மகரம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! சாதகம், சாதகமற்றது என்ற இருவகைப் பலன்களையும் உங்களுக்கு அளிக்கும் மாதமாக இது இருக்கக் கூடும். உங்கள் மனதில் ஏதோ ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கலாம். அடிக்கடி தலைவலியும், மனக் குழப்பங்களும் கூட, சிலருக்கு ஏற்படலாம். இளைய உடன் பிறப்புகள் உங்களுக்கு விரயங்களை ஏற்படுத்தலாம். அவர்களுடன் மனகசப்பும் ஏற்படலாம். தாய் மற்றும் உறவினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து விலகலாம். உங்கள் உடல்நிலையிலும் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தாயின் உடல்நிலையிலும் கவனம் தேவை. தொழில் துறையிலும் சிறிது கவனத்துடன் செயல்படவும். இருந்தாலும், அதில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுமுக உறவு நிலவும். குழந்தைகளுக்கும் நலன் விளையும். தெய்வீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். சிலர், வெளியூர்களுக்கு, ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். கணவன், மனைவி உறவும் சுமுகமாக இருக்கும். இதனால் ஏற்படும் குடும்பச் சூழல், உங்களுக்கு மன நிறைவு தரும். ஆயினும், சில குடும்ப விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
நிதி:
உங்கள் நிதி நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். உங்கள் சேமிப்பு, உங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளப் போதுமானதாக இருக்கும். ஆனால், அன்றாடத் தேவைகளால் வீண் செலவு ஏற்படலாம். எனவே, பணம் தொடர்பான எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பாகவும், பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
வேலை:
வேலையைப் பொறுத்த வரை, இது திருப்திகரமான காலமாக இருக்கும். அலுவலகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் முறையான கவனம் செலுத்தி, அவற்றை முடிக்க முயலுங்கள். இப்பொழுது சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
தொழில்:
உங்கள் தொழில் சுமாராக நடைபெறும். இந்த நேரத்தில், வியாபார நடவடிக்கைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பீர்கள். இது, தொழில் ரீதியாகப் பணம் ஈட்ட, உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில், இந்த விஷயத்தில் நீங்கள் சற்றே அதிருப்தி அடையக்கூடும்.
தொழில் வல்லுநர்கள்:
மகர ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம் தங்கள் பணியில் கவனமாக இருப்பது அவசியம். அதிக பணிச்சுமை காரணமாக, கூடுதல் நேரம் உழைத்து, உங்கள் வேலையை நீங்கள் முடிக்க வேண்டி வரும். இது, தொழில் தொடர்பான அனைத்துப் பணிகளையும், நீங்கள் கவனமாகவும் முறையாகவும் செய்து முடிக்க உதவும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் அதிக அளவில் உட்கொள்வது, உடல் வலிமை பெற உதவும். இதன் காரணமாக, ஏதேனும் சிறிய கோளாறுகள் ஏற்பட்டாலும், உங்கள் எதிர்ப்பு சக்தி அவற்றைச் சரி செய்து விடும்.
மாணவர்கள்:
படிக்கும் பொழுது தேவையற்ற எண்ணங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இதனால், மாணவர்களாகிய உங்கள் கவனம் திசை திரும்புவதற்கான சாத்தியம் உள்ளது. இது உங்கள் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும். எனினும், படிப்பில் உங்களது கடின முயற்சி காரணமாக, நீங்கள் நல்ல நிலையை அடைய முடியும்.
சுப தினங்கள் : 13,14,22,23,26,27
அசுப தினங்கள் : 1,2,15,16,17,20,21,28,29
பரிகாரம்::
ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு, ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
ஏழைகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல். பறவைகளுக்கு உணவு அளித்தல்.
Leave a Reply