Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
AstroVed Menu
AstroVed
search
search

வாழ்வில் சந்தோஷம் பொங்க செவ்வாய்க்கிழமை இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

June 9, 2023 | Total Views : 280
Zoom In Zoom Out Print

இந்தப் பூ உலகில் மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும் சந்தோஷமாக இருக்கத் தான் விரும்புவோம். ஆனால் வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சந்தோஷம் கிடைப்பதில்லை. அதற்காகப் போராடத் தான் வேண்டியிருக்கிறது. பிரச்சினை மற்றும் சிக்கல்களை சந்திக்கும் போது சந்தோஷம் காணாமல் போய் விடுகிறது. நல்ல கல்வி  திருமணம், குழந்தைப் பிறப்பு, பிள்ளைகளின் கல்வி,  வேலை, நல்ல உறவுமுறை இப்படி அனைத்திலும் நாம் சாதகமான விளைவுகளையே எதிர்பார்க்கிறோம்.  சீரான சிறப்பான குடும்ப வாழ்வை நாம் எதிர்பார்க்கிறோம். உறவினர்களுக்கு இடையே நல்லிணக்க உறவை மேற்கொள்ள நினைக்கிறோம்.ஆனால் நிஜத்தில் அது வேறு விதமாக அமைந்து விடுகிறது. இவை அனைத்தையும் தாண்டி சந்தோஷமாக வாழ ஓரு எளிய வழி உள்ளது. அது என்னவென்று இப்பொழுது காண்போம்.

இன்பமயமான வாழ்விற்கு செய்ய வேண்டிய பரிகாரம்: வாரம் தோறும் செவ்வாய்கிழமை அன்று ராகு காலத்தில் துர்கா தேவியை வழிபட வேண்டும். ராகு காலம் செய்ய முடியாதவர்கள் காலையிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஒரு மனை பலகையில் கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மீது வாழை இல்லை அல்லது வெள்ளித் தட்டில் அரிசியை பரப்பி அதன் மீது குத்து விளக்கு ஒன்றை வைக்க வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஐந்து முக தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த விளக்கை துர்கா தேவியாக பாவித்து மஞ்சள் கும்குமம் சாற்றி, அர்ச்சனை, நைவேத்தியம் செய்ய வேண்டும்.தூப தீப ஆராதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் செய்து வர பிரச்சினைகள் படிப்படியாக அகலும். வாழ்வில் முன்னேற்றத்தில் காணப்படும் துயரங்கள் துன்பங்கள் தடைகள் யாவும் நீங்கும். சந்தோஷம் பொங்கும்.  

banner

Leave a Reply

Submit Comment