கிரகங்கள் நம்முடைய வாழ்க்கையை ஆளுகின்றன! வேத ஜோதிடம் இந்தக் கிரகங்களை தெய்வங்களாகக் கருதுவதோடு, உங்கள் ஜாதகத்தின் மூலம் நீங்கள் பிறந்த சமயத்தில் இந்த கிரகங்கள் அமையும் இடங்களைப் பொருத்து அவை உங்கள் வாழ்க்கையில் எவ்விதமான தாகத்தை ஏற்படுத்துகின்றன என்பதனை விவரிக்கின்றது. எனவே ஒரு ஜாதகம் என்பது உங்கள் வாழ்வின் நிகழ்வுகளுக்கான ஒரு செயல் திட்டமாகச் செயல்படுகிறது. கிரகங்களின் நடப்பு பெயர்ச்சி மற்றும் அவை உங்கள் ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடங்கள் ஆகிய இரண்டும் இணைந்து உங்கள் வாழ்வில் மிகப் பெரிய அளவில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
நீங்கள் பிறந்த நேரத்திலோ அல்லது கிரகங்களின் பெயர்ச்சி நேரத்திலோ உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசமாகவோ அல்லது வலுவற்று இருந்தால் அந்தக் கிரகத்தினால் பாதிப்பு ஏற்படும். இதன் விளைவாக தோஷங்கள் மற்றும் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். எனவே அந்த குறிப்பிட்ட கிரகாதிபதியை சாந்திபடுத்தி அவற்றின் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்படும் தோஷங்களை நீக்கிக் கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். கிரகங்களை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள கிரகசாந்தி செய்ய வேண்டியது அவசியம்.
உங்கள் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் காணப்படும் கிரகங்களுக்கு ப்ரீத்தி செய்து அமைதிப்படுத்தி உங்கள் வாழ்வில் துன்பங்களை வென்று அவைகளின் ஆசி பெறவும் உங்களுக்கு சரியான பாதை காட்டவும் ஆஸ்ட்ரோவேட் கிரகங்களுக்கான ஹோமம் நடத்துகின்றது. உங்கள் வாழ்வில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறும் வகையில் கிரகங்களின் ஆசியை பெற உங்களுக்கு சாதகமற்ற கிரகங்களுக்கு எங்களது புரோகிதர்கள் புனித மந்திரங்களை ஓதி ஹோமம் செய்து அவைகளை ஆராதனை செய்து சாந்திபடுத்துவார்கள்.
சூரிய ஹோமம் கிரகங்களுக்கு எல்லாம் அரசனாகவும் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றலாகவும் உள்ள சூரிய பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. சூரிய பகவானுக்காக செய்யப்படும் இந்த ஹோமத்தினால் வாழ்க்கையில் உங்களை வாட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லவும், சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் வழி பிறக்கிறது. எனவே, சூரிய ஹோமத்தை உங்கள் வெற்றிக்கான படிக்கட்டு எனலாம். உங்கள் வாழ்க்கை வளம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது.
சந்திர ஹோமம் சந்திர பகவானின் ஆசீர்வாதங்களைப் பெற உதவுகிறது. சந்திரன் உங்களுடைய மனதையும் உணர்ச்சிகளையும் ஆட்சி செய்து வெற்றியைத் தருபவர். கிரகங்களின் ராணி என்று கருதப்படுபவர். ஒருவரது உணர்ச்சி, மனநிலை போன்றவற்றைத் தீர்மானித்து, சில நேரங்களில் அசாதாரணமான சிந்தனை, நடத்தை போன்றவற்றுக்கு வழி வகுக்கிறார். அவரைக் குறித்த இந்த சந்திர ஹோமத்தை நடத்துவதன் மூலம், ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் அனுகூலமற்ற நிலையால் காணப்படும் தோஷங்களை நிவர்த்தி செய்ய இயலும். உங்கள் தாயுடன் உள்ள உறவை மேம்படுத்தும்.
செவ்வாய் என்றழைக்கப்படும் அங்காரகன் சிகப்பு கிரகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமடைந்திருந்தாலும் அனுகூலமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், (கிரெடிட்கார்டு, மருத்துவம், அடமானம்) நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். செவ்வாய் உச்சத்தில் இருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். செவ்வாய் ஹோமம் அல்லது அங்காரக ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நலன் உண்டாகும்.
புதன் ஹோமம் மூலம் புத பகவானின் ஆசீர்வாதங்கள் பெறப்படுகிறது. உங்கள் மனம், உங்கள் தொடர்பு திறன், நகைச்சுவை உணர்வு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை புதன் கிரகம் ஆளுகின்றது. இதன் மூலம், நல்ல புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் கிடைக்கப்பெறும். எழுத்து, ஓவியம், தத்துவம் மற்றும் கற்றல் திறன்கள், நம் வசப்படும். உங்கள் பேச்சுத் திறனை வளர்ப்பதோடு நல் வாழ்வையும் சகல சௌபாக்கியங்களையும் இந்த ஹோமம் உறுதி செய்யும்.
குரு ஹோமம் குரு பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. குரு பகவான் புத்திரகாரகர் மற்றும் தனகாரகர் ஆவார். அதாவது செல்வத்தைக் குறிப்பவர். மிகப் பெரிய கிரகமாகத் திகழும் குரு, உயர்ந்த குண நலன்கள், நேர்மை, நம்பிக்கை, மற்றும் விருப்பத்தையும் குறிக்கிறார். இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம் குரு ஹோமம் ஆகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க, கற்பனை சக்தி அதிகரிக்க, அறிவுத்திறன் பெற மற்றும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க இந்த குரு ஹோமம் செய்யப்படுகிறது.
சுக்கிரன் ஹோமம், சுக்கிர பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் சுக்கிரனின் கருணைப் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப இயலும். உங்களுக்குள் செயலிழந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர இயலும். உங்கள் படைப்பாற்றலை சிறப்பாகப் பயன்படுத்தி, பெயரும், புகழும் அடைய இயலும். மேலும், நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி, வாரிசு, சொத்து மற்றும் நல்ல கல்வியை சுக்கிர பகவான் வழங்குகிறார். இந்த ஹோமத்தின் மூலம் நீங்கள் இவற்றையும் பெற்று, வாழ்க்கையில் மேன்மையுறலாம்.
சனி ஹோமம் சனி பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. சனி என்பது கர்மாவைக் குறிக்கும் கிரகம் ஆகும. இந்த ஹோமத்தை செய்து சனி பகவானை திருப்திப் படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். எதிர்மறைத் தாக்கங்களை விலக்கி, நன்மை தரும் முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் சனி பகவானை இவ்வாறு வழிபடுவதனால், மேலும் சிறந்த பலன்களை அடையலாம்.
ராகு ஹோமம் ராகு பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த விசேஷமான ஹோமத்தைச் செய்வதன் மூலம், உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளை அடையவும், வாழ்வின் வளங்களைப் பெறவும் முடியும். நீங்கள் விரும்பினால், மிகத் தீவிரமான எதிரியுடன் கூட, நீங்கள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். இந்த ஹோமத்தினால், உங்களிடம் நற்பண்புகள் பல தோன்றி, அதன் மூலம் உறுதியான இலட்சியத்துடன், நீங்கள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ முடியும்.
கேது ஹோமம் கேது பகவானின் ஆசீர்வாதங்கள் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இரண்டு நிழல் கிரகங்களில் ஒன்றான கேது உங்களுக்கு ஆன்மீக ஞானத்தை தருவதோடு உங்களுக்குள் மறைந்து கிடக்கும் நேர்மறையான நல்ல பண்புகளை வெளியே கொண்டு வருவதற்கு உதவும் கிரகம் ஆகும். மேலும் நீங்கள் சாதனைகளை படைக்கவும் உதவி செய்யும் கிரகம் கேது ஆகும். கேது ஹோமத்தைச் செய்து சகல சௌபாக்கியங்களையும் சிறந்த ஆரோக்கியத்தையும் பெற்று பொருளாதார அதிர்ஷ்டங்களையும் பெறுங்கள்.
நவக்கிரக ஹோமம் - 'நவ' என்றால் ஒன்பது மற்றும் 'கிரக' என்பது கோள்களை குறிக்கும். உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது கிரகங்களே. உங்கள் பிறந்த ஜாதகத்தில் அவற்றின் அமைவைப் பொறுத்து உங்களுடைய கர்மாவை தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் பெறும் வெற்றி அல்லது தோல்வியின் அளவையும் அறிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களையும் வசப்படுத்தும் வகையில் இந்தச் சிறப்பு ஹோமத்தைச் செய்து துயரங்களிலிருந்து மீண்டு வாருங்கள்.
மேலும் படிக்க ...
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out