கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். அவர் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதுடன், பாதுகாவலராகவும் இருக்கிறார். திருஷ்டி, சாபம், பில்லி சூனியம், பொறாமை மற்றும் பிற தீய விளைவுகளிலிருந்து பாதுகாத்து அமைதியான வாழ்க்கைக்கு அருள் புரிகிறார்.கருப்பசாமியின் அருள் பெறவும் வாழ்க்கையில் பாதுகாப்பு பெறவும் கருப்பசாமி பரிகார ஹோமங்களை நாங்கள் நடத்தித் தருகிறோம்.
தனிப்பட்ட ஹோமம் / கூட்டு ஹோமம் மற்றும் பூஜை, அன்னதானம் இவை யாவும் சேர்ந்த தொகுப்பாக பரிகார சேவைகள் நடத்தி தரப்படுகின்றது. மேலும் ஹோமங்கள் தனியாகவும், அன்னதானம் தனியாகவும் கொண்ட சேவைகளும் உள்ளன.
கருப்புசாமி என்பவர், பெரும் ஞானமும், பலமும் நிறைந்த, சக்தி வாய்ந்த கடவுளாவார். நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையைக் தரக்கூடிய இவர், மக்களைக் காப்பாற்றும் கடவுளாக, கிராமப்புற மக்களால் மிக்க பக்தியுடன் வழிபடப்படுகிறார். கால பைரவர், நரசிம்மர், வீரபத்திரர், ருத்ரர் போன்ற தெய்வங்களின் இணைந்த சக்தியாக விளங்கும் இவர், பக்தர்களின் துன்பங்களைத் துடைத்து, அவர்கள் குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பவர் ஆவார்.
மேலும் படிக்க ...
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out