வாழ்க்கைப் பாதை என்பது வெறும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது அல்ல. அதில் முட்களும் இருக்கும். இந்த சம்சாரம் என்னும் சாகரம் கடப்பதற்கு அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சினைகள் மூலம் அறியலாம். வாழ்க்கை சுமுகமாக செல்லும் போது யாருடைய உதவியோ, ஆலோசனையோ அல்லது பரிகாரமோ தேவைப்படுவது இல்லை. ஆனால் பிரச்சினை என்று வரும் போது நம்மால் அதனை தனியாக எதிர் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை. நமக்கு பாதகம் ஏற்படும் வகையில் பிறர் நடந்து கொள்ளும் போது அதன் நினைவுகளே சுற்றிச் சுற்றி வந்து நம் மனதை அரிக்கும். சில சமயங்களில் மறக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இந்த நிலை தொடரும் போது நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.
இதன் பிரதிபலனாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மோதல்கள், தீராத பிரச்சினைகள், ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பு இது போன்ற நிலை வந்து உறவு நிலை சீர் கெட்டு விடுகிறது. மன நிலையும் சீர் கெட்டு விடுகிறது. இந்த சூழ்நிலையை சிலர் எதிர் கொண்டு எப்படியோ கடந்து விடுகிறார்கள். சுமுகமாக பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் த்யானம் மௌன விரதம் என மேற்கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்கிறார்கள். ஆனால் பலரும் இதில் சிக்கிக் கொண்டு துயரப் படுகிறார்கள்.
எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்தாலும், அதை ஒரு நொடிப் பொழுதில் குறைக்க கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது இதை செய்துதான் பாருங்களேன்.
பிரச்சினை மேல் பிரச்சனைகள் வந்து நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால் இந்த எளிமையான பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். ஒரு தூய்மையான துணியை விரித்து அதன் மீது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு கைகளிலும் ஒரு கைப்பிடி உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் பிரச்சினை மற்றும் பிரச்சினை தரும் நபரை நினைவில் கொள்ளுங்கள். பிறகு கை விரல்களை மடக்கி உங்கள் பிரச்சனை விலக வேண்டும். என்று மனதார நினைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி மூன்று நிமிடம் இப்படி செய்தால் போதும். பிறகு உப்பு கீழே சிந்தாத வகையில் எழுந்து அதனை ஓடும் நீரில் கரைத்து விடுங்கள். வீட்டில் சிங்க் அல்லது வாஷ் பேசினில் குழாயை திறந்து விட்டு உப்பை கரைத்து விடுங்கள். பிறகு கை கால் முகம் கழுவி விட்டு உங்களுடைய வேலையை பார்க்கத் தொடங்குங்கள். இவ்வாறு வாரம் ஒரு முறை நீங்கள் செய்து வந்தால் உங்கள் பிரச்சினை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ இயலும்.
Leave a Reply