பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த இடம் சுக ஸ்தானம் எனப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், ஆறாம் ஸ்தானத்தையும், மற்றும் பத்தாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். ஆறாம் ஸ்தானம் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். பத்தாம் இடம் என்பது ஜீவன ஸ்தானத்தை சுட்டிக் காட்டும்.
அர்த்தாஷ்டம சனி நடக்கின்றதே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். சனி கர்மகாரகன் மற்றும் ஜீவனகாரகன் என்பதால் சனியின் அருளைப் பெற நீங்கள் நீதி தவறாது உங்கள் கடமைகளை ஆற்றினாலே போதுமானது ஆகும். பத்தாம் இடத்தைப் பார்க்கும் சனி பகவான் உங்களுக்கு பல வகையிலும் உறுதுணையாக இருப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வை அளிப்பதுடன் நல்ல தன லாபங்களையும் ஏற்படுத்தித் தருவார். தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான காலமாக இது அமையும். உங்கள் சேமிப்பு உயரும். சொத்து, சுகம் மற்றும் வசதி வாய்ப்புகள் அனைத்தும் உங்களை வந்து சேரும்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
குடும்பம்:
குடும்ப ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உறவைப் பொறுத்தவரை இந்த பெயர்ச்சியின் ஒரு சில மாதங்கள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குடும்பத்தில் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மார்ச் 2020 க்குப் பிறகு இந்தச் சூழ்நிலை மாறும். குடும்பத்தினரிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். துலாம் ராசியினருக்கு சனி யோகாதிபதியாக இருப்பவர். யோகாதிபதியான சனி உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இந்த சுகஸ்தான சஞ்சாரம் கணவன் மனைவிக்கு இடையில் அன்னியோன்யத்தை ஏற்படுத்தித் தரும். நான்காம் இடம் என்பது கல்வி ஸ்தானத்தையும் குறிக்கும் என்பதால் துலா ராசியைச் சார்ந்த குழந்தைகள் கல்வியில் மிகுந்த நாட்டம் கொள்வார். பெற்றோர்களின் உறுதுணை காரணமாக கல்வியில் அவர்கள் மேம்பட்ட நிலை காண இயலும். குடும்பத்தில் உள்ள வயதான அங்கத்தினர்கள் சுமுகமாகப் பழகுவார்கள். முதுமை வயதில் இருக்கும் துலா ராசி ஆண்கள் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்:
- சனிக்கிழமைகளில் சனிஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்ற வேண்டும்.
- தாயார் வயதுடைய பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்யவும்.
உடல்நலம்:
துலாம் ராசி அன்பர்களுக்கு ஒரு சில உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றாலும் இதுவரை இருந்து வந்த உபாதைகள் மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும். சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உடல் நலனில் அக்கறை தேவை. ஈரல் மற்றும் கணையம் பகுதிகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. முறையான உணவு முறை மற்றும் ஓய்வு மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்ளலாம். குழந்தைகள் சுறுசுறுப்பாக இல்லாமல் அவர்களிடம் சிறிது மந்த நிலை காணப்படும். அவர்கள் உணவு முறை மற்றும் தூக்கத்தை சரிவர கடைபிடிக்க வைத்தால் இந்த நிலை சற்று சீராகும். முதுமை வயதில் இருக்கும் ஆண்களாக இருந்தால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களானால் தடுமாற்றம் அல்லது கீழே விழ நேரலாம் எனவே கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்:
- சனிக்கிழமைகளில் பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுப்பதன் மூலம் உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்த வரை துலா ராசி நேயர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும். பொருளாதார ஏற்றமும் மேன்மையும் காணும் காலமாக இது உங்களுக்கு இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். வங்கியிருப்பு உயரும். பணம் சம்பந்தமான துறைகளில் பணி புரிபவர்களுக்கு இந்த பெயர்ச்சி மூலம் சிறந்த லாபமும் அதன் மூலம் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களும் சிறந்த லாபம் காண்பார்கள். மருத்துவத் துறையில் உள்ளவர்களும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத் துறையில் உள்ளவர்கள் இந்தப் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சில சரிவுகளை சந்தித்தாலும் மே 2020 க்கு பிறகு நல்ல லாபம் பெற்று மகிழ்வார்கள்.
பரிகாரங்கள்:
- வியாழக்கிழமைகளில் மஞ்சள் திலகம் இட்டு வர பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம்.
- வெள்ளியினால் ஆன சிறு சதுரத்தை கைப்பைய்யில் வைத்துக்கொள்வது நன்று.
தொழில்:
வேலையில்லாமல் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் துலா ராசி அன்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் காலமாக இந்த பெயர்ச்சி இருக்கும். உங்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். மென் பொருள் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பணி ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். வெளிநாடு சென்று பணி புரிய வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் இந்தப் பெயர்ச்சியினை நல்ல முறையில் பயன்படுத்தி மேன்மைகள் பல அடையலாம். திருமண தகவல் மையம், சமூக வலைதளம் மற்றும் விளம்பரத்துறைகளில் வர்த்தகம் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
- பச்சைப் பயிறை புதன் கிழமைகளில் விஷ்ணு பக்தர்களுக்கு தானமாக கொடுப்பது தொழில் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யும்.
- உழைக்கும் வர்க்கத்தினருக்கு அன்னதானம் வழங்கிட தொழிலில் உயர்ந்த நிலயை அடையலாம்.
படிப்பு:
கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஊக்கமும் உற்சாகமும் தரும் நேரமாக இருக்கும். இதற்கு முன்பு கல்வியில் இருந்த சுணக்கமான நிலை மாறும். மாணவர்களின் கிரகிப்புத் திறன் அதிகரிக்கும். பாடங்களைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மாணவ மாணவியர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைத்துறை மற்றும் அறிவியல் துறையில் மேல் படிப்பு முடித்தவர்கள் ஆராய்ச்சி படிப்பில் சேரும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பரிகாரங்கள்:
- தங்களது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து இரவு மட்டும் உணவு உண்டு வரவும்.
- புதன் கிழமைகளில் ஹயக்ரீவர் சன்னிதியில் பசு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பொது பரிகாரம்
- சந்திரன் ஹோமம் செய்திட நல்வாழ்வு மலர்ந்திடும்
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
Leave a Reply