பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் ஸ்தானத்தையும், இரண்டு மற்றும் பதினொன்றாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். ஏழாம் இடம் என்பது திருமணத்தை சுட்டிக் காட்டும். இரண்டாம் ஸ்தானம் குடும்பம் மற்றும் தனத்தை சுட்டிக் காட்டும். பதினொன்றாம் இடம் லாபத்தை சுட்டிக் காட்டும்.
ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்து ஏழாம் இடத்தைப் பார்வையிடும் சனி பகவான் திருமண பாக்கியத்தையும் புத்திர பாக்கியத்தையும் அளிப்பார். பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் கன்னி ராசி அன்பர்களின் மனதில் எழும் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். எனவே இந்த சனிப் பெயர்ச்சி மூலம் கன்னி ராசி அன்பர்கள் சந்தோஷமான நிலையை அனுபவிப்பார்கள்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
குடும்பம்:
கன்னி ராசி அன்பர்களுக்கு குடும்பத்தில் இணக்கமான சூழல் ஏற்படும். தம்பதிகளுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு நிலை இருக்கும். கன்னி ராசி அன்பர்களின் காதல் கை கூடும். திருமணத்திற்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும் இனிய தருணமாக இந்த பெயர்ச்சி விளங்கும். திருமணமான தம்பதிகள் புத்திர பாக்கியத்தை பெற்று மகிழ்வார்கள். குழந்தைகளின் கல்வியில் மேம்பட்ட நிலை காணப்படும்.
பரிகாரங்கள்:
- பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் தேன் வாங்கி கொடுப்பது குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.
- செயற்கை நீர் ஊற்ற்றை வீட்டின் வரவேற்பறையில் வைத்திட குடும்ப நலம் கூடும்.
உடல்நலம்:
கன்னி ராசி அன்பர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய தருணம் இது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ள இயலும். நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கன்னி ராசியைச் சார்ந்த குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியவர்கள் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரும். அதிக தண்ணீர் அருந்துவதன் மூலம் மூட்டு உபாதைகளை தவிர்க்க இயலும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும் உணவு வகைகளை அளியுங்கள்.
பரிகாரங்கள்:
- சங்கடஹர சதுர்த்தி அன்று வினாயகர் அபிசேகத்திற்கு பால் தானம் செய்வதன் மூலம் நல்ல உடல் நலம் பேணலாம்.
- கணேச சகஸ்ரநாமத்தினை பாராயணம் செய்யவோ அல்லது கேட்கவோ செய்திட நல்ல உடல் ஆரோக்யத்தை பேணி கத்திட முடியும்.
பொருளாதாரம்:
பணியில் இருக்கும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் ஊதியம் அதிகரிக்கக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். அதன் மூலம் பொருளாதார நிலை மேம்பட்டு மகிழ்ச்சி அடைவார்கள். தரகு தொழில் மேற்கொள்பவர்கள் பொருளாதாரத்தில் சில சரிவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கும் காரணத்தால் அதிக முதலீடுகளை செய்வதற்கு ஆசைபடக் கூடாது. நிதானமாக செயல்படுவதன் மூலம் சீரான முன்னேற்றம் பெறலாம். ஊக வணிகம் செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார லாபம் பெறலாம்.
பரிகாரங்கள்:
- வெள்ளிக்கிழமையன்று மொச்சையை சுண்டல் போல் செய்து மகாலட்சுமி ஆலயத்திற்கு வருபவர்களிடம் தானமாக கொடுக்க பொருளாதார முன்னேற்றம் அடையலாம்.
- உலோகத்தினால் ஆன ஐந்து நாணயங்களை கைப்பையில் வைத்துகொள்ள பொருளாதார மேன்மை உண்டாகும்.
தொழில்:
உயர் மட்ட உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலும் உயர்ந்த பதவியை அடையக் கூடிய வாய்ப்பு உள்ளது. உத்தியோக அந்தஸ்து உயரும். பொறுப்புகளும் உயரும். ஆட்டோ மொபைல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். வண்டி வாகன தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். சுற்றுலா துறையைச் சார்ந்தவர்களும் தங்கள் தொழிலில் நிறைந்த லாபத்தைக் காண்பார்கள். ஆன்மீகத் தொழிலில் ஈடுபட்டவர்களும் சிறந்த லாபத்தைக் காண்பார்கள். பொதுவாக கன்னி ராசி அன்பர்களுக்கு, தொழிலில் சிறந்த முன்னேற்றம் காணும் தருணமாக இந்த சனிப் பெயர்ச்சி அமையும் என்றால் மிகை ஆகாது.
பரிகாரங்கள்:
- சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதத்தை உண்ண கொடுப்பதன் மூலம் தொழில் மேன்மை அடையலாம்.
- ஓடி தேய்ந்த குதிரை லாடத்தை வீட்டின் தலை வாசல் கதவின் நிலயில் மாட்டி வைக்க நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
படிப்பு:
கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடங்களை கிரகித்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பாக படித்து கல்வியில் தேர்ச்சி அடைவார்கள். கல்லூரி பருவத்தில் இருக்கும் மாணவர்களிடம் விளையாட்டுப் போக்கு காணப்படும். பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் தங்கள் துறையில் சிறப்பாக படித்து தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானம் துறை சார்ந்த மாணவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் தேடி வரும். கணிதம் சார்ந்த துறையில் இருக்கும் மாணவர்களுக்கும் தங்கள் துறையில் முன்னேற்றம் காண இயலும்.
பரிகாரங்கள்:
- புதன் கிழமைகளில் ஹயகிரீவர் சன்னதியில் தீபம் ஏற்றிவர மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
- ஹயக்ரீவர் ஸ்தோத்திரத்தினை தினமும் கேட்க அல்லது பாராயணம் செய்யவும்.
பொது பரிகாரம்
- இளம் பெண்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு பண்டங்களை தானமாக வழங்கவும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று முன்னேற்றம் காணுங்கள்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
Leave a Reply