நவம் என்பது, எண் ஒன்பதைக் குறிக்கும். கிரகம் என்றால் கோள் எனப் பொருள். வேத ஜோதிடப்படி, நமது வாழ்வில் 9 கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் இந்த நவகிரகங்களின் நிலைகள் தான், அவருடைய வாழ்க்கைப் பாதையையும் ஏறத்தாழ்வுகளையும், சுக துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன. நம்மை ஆளும் இந்த 9 கிரகங்களின் ஆசிகளைப் பெற, நவக்கிரக ஹோமம் செய்யப்படுகிறது.
ஒருவரின் கர்ம வினையைப் பொறுத்துத் தான், அவரது ஜாதகத்தில் இந்த 9 கிரகங்கள் அமைந்திருக்கும். சில நேரங்களில், கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். இந்த நவகிரக ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், கிரக தோஷங்கள் அகலும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, கிரகங்களை சாந்திப்படுத்தி, நீங்கள் உங்கள் வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் நீடித்த வெற்றிகள் பெறலாம்.
நவகிரக ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், நமது அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும், ஒன்பது சக்தி வாய்ந்த கிரகங்களின் அனுக்கிரகத்தைப் பெற இயலும். ஹோமத்தின் மூலம் கிடைக்கும் தெய்வீக ஆற்றல்கள், வாழ்வில் சகல நன்மைகளையும் அளிக்க வல்லவை.
கிரகங்கள் அனைத்தும், பலவேறு பலன்களை அளிக்க வல்லவை. அவை
நவகிரக ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு கிரகமும் அதற்குரிய முறையில், தகுந்த மந்திரங்களுடன் ஆராதிக்கப்படும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் உங்கள் தினசரி வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, மன அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் கிடைக்கப்பெறுவார்கள்.
9 கிரகங்களின் அனுக்கிரகம் கிடைக்கும்
துன்பங்களை எதிர்கொள்ள இயலும்
தடைகளை அகற்ற முடியும்
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண இயலும்
அதிர்ஷ்டமும், நன்மையும் பெற இயலும்
வெற்றிகரமான வாழ்க்கை வாழ இயலும்
மன அழுத்தத்தை சமாளிக்க முடியும்
உங்கள் செயல்திறனை நிரூபிக்க இயலும்
வாழ்க்கையில் வளர்ச்சி பெற இயலும்
வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி காண முடியும்
கல்வியில் வெற்றி, செழிப்பு, நீண்ட ஆயுள் அடைய முடியும்
வியாபாரிகள் வளமாக வாழ இயலும்
நம ஆதித்யாய சோமாய மங்களாய புதாய ச
குரு சுக்ர சனிப்யஷ்ச் ச
ராஹவே கேதவே நமஹ