கும்பம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:
கும்ப ராசி அன்பர்கள், இந்த மாதம், எதிலும் பொறுமையுடனும், கவனத்துடனும் இருப்பது அவசியம். தற்பொழுது உங்களுக்குத் தைரியம் ஒன்றே துணை எனலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். இந்த நேரத்தில், யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். பண இழப்பு, துரோகம், ஏமாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த எச்சரிக்கை தேவை. உங்களுக்கு, சில மறைமுக எதிர்ப்புக்களும் வந்து நீங்கலாம். எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைக் கையாள்வது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கலாம். குழந்தைகள் தொடர்பாகவும் கவனம் தேவை. ஆயினும், குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை மற்றும் தொழில் துறையில் அமைதி நிலவும். சிலர், புனிதத் தலங்களுக்கு, ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் வந்து நீங்கலாம். இந்த நேரத்தில், புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். புதிய திருமண முயற்சிகள் கைகூடும் வாய்ப்புள்ளது.
நிதி:
உங்கள் பொருளாதார நிலை மந்தமாக இருக்கக் கூடும். உங்கள் பழைய சேமிப்புகள் கரையலாம். குடும்பத் தேவைகளுக்காக, சிலர் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இருப்பினும், உரிய முயற்சிகளுக்குப் பின்னர், தேவையான பண வரவு கிடைக்கக் கூடும். குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நீண்ட நாள் சேமிப்பு போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.
வேலை:
உங்கள் பணியில் அமைதி நிலவும். எனினும், வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதையும் தவிர்க்கவும். உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்வதும் வேண்டாம். இது போன்றவற்றைத் தவிர்த்து, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது நலம் தரும்.
தொழில்:
இந்த நேரத்தில் நீங்கள், தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும் தவிர்த்து, தற்போதுள்ள பணிகளில் கண்ணும், கருத்துமாகச் செயல்படுவதும் அவசியம். ‘தன்னம்பிக்கையே வெற்றி தரும்’ என்பதை நீங்கள் உணரும் காலம் இது எனலாம்.
தொழில் வல்லுநர்கள்:
மகர ராசி தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம், சராசரியான காலமாக இருக்கும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால், உங்களுக்கு நன்மை விளையக்கூடும். உங்களது செயல்பாடும், உங்களுடைய தனிப்பட்ட திறமை வெளிப்படும் வகையில் அமைந்திருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்களிடம், பொறுமையும், விழிப்புணர்வும் தேவை.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் உடல்நலம் குறித்த சிறு பிரச்சனைகள் வந்து நீங்கக்கூடும். தினந்தோறும் தவறாமல், சத்துள்ள உணவுப் பொருட்களையும், இயற்கை உணவுகளையும் உட்கொள்வது நலம் தரும். வீண் பயம், எதிர்மறை சிந்தனைகள் போன்றவற்றைத் தவிர்த்து, நேர்மறை என்ணங்களை வளர்த்துக் கொள்வதால், மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
மாணவர்கள்:
இந்த மாதம், மாணவர்களுக்குக் கல்வியில் அதிக கவனம் தேவை. இப்பொழுது நீங்கள் சோம்பலைத் தவிர்ப்பதும் அவசியம். உங்கள் உடல் ஆரோக்கியம், உங்களது படிப்பைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். நண்பர்களின் உதவி உங்களுக்குக் கிடைக்கும். எனினும், தேவையற்ற நட்பிலிருந்து விலகி இருப்பது நன்மை தரும். கடின உழைப்பு மட்டுமே கல்வியில் உயர்வு தரும் என்பதை நீங்கள் உணரும் காலம் இது.
சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,14,15,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1, 3, 10, 11, 16, 17, 18, 19, 20, 24, 25, 30.
பரிகாரம்:
- ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
- காக்கைக்கு அன்னம் இடுதல், பாம்புப் புற்றுக்கு பால் வார்த்தல்.
Leave a Reply