மகர ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது மகர ராசிக்கு தன ஸ்தானம் எனும் இரண்டாம் வீடாக அமைவதால், தன நிலையில் ஏற்றத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் குரு கொடுக்கப்போகிறார். அது மட்டும் அல்லாமல், உத்தியோகம் சரிவர அமையாதவர்களுக்கு நல்ல உத்தியோகத்தையும், நல்ல உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பெரிய பதவி உயர்வையும் ஏற்படுத்தித் தருவதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. கோள்சார குருவானவர் இரண்டாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக உத்தியோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது மகர ராசியைச் சார்ந்தவர்களுக்கு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றத்தையும், உயில் மூலமான சொத்துக்கள் சேர்க்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அமையப்போகிறது.
குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
குடும்பம்:
குடும்பத்தில் அனைவரிடமும் சுமுகமான உறவு மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து நடந்து கொள்ள அவீண்டும். பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்ப உறவுகள் மேம்பட சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம்:
கடமை முக்கியம் என்றாலும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல கடமைகள் இருந்தாலும் ஓய்விற்கும் நேரத்தை ஒதுக்க முயலுங்கள். அதிகப் பணிகள் சோர்வை ஏற்படுத்தி தூக்கமின்மை பாதிப்பிற்கு உங்களை ஆளாக்கும். தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாயாரின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை
காதல் / திருமணம்:
காதலர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். வெளியிடங்களுக்குச் சென்று தங்கள் உறவை பலப்படுத்திக் கொள்வார்கள். கணவன் மனைவி உறவுநிலை சுமுகமாக இருக்கும். சரியான புரிந்துணர்வு காரணமாக நெருக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை
நிதி நிலை:
உங்கள் வருமானம் கணிசமாக உயரும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கும். பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்.
நிதி நிலையில் ஏற்றம் காண சனி பூஜை
வேலை / தொழில்:
இந்தப் பெயர்ச்சியில் வேலையைப் பொறுத்தவரை சாதகமான பலன்கள் கிட்டும் என்றாலும் உங்களுக்கு அலுவலகத்தில் பணிகள் அதிகம் காணப்படும். பொறுப்புகள் கூடும். மலை போலக் குவியும் பணிகள் உங்களுக்கு அச்சம் மற்றும் அசதியை ஏற்படுத்தும். திட்டமிட்டு பணியாற்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசுப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரம் மற்றும் தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும்.
உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு சிவன் பூஜை
கல்வி:
பள்ளி மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்தி படிக்க முயல வேண்டும். கவனம் சிதறாமல் படிப்பதன் மூலம் வெற்றி காண இயலும். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாகச் செயல்படும். வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். படிப்பை முடித்தவர்கள் உடனடியாக வேலை கிடைக்கப் பெறுவார்கள்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
- குழந்தைகளுக்கு இனிப்பு பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும்.
- வியாழக்கிழமை விரதமிருந்து தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
- ஏழை மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.
Leave a Reply