AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

Viruchigam Rahu Ketu Peyarchi Palangal | விருச்சிகம்ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

May 6, 2020 | Total Views : 1,583
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022:

ராகு கேது பெயர்ச்சி 2020

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். விருச்சிக ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிலும், கேது உங்கள் ராசியிலும், அதாவது உங்கள் ராசிக்கு முதல் வீட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஏழாம் வீடு வாழ்க்கைத் துணை, திருமணம், தொழில், தொழில் கூட்டாளி போன்றவற்றைக் குறிக்கும். முதல் வீடு,  உங்கள் தோற்றம், ஆரோக்கியம், எண்ணங்கள், சிந்தனை, அறிவு ஆகியவற்றைக் குறிக்கும். 

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2020 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
               
விருச்சிக ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான விருச்சிகத்திற்கு ஏழாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால், உங்கள் துணையுடனான உறவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்தக் காலகட்டத்தில், உங்கள் இருவருக்கும் இடையே சிறு பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. ஆனால் இவை பெரிதாகாமல், நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே எந்தக் காரணத்திற்காகவும் உங்கள் துணை அல்லது துணைவருடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். இதற்கு பதிலாக, நீங்கள் அவரிடம் கொண்டுள்ள அன்பையும், அக்கறையையும், இந்த நேரத்தில் தாராளமாக வெளிப்படுத்துங்கள். தவிர, இப்பொழுது உங்கள் தொழில் திடீரென்று மேம்பட்டு, உச்ச நிலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது ஆனால், இது போலவே, அது திடீரென இறங்கி விடவும் வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை நீங்கள் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் வணிகப் பரிவர்த்தனைகள் குறித்தும் கவனம் தேவை. எனவே தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில் பரிவர்த்தனைகள் அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொதுவாகவே, பிறருடன் பழகும் பொழுது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. தவிர, இப்பொழுது உங்கள் உடமைகளும் தொலைந்து போக வாய்ப்புள்ளதால், சிறிதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவற்றை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். எனினும், உங்களில் சிலர், அயல்நாடுகள், அங்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவற்றினால், சுமாரான ஆதாயங்களைப் பெற முடியும்.  

கேது உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் சொந்த ராசியான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, நீங்கள் உங்கள் பாதையில் தடைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். பொதுவாக இந்தக் காலக் கட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இல்லாத காரணத்தினால், நீங்கள் உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, மிக அவசியம். முக்கியமாக உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவைப்படலாம்.  இந்த நேரத்தில், இவ்வாறு உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதையே, உங்கள் முக்கியக் கடமையாகக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் தலைப் பகுதியில் அதிக அதிக கவனம் தேவை. வாழ்க்கையின் மற்ற துறைகளிலும் நீங்கள் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். மேலும், பிறருடன் நீங்கள் பழகுவது, அவர்களிடன் உங்கள் அணுகுமுறை போன்றவற்றிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்பொழுது எதையும் யதார்த்தமாக அணுகுங்கள. மற்றவர்களது நம்பகத்தன்மையை அதிகமாகவோ, குறைத்தோ மதிப்பிட வேண்டாம். தவிர, இப்பொழுது மற்றவர்களின் கண்களுக்கும் நீங்கள் உற்சாகம் இழந்தும், களையிழந்தும் காணப்படலாம். உங்களில் சிலரது ஆளுமைக் குணங்களில் மாற்றமும் ஏற்படலாம். இது நல்ல மாற்றமாக இருக்குமாறு மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தை, சமய, ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது, வாழ்க்கைப் பிரச்சினைகளை நீங்கள் வெற்றி கொள்ள உதவும். பொதுவாக, கடவுள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளுங்கள். இது, நீங்கள்  தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும் இருக்க உதவும். 

ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்

ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும் 
    அர்ச்சனை
    அபிஷேகம்
    ஹோமம்
    பூஜை
ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.
மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

    கீழ்க்கண்ட துர்கா காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் காத்யாயநாய வித்மஹே கன்ய குமாரி தீமஹீ 
தன்னோ துர்கி ப்ரசோதயாத்’
    கீழ்க்கண்ட ராகு மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ரும் ராஹவே நமஹ’
    கீழ்க்கண்ட கேது மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
‘ஓம் கெம் கேதவே நமஹ’
    அன்னை துர்கா தேவியை வழிபடவும்  
    நெற்றியில் சந்தனம் பூசிக் கொள்ளவும்  
    சனிக்கிழமைகளில் சிவப்பு துவரையை ஏழைகளுக்கு தானம் செய்யவும்
    சிந்தூரத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்; அல்லது, குங்குமப்பூ அல்லது சிந்தூரத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

banner

Leave a Reply

Submit Comment