ஓம் சக்தி போற்றி | Om Sakthi 108 Potri in Tamil

நமது இந்து மரபில் அனைவராலும் வணங்கப்படும் தெய்வம் பார்வதி தேவி. இவர் மலையரசனின் மகளாக கருதப்படுகிறார். பார்வதி தேவி பல ரூபங்களில் வணங்கப்படாலும் அவரது மூல ரூபம் ஆதி சக்தி ஆகும். அன்னை சக்தி அண்ட சராரத்தையும் படைத்துக் காத்து வருகிறாள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பார்கள். அகில உயிர்கள் அனைத்திற்கும் அருள் பாலிப்பவள் அவளே. இந்து சமய வழிபாட்டில் மந்திரம் ஜெபிப்பது இறை அருள் பெற எளிய வழியாக கருதப்படுகிறது .அந்த ஆதி சக்தியை 108 போற்றி கூறி வழிபடுவதன் மூலம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம்.
ஓம் ஓம்சக்தியே போற்றி
1. ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி
2. ஓம் உலக நாயகியே போற்றி
3. ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி
4. ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி
5. ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி
6. ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி
7. ஓம் உயிராய் நின்றவளே போற்றி
8. ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி
9. ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி
10. ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி
11. ஓம் ககனவெளி ஆனாய் போற்றி
12. ஓம் புற்றாகி வந்தவளே போற்றி
13. ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி
14. ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி
15. ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி
16. ஓம் பாமலர் உவந்தாய் போற்றி
17. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
18. ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி
19. ஓம் செம்பொருள் நீயே போற்றி
20. ஓம் சக்தியே தாயே போற்றி
21. ஓம் சன்மார்க்க நெறியே போற்றி
22. ஓம் சமதர்ம விருந்தே போற்றி
23. ஓம் ஓங்கார உருவே போற்றி
24. ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி
25. ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி
26. ஓம் நின்மதி தருவாய் போற்றி
27. ஓம் அகிலமே ஆனாய் போற்றி
28. ஓம் அண்டமே விரிந்தாய் போற்றி
29. ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி
30. -
31. ஓம் அனலாக ஆனாய் போற்றி
32. ஓம் நீராக நிறைந்தாய் போற்றி
33. ஓம் நிலனாகத் திணிந்தாய் போற்றி
34. ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி
35. ஓம் துணிபொருள் நீயே போற்றி
36. ஓம் காராக வருவாய் போற்றி
37. ஓம் கனியான மனமே போற்றி
38. ஓம் மூலமே முதலே போற்றி
39. ஓம் முனைச்சுழி விழியே போற்றி
40. ஓம் வீணையே இசையே போற்றி
41. ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி
42. ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி
43. ஓம் சகலமறைப் பொருளே போற்றி
44. ஓம் உத்தமி ஆனாய் போற்றி
45. ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி
46. ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய் போற்றி
47. ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி
48. ஓம் துரிய நிலையே போற்றி
49. ஓம் துரிய தீத வைப்பே போற்றி
50. ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி
51. ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய் போற்றி
52. ஓம் கருவான மூலம் போற்றி
53. ஓம் உருவான கோலம் போற்றி
54. ஓம் சாந்தமே உருவாய் போற்றி
55. ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி
56. ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி
57. ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி
58. ஓம் கையிரண்டு உடையாய் போற்றி
59. ஓம் கரைபுரண்ட கருணை போற்றி
60. ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி
61. ஓம் மோனநல் தவத்தாய் போற்றி
62. ஓம் யோகநல் உருவே போற்றி
63. ஓம் ஒளியன ஆனாய் போற்றி
64. ஓம் எந்திரத் திருவே போற்றி
65. ஓம் மந்திரத் தாயே போற்றி
66. ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி
67. ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி
68. ஓம் மாயவன் தங்கையே போற்றி
69. ஓம் சேயவன் தாயே போற்றி
70. ஓம் திரிபுரத்தாளே போற்றி
‘
71. ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி
72. ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி
73. ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி
75. ஓம் ஆருயிர் மருந்தே போற்றி
76. ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி
77. ஓம் கருத்தொளி தருவாய் போற்றி
78. ஓம் அருளொளி செய்வாய் போற்றி
79. ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி
80. ஓம் கனவிலே வருவாய் போற்றி
81. ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி
82. ஓம் மக்கலைக் காப்பாய் போற்றி
83. ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி
84. ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி
85. ஓம் இதயமாம் வீணை போற்றி
86. ஓம் உருக்கமே ஒளியே போற்றி
87. ஓம் உள்ளுறை விருந்தே போற்றி
88. ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி
89. ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி
90. ஓம் நாதமே நலமே போற்றி
91. ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி
92. ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி
93. ஓம் உயர்நெறி தருவாய் போற்றி
94. ஓம் நித்தமும் காப்பாய் போற்றி
95. ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி
96. ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி
97. ஓம் பாரமே உனகே போற்றி
98. ஓம் வித்தையே விளக்கே போற்றி
99. ஓம் விந்தையே தாயே போற்றி
100.ஓம் ஏழையர் அன்னை போற்றி
101.ஓம் ஏங்குவோர் துணையே போற்றி
102.ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி
103.ஓம் கண்மணி ஆனாய் போற்றி
104.ஓம் சத்தியப் பொருளே போற்றி
105.ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி
106.ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி
107.ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி
108.ஓம் ஆறாதார நிலையே போற்றி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
இந்தப் போற்றித் துதியை அன்றாடம் காலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் அம்பாளின் படத்திற்கு தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பித்து, துதித்து ஜெபிப்பதன் மூலம் தெய்வீக ஆற்றல் பெருகும். ஆன்மீக மேம்பாடு கிட்டும். வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிட்டும்.
