கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 | Guru Peyarchi Palangal Kadagam 2023

Saturn Retrogrades in Aquarius for 140 Days. Time to Refocus, Strategize & Progress towards Your Life Goals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 | Guru Peyarchi Palangal Kadagam 2023

March 28, 2023 | Total Views : 214
Zoom In Zoom Out Print

கடக ராசி குரு பெயர்ச்சி 2023 பொதுப்பலன்கள்:

கடக  ராசி அன்பர்களே!  குரு உங்கள்  ராசிக்கு பத்தாம்   வீட்டில் பெயர்ச்சி ஆகிறார்.  இந்த பெயர்ச்சி  ஏப்ரல் 22, 2023 அன்று தொடங்கும், மேலும் இது மே 1, 2024 வரை நீடிக்கும்.  இந்த பெயர்ச்சி  12 மாதங்களுக்கு இருக்கும். குரு  உங்கள் 6 மற்றும் 9 ஆம் வீடுகளை ஆட்சி செய்கிறார்.

குரு உங்கள் ராசி அதிபதியுடன் நல்லுறவைப் பேனுகிறார். இவர் 6ம் வீடு மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். எனவே, இந்த பெயர்ச்சி நட்பு வீட்டில் நடைபெறுகிறது. 10ம் வீடு ஒருவரின் தொழிலுடன் தொடர்புடையது. இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் இலக்குகளை நீங்கள் அமைக்கலாம். ஆனால் குருவின் பார்வை 2, 4 மற்றும் 6 ஆம் வீடுகளில் விழுவதால் நீங்கள் சில சவால்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். குருவை வழிபடுவதன் மூலமும், ஆன்மீக மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதன் மூலமும், நீங்கள் நேர்மறையை ஈர்க்கலாம் மற்றும் எதிர்மறை விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் முன்னோர்களின் ஆசிகள் உங்களுக்கு பலன் தரும் என்பதால், தவறாமல் வழிபடுவது நல்லது.

உத்தியோகம்:

வெளிநாடு தொடர்பான பணி மாறுதல் வேலைகளில் வெற்றியும் ஆதாயமும் கூடும். ராகுவுடன் குரு இணைவதால் நல்ல வாய்ப்புகள் தேடி வெளிநாடு செல்லலாம். இந்த இணைப்பு அக்டோபர் 2023 வரை நீடிக்கும் மற்றும் உங்கள் உத்தியோக வாழ்க்கையில் சில தடைகளை ஏற்படுத்தலாம். உங்கள் 8வது வீட்டிற்கு சனியின் பெயர்ச்சி என்பது உங்கள் திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என்பதாகும். இது கவலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். உங்கள் உத்தியோக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். பணத்துடன் தொடர்புடைய உங்கள் 2 ஆம் வீட்டில் குருவின் 5 ஆம் பார்வையால் சம்பள உயர்வு சாத்தியமாகும்.

காதல் / குடும்ப உறவு :

உங்கள் தந்தை ஆதரவு வழங்கினாலும், அது தாமதமாகலாம். பொறுமையை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால், உங்கள் துணையுடன் நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அல்லது, நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு மூதாதையர் சொத்துக்கள் வரலாம்.

தனிமையில் இருப்பவர்கள் சரியான வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். திருமணமான தம்பதிகள் மன அமைதியைக் கெடுக்கும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகள் அதிக பற்றுதலைக் காட்டாமல் இருக்கலாம். சில கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். இருப்பினும், குடும்பத்தைக் குறிக்கும் வீட்டில் குருவின் பார்வை நிவாரணம் அளிக்கும்.

நிதிநிலை :-

உங்கள் பணத்தைக் குறிக்கும் 2 ஆம் வீட்டில் குருவின் பார்வை உங்கள் முதலீடுகளிலிருந்து நல்ல லாபத்தைக் கொண்டுவரும். இந்த நேரத்தில் பணவரவு நன்றாக இருக்கும். சிலர் கடன் வாங்கலாம். பணத்தை நன்மையான நோக்கங்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கவும். குருவின் 9 ஆம் பார்வை எதிரிகளுடன் தொடர்புடைய 6 ஆம் வீட்டில் விழுவதால், முதலீடுகளைச் செய்வதற்கு முன், கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள். எல்லாமே சட்டப்பூர்வமானதா மற்றும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

மாணவர்கள் :-

உயர்கல்வி மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம் மற்றும் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெறலாம். தடைகள் இருந்தாலும் கல்வியில் கவனம் செலுத்தலாம். சிலர் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் எதிர்காலத்திற்கு சாதகமாக அமையும்.

ஆரோக்கியம் :-

துரித உணவு வகைகளைத் தவிர்க்கவும். சோர்வைத் தவிர்க்க வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதிப்படுத்தவும். குருவின் பார்வை நோயைக் குறிக்கும் வீட்டில் விழுகிறது, எனவே எந்தவொரு உடல்நலப் பிரச்சனையும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். நாள்பட்ட நோய் மோசமடையலாம், ஆனால் ஒரு நல்ல உணவுப் பழக்கம் உதவும். உடற்தகுதியை மேம்படுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்துங்கள். அதிக பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள், அது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பரிகாரங்கள் :-

1. வியாழக்கிழமைகளில் மது மற்றும் மாமிசம் உண்ணாதீர்கள்

2. விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வணங்குங்கள். அன்றாட வேலைகளைத் தொடங்கும் முன்பு தினமும் ஹனுமான் சாலீஸாவை கேளுங்கள் அல்லது பாராயணம் செய்யுங்கள்

3. பிரார்ததனைக் கூடங்கள் மற்றும் ஆலயங்களுக்கு சேவை செய்யுங்கள்

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos