கிரகங்களுள் சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மகர ராசி சனியின் ஆட்சி வீடு ஆகும். இங்கு குரு பகவான் நீசம் அடைகிறார். என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச பங்கம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 7ஆம் வீடு, 9ஆம் வீடு, மற்றும் 11 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 7 ஆம் வீடு என்பது, தொழில், திருமணம், சமுதாய உறவுகள் போன்றவற்றைக் குறிக்கிறது. 9 ஆம் வீடு என்பது, அதிர்ஷ்டம், உயர் கல்வி, தந்தை, வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றையும், 11 ஆம் வீடு என்பது, பதவி உயர்வு, விருப்பங்கள் நிறைவேறுதல், தன லாபம் போன்றவற்றையும் குறிக்கிறது.
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதாரண பலன்களை அளிக்கும் காலக் கட்டமாக இருக்கும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. பிறர் மனம் கோணாத வகையில் பேசுவதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள முடியும். உடன் பிறந்தவர்களுடன் சிறந்த உறவை பராமரிக்க இது ஏற்ற தருணம். அவர்களுக்கு உதவுவதாக வாக்கு அளித்திருந்தால் அதனை முடித்துக் கொடுக்க நடவடிக்கையும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும். உங்கள் கர்மாவை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இது உகந்த நேரம் எனலாம். இது உங்கள் எதிர்காலத்தை மேன்மையாக்க உதவும். பொதுவாக உங்களது அறிவுரை, உங்கள் நலம் விரும்புவோரின் வாழ்க்கையில், இப்பொழுது ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும். சிறு பயணங்கள் நன்மை தரும்.
நீங்கள் குடும்பத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் போக்கு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும். அதன் மூலம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் அறிவார்ந்த வகையில் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்.குடும்ப உறுப்பினர்கள் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். உங்களுக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்கள், தேவையற்ற பேச்சுக்களையும், விவாதங்களையும் கண்டிப்பாகத் தவிர்த்து விடுவது அவசியம்.
நீங்கள் பணியாற்றுபவராக இருந்தாலும் சரி, வியாபாரம் அல்லது தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, உங்கள் திறமைக்கு சாவல் அளிக்கும் தருணங்களை நீங்கள் சந்திக்க நேரும். நீங்கள் புத்தி சாலித்தனத்துடன் சாதுரியமாக பணியாற்றி உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்றாலும், நோய் நொடிகள் காரணமாக, நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். உடல் சோர்வு, வயிற்று வலி, முதுகு வலி போன்றவை உங்களுக்குத் தொந்தரவு தரலாம். எனவே நீங்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொவது சிறப்பு.
வேலை, தொழில்
நீங்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்டி பணியாற்ற வேண்டிய காலக்கட்டமாக இது விளங்கும்.சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது. உங்கள் உணர்ச்சிகளுக்கு இடம் அளிப்பதை விட யதார்த்த நிலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாத வகையில் பணியாற்ற வேண்டும். உத்தியோகத்தில் நீங்கள் எனவே கவனமாக நடந்து கொள்ளுங்கள். அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரம் அல்லது தொழில் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் தங்கள் இலக்குகளை எட்ட முடியும். தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை பணிகளை முழுவதுமாக அவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதும், அது குறித்து கவனமாக இருப்பதும் நல்லது. பொதுவாக, உங்கள் அறிவாற்றலின் துணை கொண்டு, இப்பொழுது நீங்கள், தொழிலில் வெற்றி காணமுடியும். எனினும், தொழில் தொடர்பான பயணங்களுக்கும், மாற்றங்களுக்கும் நீங்கள் தயாராக இருப்பது நல்லது. உங்கள் முயற்சிகளுக்குக் கண்டிப்பாக, உரிய பலன் கிடைக்கும்.
நிதி
உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்ள இது உகந்த நேரம் ஆகும் அதற்கான பல வாய்ப்புகளும் உங்களை நாடி வரும் ஊக வணிகம் மூலம் நீங்கள் லாபங்களைக் காண இயலும், வீடு வாங்கல் விற்றல் மூலமும் நீங்கள் ஆதாயங்களைப் பெற இயலும். நீண்ட காலப் புதிய முதலீடுகள் மூலம் நீங்கள் நன்மை பெறுவீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, உங்கள் உடன் பிறந்தவர்களுக்கும் நீங்கள் நிதி உதவி செய்து, அவர்களின் ஆதரவைப் பெறக் கூடும். பதவி உயர்வும், நீங்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வும் உங்களை நாடி வரும்.
குடும்பம்
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உரிய நேரத்தில் தாய்வழி உறவினர்கள் அளிக்கும் உதவி, உங்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தரும். மேலும், பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து விடுவதும், அனைவரிடமும் சுமுக உறவுடன் பழகுவதும் நலம் பயக்கும். தவிர, உங்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் வேலையில் ஏற்படும் முன்னேற்றம், உங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கக் கூடும். உங்கள் வழிகாட்டுதலும், அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.
கல்வி
விருச்சிக ராசி மாணவர்களின் கல்வியைப் பொறுத்தவரை, இது அவர்களுக்கு ஒரு சவாலான நேரமாக இருக்கக் கூடும். ஆயினும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டுதல், மாணவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக அமையும். என்றாலும் அதீத தன்னம்பிக்கை உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் விடா முயற்சி, கல்வியை வெற்றிகரமாக முடிக்கவும், நல்ல வேலையில் அமரவும் உதவும். உங்கள் துணிச்சலான அணுகுமுறை, கவலைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.. தியானம் அல்லது யோகா பயிற்சியின் மூலம் நீங்கள் உங்கள் ஆற்றலையும், மன அமைதியையும் வளர்த்துக் கொள்ள இயலும்.
காதலும், திருமண வாழ்க்கையும்
விருச்சிக ராசி காதலர்க்ளுக்கு இது சாதகமான பெயர்ச்சிக் காலமாக அமையும். பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். இருவரும் சேர்ந்து இன்ப சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அதன் மூலம் உங்கள் உறவு வலுப்பெறும். உங்கள் அன்னியோன்யம் கூடும். தேவைப்படும் நேரங்களில், உங்கள் துணைவரின் குடும்பத்திற்கும் நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள். பெற்றவர்களும், மூத்தவர்களும் கூட, உங்கள் காதலுக்கு ஆசியும், ஆதரவும் தரக்கூடும். இது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையும். கணவன் மனைவி உறவும், குடும்ப உறவும் கூட, சுமுகமாகவே இருக்கக் கூடும். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும்.
ஆரோக்கியம்
விருச்சிக ராசி அன்பர்கள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் எந்தவித ஆரோக்கியப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட இது நல்ல நேரம் எனலாம். உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியும் இப்பொழுது மேம்பட்டு, நோய்களைத் தீர்க்க உதவும். இயற்கை உணவை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் மனம் அமைதியின்மை ஏற்பட்டு அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
எளிய பரிகாரங்கள்
- குரு காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யவும்
- தட்சிணாமூர்த்தி மந்திரத்தை ஜபம் செய்யவும்
- பெற்றவர்களின் ஆசீர்வாதம் பெறவும்
- பசு மாட்டிற்குப் புல் அளிக்கவும்
Leave a Reply