Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்

November 9, 2019 | Total Views : 951
Zoom In Zoom Out Print

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர்.

தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

அறுபத்து நான்கு பைரவர்கள்

பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

நீலகண்ட பைரவர், விசாலாக்ஷ பைரவர், மார்த்தாண்ட பைரவர், முண்டனப்பிரபு பைரவர், ஸ்வஸ்சந்த பைரவர், அதிசந்துஷ்ட பைரவர், கேர பைரவர், ஸம்ஹார பைரவர், விஸ்வரூப பைரவர், நானாரூப பைரவர், பரம பைரவர், தண்டகர்ண பைரவர், ஸ்தாபாத்ர பைரவர், சீரீட பைரவர், உன்மத்த பைரவர், மேகநாத பைரவர், மனோவேக பைரவர், க்ஷத்ர பாலக பைரவர், விருபாக்ஷ பைரவர், கராள பைரவர், நிர்பய பைரவர், ஆகர்ஷண பைரவர், ப்ரேக்ஷத பைரவர், லோகபால பைரவர், கதாதர பைரவர், வஞ்ரஹஸ்த பைரவர், மகாகால பைரவர், பிரகண்ட பைரவர், ப்ரளய பைரவர், அந்தக பைரவர், பூமிகர்ப்ப பைரவர், பீஷ்ண பைரவர், ஸம்ஹார பைரவர், குலபால பைரவர், ருண்டமாலா பைரவர், ரத்தாங்க பைரவர், பிங்களேஷ்ண பைரவர், அப்ரரூப பைரவர், தாரபாலன பைரவர், ப்ரஜா பாலன பைரவர், குல பைரவர், மந்திர நாயக பைரவர், ருத்ர பைரவர், பிதாமஹ பைரவர், விஷ்ணு பைரவர், வடுகநாத பைரவர், கபால பைரவர், பூதவேதாள பைரவர், த்ரிநேத்ர பைரவர், திரிபுராந்தக பைரவர், வரத பைரவர், பர்வத வாகன பைரவர், சசிவாகன பைரவர், கபால பூஷண பைரவர், ஸர்வவேத பைரவர், ஈசான பைரவர், ஸர்வபூத பைரவர், ஸர்வபூத பைரவர்,கோரநாத பைரவர்,பயங்க பைரவர்,புத்திமுக்தி பயப்த பைரவர்,காலாக்னி பைரவர், மகாரௌத்ர பைரவர், தக்ஷிணா பிஸ்திதி பைரவர். இது தவிர ஸூவர்ண ஆகர்ஷ்ண பைரவர் என்ற பைரவரும் உண்டு.

தேய்பிறையில் கால பைரவர் வழிபாடு

தேய்பிறை அஷ்டமி நாள் அவருக்கு உகந்த நாள்.அன்று அவரை வழிபட வாழ்வில் உள்ள கஷ்டங்கள் யாவும் நீங்கும். படைத்தல் காத்தல் அழித்தல் என முத்தொழில் புரியும் கால பைரவர் நமக்கு ஏற்படும் பயங்களை அழிப்பவர். நமது பயங்கள் அகலும் போது நமது செயல்களில் ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும். இந்த ஆற்றல் மூலம் நாம் மேற்கொள்ளும் காரியங்கள் யாவிலும் வெற்றி பெற இயலும்.

கால பைரவர் வழிபாடும் லக்ஷ்மி கடாட்சமும்:

இறைவனை தொழுவதற்கு எல்லா நாட்களும் உகந்தது. நித்தமும் இறைவனை வணங்குவதில் சிறப்பான பலன்கள் கிட்டும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருப்பதில்லை என்று நாம் சில நேரங்களில் தவிர்த்து விடுகிறோம்.

ஆனால் ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு சில தினங்கள் வழிபாடும் செய்யும் சிறப்பு நாளாக நம் புனித நூல்கள் கூறுகின்றன. அந்த வகையில் பைரவரை வழிப தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாக கருதப்படுகின்றது.

பொதுவாக தேய்பிறையில் கால பைரவரை வழிபடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அதிலும் தேய்பிறையும் செவ்வாய்க் கிழமையும் சேர்ந்து வரும் நாளன்று அவரை வணங்குவதன் மூலம் நம் கடன்கள் யாவும் தீரும். கடன்கள் தீரும் போது நமது வருமானம் நாம் சேமிக்க இயலும். நமது செல்வம் பெருகும். எனவே தேய்பிறையில் கால பைரவ வழிபாடு நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்தை அளிக்கும்.

வளர் பிறையில் கால பைரவர் வழிபாடு:

தேய்பிறை அஷ்டமி போலவே வளர்பிறை அஷ்டமி நாளும் கால பைரவரை வணங்க உகந்த நாளாகும். வளர்பிறை அஷ்டமி திதி அன்று கால பைரவர் வழிபாடு நமது வாழ்வில் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் ஆறு வளர்பிறை நாட்களில் நாம் கால பைரவரை வணங்கினால்  நமது கடந்த  பிறவிகளில் ஏற்படுத்திய கர்மவினைகள் கரையத் துவங்கும், அதனால், ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நமது வாழ்வில் நேர்மறை அலைகளை ஏற்படுத்தி எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நம்மை சிறந்த வி‌ஏ‌ஜி‌ஏ‌ஐ‌ஒய்‌ஐ‌எல் செயல்படச் செய்யும். நமது தடைகள் மற்றும் பிரச்சினைகள்  யாவும் நீங்கி  வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.

காலா பைரவ வழிபாட்டின் பலன்கள்:

காலபைரவரை தொழுபவர்க்கு கவலைகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். கடன்கள் தீரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். யோகங்கள் உண்டாகும். வாழ்வில் உற்சாகம் பிறக்கும். மொத்தத்தில் அஷ்ட லட்சுமியின் அருள் கிட்டும்.

 

banner

Leave a Reply

Submit Comment