மிதுன ராசி அன்பர்களே!
ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், மிதுன ராசிக்கு 7 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். சுப கிரகமான குருவிற்கு, இது, சாதகமான இடம் ஆகும். இந்த வீட்டிலிருந்து இவர், லாபம், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றைக் குறிக்கும் 11 ஆம் வீட்டையும்; ஒருவரது திறன், குணாதிசயம், வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் 1 ஆம் வீட்டையும்; தொடர்புகள், தைரியம், கடவுள் நம்பிக்கை, இளைய சகோதர சகோதரிகள், அண்டை அயலார்கள் போன்றவற்றைக் குறிக்கும் 3 ஆம் வீட்டையும், பார்க்கிறார்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
இந்தப் பெயர்ச்சி, திருமண வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடும்; வாழ்க்கைத் துணையுடன் ஓரளவு நல்ல உறவை ஏற்படுத்தக்கூடும். திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்; எனினும் இதற்காக கடின முயற்சி செய்வது அவசியம். கணவன், மனைவி இடையே இணக்கமான உறவு நிலவும்; எனினும் கவனமுடன் செயல்பட்டால், குடும்ப உறவுகள் மேலும் இனிமையாக மாறும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள், பெரும்பாலும் வெற்றி பெறும். தொழிலில் தடைகளும், தாமதங்களும் ஏற்படக்கூடும்; ஆயினும் பொதுவாக, தொழில் வெற்றிகரமாகவே அமையும். தொழில் கூட்டாளிகளுடன் உறவும் ஓரளவு நன்றாகவே இருக்கும். இந்தக் காலத்தில், நீங்கள் மனமகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளிலும், வாத விவாதங்களிலும் ஈடுபடக்கூடும். நன்கு பகுத்தறிந்து பார்க்கும் திறனும் ஏற்படும். ஆண்களுக்கு, பெண்களிடம் ஈர்ப்பு ஏற்படும். பெரிய மனிதர்கள் சிலரின் தொடர்பும் ஏற்படலாம். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி - வேலை மற்றும் தொழில்
வேலையைப் பொறுத்தவரை, உடன் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்களுடன் நீங்கள், நல்ல தொடர்பில் இருப்பீர்கள்; தைரியத்துடனும் செயலாற்றுவீர்கள். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில் உங்கள் பணி நன்றாகவே இருக்கும்; ஆனால், பின்னர் அவற்றில் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டு, உங்களுக்கு இன்னல் விளைவிக்கலாம். தொழிலும், கூட்டாளிகளுடனான உறவும் சற்றே மந்தமாக இருந்தாலும், காலம் செல்லச் செல்ல, அவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம் ராசி - நிதி
உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். குரு பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியை விட, முற்பகுதியில் உங்கள் பொருளாதாரம் சிறந்து விளங்கும். இந்த பிற்பகுதி நேரத்தில், உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான பணம் வைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகளையும் இந்த நேரத்தில் குறைத்துக் கொள்வது நல்லது. இதனால், பிற்பகுதி நேரத்தில், நிதி நெருக்கடிகளை தவிர்த்து விட முடியும்.
மிதுனம் ராசி - குடும்பம்
ஆரம்பத்தில், குடும்ப சூழ்நிலை சுமாராக இருக்கும்; ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இது மோசமடையக் கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டு, இதனால் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவக்கூடும். ஆகவே, குடும்ப நன்மைக்காக அதிக நேரத்தையும், பொருளையும் ஒதுக்குவது நல்லது. இதனால் குடும்ப உறவுகள் சீராகும்; அங்கு அமைதி நிலவும் வாய்ப்பு ஏற்படும். இதனால், பிரச்சினைகள் பெரிதாகாமல் தடுத்து, அவற்றை எளிதாகக் கையாளலாம்.
மிதுனம் ராசி - கல்வி
மாணவர்கள் இப்பொழுது கடினமாக உழைத்து, விடா முயற்சியுடன் கல்வி கற்க வேண்டும். தடைகள், தாமதங்கள் காரணமாக, கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படலாம். எனினும் பொறுமையாக செயல்பட்டால், குறிக்கோள்களை அடையலாம். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையுடன், தியானம், ஆன்மிகப் பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடுவது, படிப்பில் கவனம் செலுத்த உதவும். பொதுவாக, முயன்றால் கல்வியில் முன்னேற்றம் காணக்கூடிய காலம் இது.
மிதுனம் ராசி - காதல் மற்றும் திருமணம்
பொதுவாக, மணவாழ்க்கை நன்றாகவே இருக்கும்; ஆனால், நீங்கள் முயன்றால், இதை மேலும் மகிழ்ச்சியுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். தம்பதிகளிடையே சில பிரச்சினைகள் எழுந்தாலும், பொதுவாக திருமண பந்தம் திருப்தியாகவே அமையும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில், துணையிடம் காதல் உணர்வை அதிகம் வெளிப்படுத்துவீர்கள்; ஆனால், இந்த உணர்வு தொடர்ந்து, அதே தீவிரத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். திருமணத்திற்குத் தகுந்த துணை தேடிக் கொண்டிருப்பவர்கள், எழும் தடைகளை எல்லாம் விலக்கி, தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மிதுனம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவை கடுமையானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே நோய், நொடிகளால் சற்றே பாதிக்கப்பட்டாலும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சைகள் மூலம், அவற்றை குணப்படுத்தி விடலாம். எனினும், சாதாரண கோளாறுகளையும் உடனடியாக கவனித்து, அவை பெரும் நோய்களாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எளிய பரிகாரங்கள்
- ‘ஓம் குருவே நமஹ’ என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபிக்கவும்
- விஷ்ணு பகவானையும், மகேஸ்வரனான சிவபெருமானையும் வழிபடவும்
- இனிப்பு, வெல்லம், தேன் ஆகியவை தானம் செய்யவும்
- பயணத்தின் பொழுது, மஞ்சள் நிறக் கைக்குட்டையை எடுத்துச் செல்லவும்
Leave a Reply