம் உரிய மரியாதை செலுத்தவும்
- மூத்த சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவைப் பராமரிக்கவும்
- குழந்தைகளுடன் அன்புடனும், பரிவுடனும் பழகவும்
Leave a Reply