கடக ராசியினர் சிறந்த கற்பனை வளம் கொண்டவர்கள். பிறரின் எண்ணங்களை எளிதில் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் திறமை இவர்களிடம் உள்ளது. மிகுந்த நெகிழ்வும், பரிவும், உணர்ச்சி பூர்வமாக வாழும் தன்மையும் இவர்களின் சிறப்பு. இவர்களிடம் அறிவு, படைப்பாற்றல், சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போகும் திறன், இனிய பேச்சு ஆகியவை காணப்படும். சில நேரங்களில் சீற்றம் காட்டக்கூடியவர்களாக இருந்தாலும், அதே சமயத்தில் அன்பையும் வெளிப்படுத்துவார்கள். சில சூழ்நிலைகளில் அமைதியாகவும், வெட்கத்துடனும் இருப்பார்கள்; ஆனால் வேறு சில சூழ்நிலைகளில் தைரியமாகவும் திறந்த மனதோடும் பேசுவார்கள். பொறுமையைக் கையாள முடிந்தால் தேவையற்ற சிக்கல்களை எளிதில் தவிர்க்கலாம்.
சனிக்கிழமைகளில், துர்கா சப்த ஸ்லோகி பாராயணம் செய்வது நல்ல ஆரோக்கியத்தைத் தரும். திங்கட்கிழமைகளில், விநாயகர் அபிஷேகத்திற்கு பால் வழங்குவது குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும் மன அமைதியையும் ஏற்படுத்தும். சிவபெருமானுக்கு ஒரு தீபம் ஏற்றி, திங்கட்கிழமைகளில் அபிஷேகப் பொருட்களை வாங்கி அளிக்கவும். தினமும் அல்லது குறைந்தபட்சம் திங்கட்கிழமைகளில் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லுங்கள்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
உத்தியோகத்தில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
உங்கள் நிதிநிலை மேம்பட : குபேர பூஜை
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை
திருமண உறவில் நல்லிணக்கம் காண :கணபதி பூஜை
உங்கள் ஆரோக்கியம் மேம்பட :துர்கா பூஜை
சாதகமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, அக்டோபர் மற்றும் டிசம்பர்.
சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.