கடக ராசி அன்பர்களே!
ஆன்மீகம், அதிகாரம் என இரண்டையும் தரும், சுப கிரகமான குரு பகவான், நவம்பர் 5, 2019 செவ்வாய்க்கிழமை அன்று, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், கடக ராசிக்கு 6 ஆம் வீட்டில் குரு பிரவேசிக்கிறார். சுப கிரகமான குருவிற்கு, இது, சாதகமான இடம் அல்ல. இந்த வீட்டிலிருந்து இவர், வேலை, நடவடிக்கைகள், கௌரவம், சமுதாய அந்தஸ்து, வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றைக் குறிக்கும் 10 ஆம் வீட்டையும்; மோக்ஷம், கடன், நஷ்டம், செலவு, ரகசியம், வெளிநாட்டில் குடியேறுவது, முதலீடு, தான தர்மம் ஆகியவற்றைக் குறிக்கும் 12 ஆம் வீட்டையும்; செல்வம், குடும்பம், குரல் மற்றும் பேச்சு, சிந்தனைகள், ஆரம்பக் கல்வி, உடமைகள் ஆகியவற்றைக் குறிக்கும் 2 ஆம் வீட்டையும்; பார்க்கிறார்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
2019 குரு பெயர்ச்சி பற்றிய முழு விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த பெயர்ச்சி, உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான பலன்களை அளிக்கும். குறிப்பாக, ஆரம்ப காலம், உங்களை வாட்டும் நோய்களிலிருந்து குணமடைவதற்கும், உடல்நிலை பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கும், மிகவும் சாதகமான ஒன்றாகும். இந்த நேரத்தில், சில நோய், நொடிகள் தாமாகவே கூட மறைந்து விடக் கூடும். எதிரிகள், பகைமை, கடன் போன்ற தொல்லைகள் கூட, விலகிப் போய்விடும். கணவன் மனைவியிடையே நிலவும் மனஸ்தாபங்களுக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால், இது போல, உடல்நிலை, போட்டி, பொறாமை, கடன் போன்றவை தொடர்பான நன்மைகள் எல்லாம் விளைவது, இந்தப் பெயர்ச்சி காலத்தின் துவக்கத்தில் மட்டும் தான்.
பின்னர், ஆரோக்கியம், பகைமை, கடன் போன்றவற்றில் நிலைமை தலைகீழாக மாறி, உங்களுக்குப் பல துன்பங்கள் விளைவிக்கக்கூடும். இப்பொழுது, செலவுகளை கட்டுக்குள் வைப்பதும் மிக அவசியம், இல்லாவிட்டால் நீங்கள் கடும் பணப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பணித் துறையும், பின்னடைவுகளை சந்திக்கும், தேவையற்ற செலவுகள், முதலீடுகள் காரணமாகவும், அதிக தான, தர்மங்கள் செய்வதன் விளைவாகவும், உங்கள் சேமிப்புகளும் குறைந்து போக வாய்ப்புள்ளது. ஆகவே, பிறருக்குக் கொடுப்பது போன்ற தர்ம காரியங்களுக்குக் கூட, இந்த காலம் ஏற்றது அல்ல. எதிர்காலத்திற்காக சிறிதாவது சேமிக்க வேண்டிய நேரம் இது.
கடகம் ராசி - வேலை மற்றும் தொழில்
இந்த குரு பெயர்ச்சி காலம், குறிப்பாக அதன் பிற்பகுதி, பணியில் இருப்பவர்களுக்குச் சாதகமானதாக இருக்காது. எனவே, வேலை, தொழில் தொடர்பான உங்கள் பணிகள், எதிர்பார்த்த பலன் தராது. சூழ்நிலையும் மகிழ்ச்சி தராமல் போகலாம்; வேலையினால் மன அழுத்தமும் உண்டாகலாம். உடன் பணியாற்றுபவர்களிடமிருந்து, ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்க முடியாது. இப்பொழுது ஏற்படும் வேலை, இட மாற்றங்களும் கூட நன்மை தராது. தொழில் கூட்டாளிகளிடையே சுமுக உறவும் இருக்காது. ஆகவே தொழிலில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள், பெயர்ச்சி காலத்தின் முற்பகுதியை பயன்படுத்திக் கொள்வது நல்லது. குறிப்பாக, வீடு, மனை வாங்கல், விற்றல் தொழில் இப்பொழுது நன்கு நடைபெறாது; எனவே அதில் ஈடுபட்டிருப்பவர்கள், மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
கடகம் ராசி - நிதி
இந்தக் காலகட்டத்தில், அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது; அது சுமாராகத்தான் இருக்கும். ஆரம்ப காலத்தில், நீங்கள் சில சுப செலவுகள் செய்வீர்கள். வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் உள்ளது. பிற்பகுதியில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
பரிகாரம்: கனகதாரா லக்ஷ்மி அபிஷேகம் – 3 வெள்ளிக்கிழமைகளில்
https://www.astroved.com/specific-purpose-pooja-wealth-lakshmi-kanakadhara-lakshmi-abhishekam-for-3-fridays-P448.aspx
கடகம் ராசி - குடும்பம்
மனைவி, குழந்தைகள், பிற உறவினர்களுடனான உறவு, சுமாராகவே இருக்கும். பெயர்ச்சியின் பிற்பகுதியில், தந்தையுடன் சுமுக உறவைப் பராமரிப்பதில், கவனம் செலுத்துங்கள். அவருக்கு உரிய மரியாதை அளித்து, அவரது ஆசிகளை வேண்டிப் பெறுவது நல்லது. உறவினர்களுடனும், அண்டை அயலார்களுடனும் சுமுகமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள். .
கடகம் ராசி - கல்வி
இந்த நேரத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி, பாடங்களை நன்கு படிக்கச் செய்ய வேண்டும். பட்டப்படிப்பு, கலாசாலை, பல்கலைக்கழகப் படிப்பு போன்றவற்றிக்கு, இந்த பெயர்ச்சியின் பிற்பகுதி சாதகமானதாக இருக்காது. எனவே மாணவர்கள், இதற்கான முன்முயற்சிகள் அனைத்தையும், இந்த காலத்தின் துவக்கத்திலேயே செய்து கொள்வது அவசியம். அயல்நாடுகளில் கல்வி கற்க விரும்புபவர்களுக்கும் இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்காது. எனவே, இதற்காக அவர்கள் கடும் முயற்சிகளில் இறங்க வேண்டியிருக்கும்.
பரிகாரம்: தக்ஷிணாமூர்த்தி யந்திரம்
கடகம் ராசி - காதல் மற்றும் திருமணம்
இந்த குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலம், கல்யாணத்துக்கு வரன் தேட ஏற்றது எனக் கூறலாம். எனவே, திருமண முயற்சிகளை இந்த நேரத்தில் துவக்குவது நல்லது. துணை, துணைவருடனான உறவு சாதாரணமாக இருக்கும். எனவே விசேஷ கவனம் செலுத்தி, கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, உறவை மேம்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது.
ஆரோக்கியம்
நோய்களை குணப்படுத்துவதற்கும், ஆரோக்கியக் குறைபாடுகளை தீர்ப்பதற்கும், இந்த பெயர்ச்சியின் ஆரம்ப காலம் மிகச் சிறந்தாக இருக்கும். குறிப்பாக, தலை, மார்பு, இடுப்பு, மனம் தொடர்பான வியாதிகள் நன்கு குணமடையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பிற்காலம், இது போன்ற நன்மைகளை அளிப்பதாக இருக்காது. ஆகவே, குரு பெயர்ச்சியின் பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் முக்கிய கவனம் செலுத்துவது நல்லது.
எளிய பரிகாரங்கள்
- ‘ஓம் ஜகத்குரவே நமஹ’ என்ற மந்திரத்தை, வியாழக்கிழமை காலையில், குளித்துவிட்டு 108 முறை ஜபிக்கவும்
- புரோகிதர்கள், அந்தணர்கள், ஆன்மீகப் பெரியோர் ஆகியவர்களுக்கு தானம் செய்யவும்
- பசுக்கள், பறவைகளுக்கு வாழைப்பழம், மஞ்சள் நிற இனிப்புகள் அளிக்கவும்
- ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவும்
- தயிர் தானம் செய்யவும்
- வாழைப்பழங்கள் உண்பதையோ, அவற்றை நீங்கள் தூங்கும் இடத்தில் வைப்பதையோ தவிர்த்து விடவும். இதனால் குரு பகவானின் எதிர்மறை தாக்கத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்
Leave a Reply