இருமனம் இணையும் திருமண வாழ்வில் இரு உயிர்களை இணைக்க, கணினி தொழில் நுட்ப மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட திருமணப் பொருத்த இணைய வழிகாட்டி மூலம் ஆண் மற்றும் பெண்னின் நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையில் பொருத்தம் தமிழில் அறிந்து கொள்ளுங்கள்.
நாகரீகமும் விஞ்ஞானமும் வளர்ந்த இந்த காலக் கட்டத்தில் திருமணங்கள் சரியான முறைப்படி நடக்கிறதா என்றால் கேள்விக் குறி தான். முறைப்படி என்பதன் பொருள் என்ன? இருமனம் இணையும் திருமண வாழ்வு “ஆல்” போல தழைத்து நிற்க நமது முன்னோர்கள் பல உத்திகளைக் கையாண்டனர். பெயர்ப் பொருத்தம், ராசிப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், இன்னும் பல பொருத்தங்கள் பார்த்து மணம் முடித்து வைத்தனர். அதன் மூலம் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்து தங்கள் குடும்பம் தழைக்க உறவைப் பேணிக் காத்து வாழ்வை வளமாக்கிக் கொண்டனர்.
இந்தப் பொருத்தங்கள் எல்லாம் எதற்காகப் பார்க்கப்பபட்டன? நமது முன்னோர்களின் அபாரமான திறமையை இது விளக்குகின்றது. உதாரணமாக, திருமணப் பொருத்தம் காணும் போது முக்கியமாக, செவ்வாய் தோஷம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது மூட நம்பிக்கையாக அல்லது கேலிக் கூத்தாகக் கூடத் தெரியலாம். ஆனால் விஞ்ஞான ரீதியாக செவ்வாய் என்பது இரத்தத்தைக் குறிக்கும். எண்ண ஓட்டங்களும் ரத்த ஓட்டங்களும் ஒன்றுகொன்று சம்பந்தம் வாய்ந்தது. ரத்த வகையை பரிசோதனை செய்து பார்த்தால் தான் நமக்கு அது “பாசிடிவா” அல்லது “நெகடிவா” என்று தெரியும். இதையே நமது முன்னோர்கள் செவ்வாயின் நிலையை வைத்து கூறி விடுவார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. இது போல விஞ்ஞானப் பூர்வமான விஷயங்கள் எவ்வளவோ இந்த ஜோதிடத்தில் மறைந்துள்ளன. நமது முன்னோர்கள் விஞ்ஞானப் பூர்வமாக விளக்காமல், ஜோதிட சாஸ்திரமாக மட்டும் கூறி விட்டுச் சென்றதால் தான், நாம் இன்று ஜோதிட சாஸ்திரத்தின் மீது முழு நம்பிக்கை கொள்ள மறுக்கிறோம்.
எனவே, திருமணப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியம். திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் தேவையான பொருத்தங்கள் உள்ளதா என்பதை அறிந்து திருமணம் செய்வதன் மூலம் “வாழையடி வாழையென” வம்சம் தழைத்து ஓங்கும்.
திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையான முக்கியமான பத்து பொருத்தங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாகக் காண வேண்டிய பத்து பொருத்தங்கள்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 என்று வந்தால் தினப் பொருத்தம் உண்டு. இந்த எண்ணிக்கையில் இல்லாதிருந்தால் அந்த ஜாதகத்தை விலக்கி விடலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரிக்கிறார்கள். அவை முறையயே தேவ கணம், மானுஷ கணம், மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். வாழ்வில் மங்கலங்கள் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியம்.
திருமண பந்தம் இனிமையுடன் இருக்கவும் இல்லறம் இனிதே நடக்கவும் சம்பத்து மிகவும் அவசியம். அதிலும் புத்திர சம்பத்து அவசியம். இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகளுக்கு சம்பத்து கொடுக்கும். அதுமட்டுமின்றி புத்திரர்கள் மூலம் சம்பத்துக்கள் பெருகும்.
இல்லற வாழ்வை இனிதே துவக்கும் திருமணப் பெண், தனது வாழ்நாள் முழுவதும் மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமாய் காட்சியளிக்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள். அதனால் தான் பெரியோர்களும் திருமணமான பெண்களை “தீர்க்கசுமங்கலி பவ” என்று வாழ்த்துவார்கள். சுமங்கலிதத்தனமாய் இருக்க ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் காண வேண்டும்.
நமது ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. அதன் அடிப்படையில் இந்த பொருத்தம் காணப்படுகின்றது. ஆண்-பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் தேவை. எனவே தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகின்றது. இந்தப் பொருத்தம் இருந்தால் தாம்பத்திய உறவு சிறக்கும்.
இரு மனம் ஒத்த தம்பதியர் வாழ்வு இனிமையாய் இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். அதற்கு ராசிப் பொருத்தம் காண வேண்டியது அவசியம்.
வாழையடி வாழையென வம்சம் வளர வேண்டும் என்று தம்பதியரை வாழ்த்தாத பெரியோர்களே இல்லை எனலாம். சந்ததி விருத்திக்கு ராசி அதிபதி பொருத்தம் அவசியம் காண வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியம். அப்பொழுது தான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர்.
ரஜ்ஜு பொருத்தம் என்பதே, பத்து திருமண பொருத்தங்களுள் மிகவும் முக்கிய பொருத்தம். பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள். அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.
வேதை என்றால் ஒன்றுகொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய பலத்தை குறிப்பது. ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் ஒன்றுக்கொன்று வேதை இல்லாமலிருத்தலே வேதைப் பொருத்தம் எனப்படும்.
இந்த பத்து பொருத்தங்கள் மட்டும் வைத்து ஒரு திருமணத்தை நிச்சயிக்கலாமா என்றால், நிச்சயமாக இது மட்டும் போதாது. ஆண் பெண் இருவரின் ஜாதகத்தையும் உள்ளார்ந்து பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. முக்கியமாக இருவரின் ஆயுள், இருவரின் குழந்தை பெறும் தகுதி, பெண்ணின் மாங்கலிய பலம் போன்ற பல சிறப்பு அமசங்களை இருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் வைத்து கணிக்க வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு பத்து பொருத்தங்கள் இருக்கும். ஆனால் கிரக அமைப்புகள் சரியாக இருக்காது. சிலருக்கு கிரக அமைப்புகள் சரியாக இருக்கும். ஆனால் பொருத்தங்கள் குறைவாக இருக்கும்.
நாம் திருமணம் என்று தொடங்கும் போது ஆண் வீட்டாரோ பெண் வீட்டாரோ, சிலருக்கு பெண் அல்லது ஆண் தேடும் போது கூடிய சீக்கிரமே அமைந்து விடும். சிலருக்கு அதிக காலம் தேவைப்படும். அல்லது அதிக ஜாதகங்கள் வந்து வந்து பொருந்தாமல் போகும்.
எனவே, உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணத்திற்கு பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் திருமணத்திற்கு தேவையான பொருத்தங்கள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ள எங்கள் சாப்ட்வேர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு தடவையும் நீங்கள் ஜோதிடரை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. பொருத்தம் உள்ளதா என்று நீங்கள் பார்த்து சில சாதகங்களைத் தேர்வு செய்து பிறகு ஜோதிடரை அணுகலாம்.