நமது பூர்வ கர்ம வினைகளை செயல்படுத்தும் ராகு மற்றும் கேதுவின் ஆற்றல் மிக்க நாள்
நேர்மறையான முடிவுகள், நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான 18-மாத காலம்
நேரலை மார்ச் 21, மற்றும் ஏப்ரல் 12 ,2022 (இந்திய நேரப்படி)
“ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் முக்கிய கிரக பெயர்ச்சி ஆகும். இது நிழல் கிரகங்களின் பெயர்ச்சி ஆகும். வேத ஜோதிடத்தில், இந்த கிரகங்கள் ராகு-கேது என்று அழைக்கப்படுகின்றன. வேத ஜோதிடத்தின் படி, அவை மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் பாம்பு கிரகங்கள்.”
– டாக்டர் பிள்ளை
ராகுவும் கேதுவும் ஏப்ரல் 12, 2022 அன்று (வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 21, 2022) ராசி மாற்றம் அல்லது பெயர்ச்சி அடைகின்றன. இவை நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்த கிரகங்கள் நமது கடந்தகால கர்மாவை சுட்டிக்காட்டுகின்றன மற்றும் நமது தற்போதைய வாழ்க்கை சூழ்நிலைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பெயர்ச்சியில் ராகு அக்டோபர் 30, 2023 வரை செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் மற்றும் இங்கு செவ்வாயின் குணநலன்களைப் பிரதிபலிக்கும். செவ்வாய்-ராகு இணைவு ஆற்றல் பொருள் சார்ந்த முயற்சிகளில் ஈடுபாட்டையும் வெற்றியையும் அளிக்க வல்லது. ராகு உங்கள் நற்பெயரையும் புகழையும் அதிகரிக்கலாம். அதே சமயம் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் கேதுவின் சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே கேது சுக்கிரனின் குணங்களை பிரதிபலிக்கும். இது உங்கள் உறவுகளில் அன்பையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. சமநிலையை ஏற்படுத்தவும் அமைதியைத் தக்கவைக்கவும். வெற்றியைப் பெறுவதற்குமான, உங்கள் முயற்சிகளில் இந்த இரண்டு சர்ப்ப கிரகங்களும் உங்களுக்கு உதவும்.
ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷம் ஒரு நெருப்பு ராசி ஆகும். இது லட்சியம் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கும். மேஷம் செயல், தலைமைத்துவம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றலைக் குறிக்கிறது. மேஷம் ஆட்டைக் குறிப்பதால் இது உறுதிப்பாடு, மாற்றங்களுக்கான தயார்நிலை மற்றும் சவால்களை ஏற்றுக்கொள்வது போன்ற வாழ்க்கை சக்திகளைக் குறிக்கும். பொருள்வளம், அதீத ஈடுபாடு மற்றும் ஆசையைக் குறிக்கும் ராகு மேஷத்தின் குணங்களை மேம்படுத்துகிறது. மேஷ ராசியில் சஞ்சரிக்கும் ராகு பொருள் வளம், நிலம் வாங்கி சொத்து சேர்த்தல், மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி, பூர்வீகசொத்து போன்றவற்றை அளிக்கின்றது.
ராகு மேஷத்தில் சஞ்சரிக்கும் போது, கேது துலாம் ராசியில் சஞ்சரிக்கும். துலாம் ராசியின் அடையாளம் தராசு. இது சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் ஒரு காற்று ராசி ஆகும். துலாம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சமநிலையை அடைவதில் கவனம் செலுத்துகிறது. கேது கூர்ந்த நுண்ணறிவு, உள்ளார்ந்த ஞானம் மற்றும் ஆன்மீக மிகுதியைக் குறிக்கிறது. துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரனுடன் கேது சிறந்த நட்புறவு கொள்கிறது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் கேது தன்னம்பிக்கை, சிறந்த தகவல் தொடர்பு திறன் போன்றவற்றை அளித்து வாழ்வில் முன்னேற்றம் வழங்குகின்றது.
ராகு கேது பெயர்ச்சியின் இந்த 18 மாத கால சஞ்சாரத்தின் போது ராகு மேஷ ராசியில் மூன்று நட்சத்திரங்களிலும் கேது துலாம் ராசியில் மூன்று நட்சத்திரங்களிலும் சஞ்சாரம் செய்கின்றன. கிரக காரகம் மற்றும் நட்சத்திர காரகம் இரண்டும் இணைந்து வாழ்வில் நன்மை தீமை என இரண்டும் கலந்த பலன்களை அளிக்கின்றது.
புனித நூல்களின் படி, ஹோமம் மற்றும் மந்திர பாராயணம் பின்வரும் ஆசீர்வாதங்களை அளிக்கும்:
விஷ்ணுவிற்கு ஹோமம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். அமைதி, சமநிலை, சிந்தனை தெளிவு, ஞானம், விழிப்புணர்வு மற்றும் இலக்குகளை அடைவதில் கவனம் ஆகியவை கிட்டும்.
ராகு கவச பாராயணம் ராகுவின் பாதகமான விளைவுகளை நீக்குகிறது. தீய தாக்கங்களை விலக்குகிறது. மன அமைதியை அளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பை அளிக்கிறது. ராகுவுக்கு ஹோமம் நடத்துவது எதிரிகளை வெல்லவும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்தவும், வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவும்.
கேது கவச பாராயணம் கேதுவின் பாதகமான விளைவுகளை நீக்குகிறது. துன்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆன்மீகத்தை மேம்படுத்துகிறது மற்றும் உள்ளுணர்வு சக்தியையும் ஞானத்தையும் வழங்குகிறது. கேதுவிற்கு ஹோமம் நடத்துவது உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நிதி அதிர்ஷ்டத்தையும், மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணரவும், ஒட்டுமொத்த செழிப்பையும் அளிக்கும்.
ராகு கேது கிரகங்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அடைபட்டால் இந்த அமைப்பு கால சர்ப்ப தோஷ கிரக அமைப்பு ஆகும். கால சர்ப்ப ஹோமம் செய்வதன் மூலம் நேர்மறை மாற்றங்கள், ஆரோக்கிய மேம்பாடு, நீண்ட ஆயுள் கிட்டும். வறுமை நீங்கும். வேலை வாய்ப்புகள் கிட்டும். கோர விபத்துக்களை தடுக்கும் மற்றும் உறவுகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். நாகங்களுக்கு பாயாசம் படைப்பதன் மூலம் அவர்களின் அருளால் பாதுகாப்பு மற்றும் ராகு கேது தோஷ நிவர்த்தி கிட்டும்.
ராகு கேது ஹோமம், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும். ஊக்கமுடன் செயல்படவும், நேர்மறையான பண்புகளை மேம்படுத்தவும், புத்திசாலித்தனம், ஞானம் பெறவும், முயற்சிகளில் வெற்றியை பெறவும் சிரமங்களை சமாளிக்கவும், நோய் மற்றும் பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், சாதகமற்ற சூழ்நிலைகளை மாற்றவும், உதவும்.
பாரம்பரிய நடைமுறை மற்றும் ஆலய மரபுகளின் படி , இந்த ஆலயங்களில் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வது பின்வரும் ஆசீர்வாதங்களை அளிக்கும் என்பது ஐதீகம் :
இந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும். நாகநாத சுவாமியை சிவராத்திரி அன்று ராகு வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். இந்த தலத்தில் சாப நிவர்த்தி பெற்ற ராகுவிற்கு நாம் பூஜை செய்து வழிபடுவதன் மூலம் ராகுவின் அருளால் துன்பங்களில் இருந்து விடுபட இயலும். நல்ல பதவி, வளமான வாழ்வு, சவால்களை எதிர்கொள்ளும் திறன் கிட்டும். நோய்கள், வறுமை, மற்றும் கடன்கள் நீங்கும்.
பாம்பின் ஐந்து தலையுடனும், அரக்க உடலுடனும், காட்சி அளிக்கும் கேது இந்த தலத்தில் சிவனை நாகநாதசுவாமியாக வணங்கி வழிபடுகிறார். இங்கு கேதுவிற்கு பூஜை செய்வது நாக தோஷம், கேது தோஷம் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கும் மற்றும் உறவு தொடர்பான பிரச்சனைகளைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.
பஞ்ச பூத தத்துவங்களில் காற்று தத்துவமாக காளஹஸ்தீஸ்வரர் வடிவில் சிவன் விளங்குகிறார். இங்கு ராகு பூஜை செய்வதன் மூலம் சர்ப்ப தோஷம் மற்றும் ஜாதகத்தில் ராகுவின் பாதகமான விளைவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த தலத்தில் ராகுவும் கேதுவும் ஒன்றிணைந்து ஒரே நாக மூர்த்தியாக காட்சியளிக்கின்றனர். இந்த ஆலயத்தில் செய்யும் பூஜை வழிபாடுகள் கால சர்ப்ப தோஷம் (ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் தோஷம்), நாக தோஷம், கடன் சுமை, வாழ்க்கைத் துணையைப் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் இடையூறுகளை நீக்கும்.
இந்த ஆலயத்தில் மகா கணபதிக்கு பூஜை செய்வதால், உறவுகளில் ஏற்படும் சண்டை மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காணலாம்.
துர்கா ஸுக்தம் என்பது துர்கா தேவியைப் போற்றிப் பாடும் புனித பாடல் ஆகும். அக்னி தேவனுக்கான போற்றுதலும் இதில் அடங்கும். புஷ்பாஞ்சலியுடன் கூடிய இந்த புனிதமான பாடலைப் பாராயணம் செய்வதன் மூலம் துர்கா தேவியின் அருளால் சிரமங்கள் மற்றும் தடைகளிலிருந்து விடுபட இயலும் மற்றும் முக்தி அடைய உதவுகிறது.
நூரும் பாலும் என்பது அரிசி மாவு கலந்த பாலை பாம்புகளுக்கு அர்ப்பணித்தல். இது கேரளாவின் பாரம்பரிய தனித்துவமான பரிகார சடங்கு ஆகும். சர்ப்ப தோஷங்கள், கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு மற்றும் கேது தோஷங்களுக்கான நிவர்த்தி பெற சிறப்பு அபிஷேக பூஜைகளுக்குப் பிறகு, இங்குள்ள நாகதேவ சிலைகளின் மீது மஞ்சள் தூள் தெளிக்கப்படுகிறது.
பாரம்பரிய நடைமுறைகளின்படி, புனித பிரசாதம் மற்றும் தானங்களை வழங்குதல் பின்வரும் ஆசீர்வாதங்களை பெற்றுத் தரும்:
கடு மதுர பாயாசம் என்பது பழுப்பு அரிசியுடன் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு பாயாசம். இது பகவதி தேவிக்கு பிரியமான ஒன்று ஆகும். இதனை பிரசாதமாக படைப்பதன் மூலம் சர்ப்ப தோஷ பாதக விளைவுகளை குறைத்து புத்துணர்ச்சி பெற இயலும்.
வினாயகர் மோதகப் பிரியர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை நைவேத்தியம் செய்வதன் மூலம் இன்பமான வாழ்விற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இடையூறுகள் நீங்கும்.
ராகுவிற்குரிய தானியம் கருப்பு உளுந்து ஆகும். இதனை தானமாக அளிப்பதன் மூலம் பாவங்கள் கரையும். புண்ணிய காரியங்களை செய்ய இயலும். சர்ப்ப கிரக தோஷங்கள் நீங்கும்.
கேதுவிற்கு பிரியமானது கொள்ளு ஆகும்.எளியவர்களுக்கு கொள்ளு தானம் அளிப்பதன் மூலம் கேதுவின் அருளால் தீய கர்ம வினைகள் நீங்கும்.
ஆலய மரபுகளின்படி, இந்த ஆலயங்களில் சிவன் மற்றும் நாக தேவதைகளுக்கு பூஜைகள் செய்வது பின்வரும் ஆசீர்வாதங்களை அளிக்கும்:
ராகு கேது பெயர்ச்சி எசென்ஷியல் பேக்கேஜ்
+
ராகு கேது பெயர்ச்சி எசென்ஷியல் பேக்கேஜ்
+
ராகு கேது பெயர்ச்சி என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்
+
ராகு கேது பெயர்ச்சி அட்வான்ஸ்ட் பேக்கேஜ்
ராகு கேது பெயர்ச்சி தருணத்தில் தனிப்பட்ட ராகு ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். ராகுவை உடலற்ற, தலை மட்டும் கொண்ட அசுரனாக புராணங்கள் சித்தரிக்கின்றன. இந்த ஹோமத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்வதன் மூலம் :
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
ராகு கேது பெயர்ச்சி தருணத்தில் தனிப்பட்ட கேது ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். தலையற்ற உடல் கொண்ட அசுரனாக புராணங்கள் கேதுவை சித்தரிக்கின்றன. இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதன் மூலம்:
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
உங்கள் தனிப்பட்ட துர்கா ஹோமத்திற்கு முன்பதிவு செய்யுங்கள் (அனைத்து எதிர்மறைகளிலிருந்தும் பாதுகாப்பு மற்றும் நிவாரணம் அளிக்கும் ஹோமம்) துர்கா ராகுவின் அதிபதி. இந்த ஹோமத்தை மேற்கொள்வதன் மூலம் ராகு தோஷ நிவர்த்தி பெற இயலும். அத்துடன் ராகு மகா தசா மற்றும் புக்தி காலங்களில் ஜாதகத்தில் ராகு தோஷம் காரணமாக ஏற்படும் தடைகளை நீக்கி, அமைதியை அளிக்கும், வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியப் பிரச்சனைகளை தீர்க்கும்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
உங்களின் தனிப்பட்ட மகா கணபதி ஹோமத்திற்கு முன்பதிவு செய்யுங்கள் (தடைகளை நீக்கி வெற்றியை அளிக்கும் ஹோமம்)விநாயகர் கேதுவின் அதிபதி. இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம், திடமான மனம், நேர்மறை உணர்வுகிட்டும். நிதி நலனுக்கான அனைத்து தடைகளையும் நீக்கி, உங்கள் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறலாம்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
உங்கள் ஜாதகத்தில் காணப்படும் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்க உங்கள் தனிப்பட்ட கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஹோமத்திற்கு பதிவு செய்யவும். கால சர்ப்பம் என்பது ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு நிலை. தனிப்பட்ட கால சர்ப்ப ஹோமத்திற்கு ஆர்டர் செய்யும் போது, உங்கள் குடும்ப உறுப்பினர்களில் 3 பேரை (பெயர்கள் மற்றும் பிறந்த நட்சத்திரங்கள்) சேர்க்கும் சலுகையும் உங்களுக்கு உள்ளது. எங்கள் அனுபவமிக்க வேத ஜோதிட நிபுணர் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்த பிறகு கால சர்ப்ப ஹோமத்திற்கான நேரத்தை வழங்குவார்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
கிரகங்களின் பெயர்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் அவரவர் ராசியைப் பொறுத்து காணப்படும். ராகு மற்றும் கேதுவின் தாக்கம் மற்ற அனைத்து கிரகங்களையும் விட வலுவானதாக கருதப்படுகிறது. இந்த கிரகங்கள் ராசி மாறும் பொழுது, உங்கள் ஜாதகத்தில் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து உங்கள் வாழ்வியல் அம்சங்களில் சாதக மற்றும் பாதக விளைவுகளை அளிக்கின்றன. உங்கள் ராகு – கேது பெயர்ச்சி அறிக்கையைப் பெற்று, எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். பெயர்ச்சி பலன் அறிக்கையில் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உங்களுக்கான பரிகாரங்களும் பரிந்துரைக்கப்படும்.
ராகுவும் கேதுவும் ஏப்ரல் 12, 2022 அன்று ராசி மாற்றம் அல்லது பெயர்ச்சி அடைகின்றன. இவை நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்குகின்றன.. இந்த கிரகங்கள் நமது கடந்தகால கர்மாவை சுட்டிக்காட்டுகின்றன மற்றும் நமது தற்போதைய வாழ்க்கை சூழ்நிலைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பெயர்ச்சியில் ராகு அக்டோபர்.30, 2023 வரை செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் மற்றும் இங்கு செவ்வாயின் குணநலன்களைப் பிரதிபலிக்கும். செவ்வாய்-ராகு இணைவு ஆற்றல் பொருள் சார்ந்த முயற்சிகளில் ஈடுபாட்டையும் வெற்றியையும் அளிக்க வல்லது. ராகு உங்கள் நற்பெயரையும் புகழையும் அதிகரிக்கலாம். அதே சமயம் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் கேதுவின் சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே கேது சுக்கிரனின் குணங்களை பிரதிபலிக்கும். இது உங்கள் உறவுகளில் அன்பையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. உங்கள் முயற்சிகளில் வெற்றி காணவும், மனதில் சமநிலை கொண்டு மன அமைதியைப் பெற நிழல் கிரகங்களான ராகு கேதுவை வழிபட ஆஸ்ட்ரோவேத் நடத்தும் ராகு கேது பெயர்ச்சி பரிகார வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
ராகுவும் கேதுவும் ஏப்ரல் 12, 2022 அன்று ராசி மாற்றம் அல்லது பெயர்ச்சி அடைகின்றன. இந்த பெயர்ச்சியில் ராகு அக்டோபர்.30, 2023 வரை செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் மற்றும் இங்கு செவ்வாயின் குணநலன்களைப் பிரதிபலிக்கும். செவ்வாய்-ராகு இணைவு ஆற்றல் பொருள் சார்ந்த முயற்சிகளில் ஈடுபாட்டையும் வெற்றியையும் அளிக்க வல்லது. ராகு உங்கள் நற்பெயரையும் புகழையும் அதிகரிக்கலாம். அதே சமயம் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் கேதுவின் சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே கேது சுக்கிரனின் குணங்களை பிரதிபலிக்கும். இது உங்கள் உறவுகளில் அன்பையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. உங்கள் முயற்சிகளில் வெற்றி காணவும், மனதில் சமநிலை கொண்டு மன அமைதியைப் பெற நிழல் கிரகங்களான ராகு கேதுவை வழிபட ஆஸ்ட்ரோவேத் நடத்தும் ராகு கேது பெயர்ச்சி என்ஹான்ஸ்ட் பரிகார வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
சாயா கிரகங்களான ராகு மற்றும் கேது ஏப்ரல் மாதம் 12, 2022 அன்று ராசி மாற்றம் அடைகிறது. இது உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷ ராசிக்கு ராகு பெயர்ச்சியாகி செவ்வாயின் நெருப்பு குணங்களைப் பெறுகிறார். ராகு-செவ்வாய் சக்தியின் இந்த கலவையானது உங்கள் பொருள்சார் இலக்குகளை அடைய உங்கள் முயற்சிகளை மேம்படுத்தவும், உங்கள் நற்பெயரையும் புகழையும் அதிகரிக்க உதவும். அதே நேரத்தில், கேது சுக்கிரன் ஆட்சி செய்யும் துலாம் ராசிக்கு மாறுகிறார். இது சிறந்த உறவிற்கான ஆசீர்வாதங்களை வழங்கவும், உங்கள் உறவுகளில் ஒற்றுமையை மேம்படுத்தவும், உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை சமநிலைப்படுத்தவும் சுக்கிரனின் குணங்களை அதிகரிக்க உதவுகிறது. ஆஸ்ட்ரோவேத் நடத்தும் ராகு கேது பெயர்ச்சி அட்வான்ஸ்ட் பரிகார வழிபாட்டு விழாக்களில் பங்கேற்று, வெற்றி, மன அமைதி மற்றும் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைப் பெற, நிழல் கிரகங்களின் சாதகமான ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை தக்கவைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.
ராகுவும் கேதுவும் ஏப்ரல் 12, 2022 அன்று ராசி மாற்றம் அல்லது பெயர்ச்சி அடைகின்றன. இவை நமது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்குகின்றன.. இந்த கிரகங்கள் நமது கடந்தகால கர்மாவை சுட்டிக்காட்டுகின்றன மற்றும் நமது தற்போதைய வாழ்க்கை சூழ்நிலைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பெயர்ச்சியில் ராகு அக்டோபர்.30, 2023 வரை செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் மற்றும் இங்கு செவ்வாயின் குணநலன்களைப் பிரதிபலிக்கும். செவ்வாய்-ராகு இணைவு ஆற்றல் பொருள் சார்ந்த முயற்சிகளில் ஈடுபாட்டையும் வெற்றியையும் அளிக்க வல்லது. ராகு உங்கள் நற்பெயரையும் புகழையும் அதிகரிக்கலாம். அதே சமயம் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் கேதுவின் சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே கேது சுக்கிரனின் குணங்களை பிரதிபலிக்கும். இது உங்கள் உறவுகளில் அன்பையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. உங்கள் முயற்சிகளில் வெற்றி காணவும், மனதில் சமநிலை கொண்டு மன அமைதியைப் பெற நிழல் கிரகங்களான ராகு கேதுவை வழிபட ஆஸ்ட்ரோவேத் நடத்தும் ராகு கேது பெயர்ச்சி அட்வான்ஸ்ட் ப்ளஸ் பரிகார வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள்.
குறிப்பு: ராகு கேது பரிகார சடங்குகளின் பிரசாதத்தை வைத்துக்கொள்வது அசுபமாக கருதப்படுவதால், பிரசாதம் அனுப்பப்படாது.