ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருக்கும். மேலும் அவர்கள் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் வழக்கமாக இருக்கும். பக்தியுடன் செய்யும் எந்த ஒரு வழிபாடும் கடவுளால் ஏற்கப்படும். மற்றும் அந்த வழிபாட்டிற்கு உண்டான பலன்களும் கிட்டும். அப்படி வழிபாடு செய்யும் போது குல தெய்வம் நமது கண் முன்னே வந்து நின்றால் எப்படி இருக்கும். குல தெய்வம் நமது கண் முன்னே வருவது என்றால் நாம் கடவுள் படத்தில் அல்லது விக்கிரகத்தில் காண்பது போல சங்கு சக்கரம் ஏந்தியோ, சூலாயுதம் ஏந்தியோ விஸ்வரூபம் காட்டியோ கண் முன்னே தோன்றாது. 'தெய்வம் மனுஷ்ய ரூபேண...' -அதாவது, தெய்வம், மனித வடிவில் வரும் என்பது, முன்னோர் வாக்கு. ஆம்... பக்தியுடன் நாம் வழிபட்டால் தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு காட்சி அளிக்கும். அவ்வாறு கண் முன்னே குல தெய்வம் காட்சி அளிக்க ஒரு எளிய முறை ஒன்றை நாம் இங்கு காணலாம்.
இந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியாக செய்தால் போதும் குலதெய்வம் உங்கள் கண் முன்னே வந்து நின்று பேசும்.
நீங்கள் தினமும் குல தெய்வ வழிபாடு செய்தாலும், குலதெய்வத்தை காண செய்ய வேண்டிய வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்வதற்கு ஒரு வளர்பிறையில் நல்ல நாளாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வளர்பிறை வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினங்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பு.
ஒரு சுத்தமான சிகப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விரலி மஞ்சள் (நீட்டு மஞ்சள்), சிறிது கும்குமம், சிறிது விபூதி, சிறிது சந்தனம், சிறிது சாம்பிராணி, நீங்கள் குடியிருக்கும் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பிடி மண், ஒரு சிறிய கரித்துண்டு இவை அனைத்தையும் அந்த துணியில் போட்டு ஒரு கருப்பு நூலில் காட்டுங்கள். பின்னர் அதற்கு சாபிராணி தூபம் காட்டுங்கள். பின் வீட்டின் தலை வாசல் நிலைப்படியில் உள்புறம் கட்டித் தொங்க விடுங்கள். தினமும் அதற்கு ஊதுவத்தி மற்றும் கற்பூர ஆராதனை செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் நீங்கள் உங்கள் குல தெய்வத்தைக் காண இயலும். பக்தி மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் பக்தி சிரத்தையுடன் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் வெற்றியை அளிக்கும்.
Leave a Reply