துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022:
ராகு கேது பெயர்ச்சி 2020:
நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். துலாம் ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிலும், கேது இரண்டாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், எட்டாம் வீடு என்பது எதிர்பாராத ஆதாயங்கள், உயில் மூலம் சொத்து அல்லது பூர்வீக சொத்து, மறை பொருள்கள் பற்றிய ஞானம், தடைகள், கடின உழைப்பு போன்றவற்றையும், இரண்டாம் வீடு செல்வம், வங்கி இருப்பு, குடும்பம், ஆரம்பக் கல்வி, பேச்சு மற்றும் கண் ஆகியவற்றையும் குறிக்கிறது.
உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2020 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க
நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
துலாம் ராசி அன்பர்களே,
ராகு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
ராகு பகவான், இப்பொழுது, உங்களது துலாம் ராசிக்கு எட்டாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு, நன்மை மற்றும் தீமை கலந்த பலன்கள் விளையும் எனலாம். முன்னேற்றப் பாதையில் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம் என்பதால் திடமான மனதுடன் செயல்படுவது நல்லது. உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு இது சரியான தருணமாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் வெற்றியை நோக்கிப் பயணம் செய்யலாம். இப்பொழுது நீங்கள் கடின முயற்சி செய்தாலும், அதற்குரிய பலன் கிடைப்பது அரிது. எனினும் மனதைத் தளர விடாதீர்கள். இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டம், திடீர் செல்வம் அல்லது ஆதாயம் போன்றவற்றை எதிர்பார்க்க வேண்டாம். சற்றே கவனக் குறைவான நடவடிக்கைகள் கூட உங்களைச் சிக்கலில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால், நீங்கள் உங்களையே பாதுகாத்துக் கொள்ள, மேலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தவிர, அறிமுகம் இல்லாத சிலர் மூலமும் எதிர்பாராத சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரலாம். எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நேரத்தில், உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் இருந்தும் கூட, நீங்கள் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்க இயலாது. உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது வியாபாரக் கூட்டாளிகளிடமிருந்தும், எந்த வகை ஆதாயத்தை எதிர் பார்க்கவும் இது ஏற்ற தருணம் அல்ல. எனினும், உங்களில் சிலர், ஆன்மீக அல்லது அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள்; அவற்றைக் கற்றுக் கொள்வதற்கான முனைப்பையும் வளர்த்துக் கொள்வார்கள்.
கேது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
கேது பகவான், இப்பொழுது, உங்களது துலாம் ராசிக்கு இரண்டாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, இந்தக் காலகட்டம், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றாக அமையும். இன்னும் சொல்லப் போனால், எச்சரிக்கை என்பதே இப்பொழுது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் பொழுது, முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி விடாதீர்கள். இது, மற்றவர்களுடனான உங்களது நல்லுறவைப் பாதித்து விடும் என்பதால், பேச்சில் கவனம் தேவை. உங்கள் குடும்பத்தினரிடமும், நீங்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் நடந்து கொள்வதும் அவசியம். இந்த நேரத்தில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் அதிக கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவது, குடும்ப உறவுகளை மேம்படுத்தும். இந்தப் பெயர்ச்சி காலத்தில், உங்கள் குடும்பத்தின் ஆதரவு, உங்களுக்கு நல்ல நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், உங்கள் சொத்துக்கள், வங்கி இருப்பு போன்றவற்றைப் பொறுத்தவரை, இது ஒரு நிச்சயமற்ற நேரமாக இருக்கும். எனவே, பணம் சேமிப்பது, எதிர்காலத் தேவைக்காக செல்வம் ஈட்டுவது போன்றவற்றில், நீங்கள் இப்பொழுது அதிக கவனம் செலுத்துவது அவசியம். தவிர, கண்களில் சில கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். மாணவர்கள், குறிப்பாக ஆரம்பக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள், தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறு கவனத்துடன் படிப்பதன் மூலம், தேர்வுகளிலும், கல்வி முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்
ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும்
அர்ச்சனை
அபிஷேகம்
ஹோமம்
பூஜை
ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள்.
ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்
கீழ்க்கண்ட கணபதி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ஏகதந்தாய வித்மஹே, வக்ரதுண்டாய தீமஹீ, தன்னோ தந்தி ப்ரசோதயாத்‘
கீழ்க்கண்ட கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யவும்
‘ஓம் கம் கணபதயே நமஹ’
சர்க்கரை, நெய், வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது நிலக்கடலை போன்ற நிலத்தடியில் வளரும் பொருட்களை தானம் செய்யவும்
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மீகத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள் அல்லது மக்களுக்கு, ஏழு வகை தானியங்களை தானம் செய்யவும்
கல்வியில் சிறந்து விளங்க, மற்ற மாணவர்களுடன் சேர்ந்து குழுவாகப் படிப்பதைத் தவிர்க்கவும்
குறுக்கு வழியில் சென்றால் வெற்றி கிட்டும் என்ற நினைப்பைத் தவிர்க்கவும்
Leave a Reply