Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

வெறும் 21 நாளில் உங்களுக்கு பிடிக்காத வாழ்க்கை கூட, பிடித்தமான வாழ்க்கையாக மாற இதை மட்டும் செய்யுங்கள்

June 13, 2023 | Total Views : 283
Zoom In Zoom Out Print

வாழ்க்கை என்பது எல்லா நேரத்திலும் வாசனை வீசும் நந்தவனமாக எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கைப் பாதையும் பூக்கள் நிறைந்த மிருதுவான பாதையாக இருப்பதில்லை. சில முட்களையும் எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

சில எதிர்பார்ப்புகள், அதனால் வரும் ஏமாற்றங்கள், நமக்குப் பிடித்த மாதிரியான வேலையோ சம்பளமோ கிடைக்கவில்லை என்ற கவலை,  உறவுகளில்  போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், குழந்தைகள் பற்றிய கவலை இப்படி ஏதாவது ஒன்று வாட்டிக் கொண்டிருக்கும் போது வாழ்க்கை பிடித்தமானதாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு எப்போது கேட்டாலும் என்னடா வாழ்க்கை இது என்ற சலிப்பு. ஏன் தான் நம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற  எண்ணம்.  இப்படி பிடிக்காத வாழ்க்கையை நாம் அறிந்தோ அறியாமலோ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த நிலை மாறுமா என்ற ஏக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த நிலை மாறவும் வாழ்க்கை பிடித்தமானதாக மாறவும் ஒரு எளிய வழி  அல்லது வழிபாடு உள்ளது. இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவ பெருமான், வேண்டுவோர் வேண்டியதை உடனே அருளும் வல்லமை மிக்கவர். எனவே நீங்கள் சிவன் ஆலயம் செல்லுங்கள். திங்கட்கிழமை  அன்று ஆரம்பிப்பது நல்லது. சிவனை மனமுருக வேண்டுங்கள். ஆலயத்தில் அமர்ந்து சிவ புராணம் படியுங்கள். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உங்கள் மனதில் அமைதி குடி கொள்ளும். நீங்கள் தெளிவான முடிவுகளை எடுக்க இயலும். உங்கள் நடவடிக்கைகளில் சிற்ப்பாகச் செயல்பட முடியும். ஆன்மீக  ரீதியாகவும் நீங்கள் மேம்பட இயலும். வாழ்க்கை உங்களுக்கு பிடித்தமானதாக  அமையும். அறிவியல் ஆராய்ச்சிப்படியும் நாம் ஒரு பயிற்சியை தொடர்ந்து 21 நாட்கள் மேற்கொண்டால் அது நிச்சயம் நடக்கும்.  ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே இதனை செய்யலாம். பூஜை அறை அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து சிவ பெருமானை மனதில் நினைத்து வழிபடுங்கள். பிறகு சிவபுராணம் பாராயணம் செய்யுங்கள். இதனை தொடர்ந்து 21 நாட்கள் செய்ய வேண்டும். மனதில் நம்பிக்கையுடன் இதை முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வாழ்க்கை பிடிக்க ஆரம்பிக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும். நிம்மதி சேரும்.

 

banner

Leave a Reply

Submit Comment