கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022 :
ராகு கேது பெயர்ச்சி 2020
நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். கன்னி ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிலும், கேது மூன்றாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஒன்பதாம் வீடு என்பது, தந்தை, முன்னோர்கள், அதிர்ஷ்டம், நீதி, நீண்ட தூரப் பிரயாணங்கள் போன்றவற்றைக் குறிக்கும்; மூன்றாம் வீடு, தகவல் தொடர்பு, இளைய உடன்பிறப்பு மற்றும் குறுகிய பயணங்களைக் குறிக்கும்.
உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2020 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க
நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
கன்னி ராசி அன்பர்களே,
ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு ஒன்பதாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சோதனையான காலமாக அமையக்கூடும். இப்பொழுது, உங்கள் தந்தையுடனான உறவில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவருடைய ஆரோக்கியமும் உங்களுக்குக் கவலை தரலாம். மேலும், இந்த நேரத்தில் பொதுவாக நீங்கள், வயதில் மூத்தவர்களுடன் நல்லிணக்கத்தைப் பராமரித்து, அவர்கள் ஆசிகளைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் குரு அல்லது ஆன்மீக போதகர் மற்றும் மத குருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் உங்களுக்கு நன்மை தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு பொழுதும், அவர்களை அவமதித்து விடாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரியுடனான உறவு அவ்வளவு சீராக இருக்காது. நீங்கள் தான் இதை மேம்படுத்தி, நல்லுறவாக்கி, அதற்கு வலிமை சேர்க்க வேண்டும். அதிர்ஷ்டமும் கூட இப்பொழுது உங்களுக்கு, அதிக அளவு சாதகமாக இருக்காது. நீங்கள், ஒழுக்கம் மற்றும் ஒழுக்க நெறிகளில் இருந்து வழுவாமல், உங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம். உங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் இப்பொழுது சோதனைக் காலம் என்பதால், நீங்கள் உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் நேர்மையாக இருக்க முயற்சி செய்வது மிகவும் முக்கியம். இந்தப் பெயர்ச்சியின் விளைவுகள் உங்களை பாதிக்காமல் இருப்பதற்கு, மனதில் இறை பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கடவுளை வணங்குங்கள். எனினும், இந்தப் பெயர்ச்சிக் காலத்தின் பொழுது, வெளிநாட்டுப் பயணங்கள் எளிதில் அமையும் வாய்ப்புள்ளது.
கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கன்னிக்கு மூன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் உங்களுக்கு, நன்மை மற்றும் தீமை கலந்த பலன்களை அளிப்பார் என எதிர்பார்க்கலாம். ஜோதிடம், இசை, பாடல், நடனம், மற்றும் உளவியல் போன்ற ஆன்மீகம் அல்லது கலைத் துறைகளில் இருப்பவர்கள், அவற்றில் மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் வாய்ப்புள்ளது. எனினும், இந்த நேரத்தில் உங்கள் தைரியம் சற்று குறையக்கூடும். எனவே நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம். மற்றவர்களுடனான உங்கள் உரையாடலின் பொழுது, நீங்கள் கவனமாக இருந்தால் தவறான புரிந்துணர்வுகளைத் தவிர்க்க இயலும். எனவே பேசுவதற்கு முன் நன்கு யோசித்துப் பேசுவது நல்லது. மேலும், சுருக்கமாகவும், குறிப்பாகவும் பேசுவதும், பிறருடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். உங்கள் இளைய உடன் பிறப்புக்களுடன் உள்ள உறவில் சில சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளதால், அவர்களுடன் இணக்கமான உறவை மேற்கொள்வது அவசியம். இந்த நேரத்தில், உங்களில் சிலர் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். இவை குறிப்பாக, ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரைகளாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கை, இந்தக் கால கட்டத்தில், அவரது ஆசிகளைப் பெற்றுத் தந்து, இந்தப் பெயர்ச்சியினால் விளையும் பாதக விளைவுகளைச் சமாளிக்க உதவும்.
ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்
ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும்
அர்ச்சனை
அபிஷேகம்
ஹோமம்
பூஜை
ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள்.
ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்
கீழ்க்கண்ட ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹீ
தன்னோ ராகு ப்ரசோதயாத்’
கீழ்க்கண்ட கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
’ஓம் அஷ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹீ
தன்னோ கேது ப்ரசோதயாத்’
அனாதைக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கவும்
குதிரைக்குக் கொள்ளு தரவும்
மீன் தொட்டிகளிலோ, கடைகளிலோ இருக்கும் மீன்களை விடுவித்து, அவற்றைத் தண்ணீரில் விடவும்; மேலும், மீன்களுக்கு உணவும் அளிக்கவும்
Leave a Reply