திருநள்ளாறில் டிசம்பர் 27, 2020ல் சனிப்பெயர்ச்சி:
நவ கிரகங்களுள் நடுநிலை தவறாமல், அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப நற்பலன்களையும் கெடு பலன்களையும் தவறாமல் அளிக்கும் நாயகனாக மக்கள் மனதில் குடி கொண்டு இருப்பவர் சனி பகவான். பல சிவாலயங்களின் நவக்கிரக சந்நிதியில், சனி பகவான் குடி கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தனக்கென தனி ஆலயம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் சனி பகவான். ஸ்ரீப்ரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் என்ற திருநாமத்துடன் விளங்கி இத்தலத்தில் தனி சந்நிதி கொண்டு அனுகிரக மூர்த்தியாக இவர் அருள் பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி வழிபாடு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.சனி பெயர்ச்சி டிசம்பர் 2020 குறித்து மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்குபெற்று பயன்பெறுங்கள்
"ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!"
ஆலயங்களில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள், வழிபாடு, போன்ற அனைத்து நிகழ்வுகளும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி தான் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கர்மாதிபதி என்றும் ஜீவனாதிபதி என்றும் கூறப்படும் சனி பகவான் தனது ஆதிக்க வீட்டில் ஆட்சி செய்யும் வகையில் சஞ்சாரம் செய்கிறார். இந்த பெயர்ச்சி அனைவருக்கும் வரவேற்கத்தக்க ஒன்று என்றே கூற வேண்டும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியின் பெயர்ச்சி நடக்கும் என்றாலும் இந்தப் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் முப்பது ஆண்டு சுற்றுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். மேலும் கால புருஷ ராசியின் தர்மாதிபதி குருவுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த சிறப்பான கிரக நிலை பன்னிரண்டு ராசிகளுக்கும் தரும் யோகம் என்னவென்று காண்போம் வாருங்கள்.
மேஷம்:
கால புருஷனின் முதல் ராசியாகிய மேஷ ராசியை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! இந்த சனி பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். சிறு சிறு கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் மீண்டு விடுவீர்கள். பண வரவு குறைவாக இருந்தாலும் பற்றாக்குறை இருக்க வாய்ப்பிலை. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கவனமும் மிகவும் அவசியம். பணியில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் அலட்சியப்போக்கு இருந்தாலும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். சுய தொழில் செய்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்களைக் காண இயலும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வாக்கில் நிதானம் தேவை. மாணவர்கள் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். சக மாணவர்களுடன் கவனமாகப் பழகுங்கள். தீய நட்புகளில் இருந்து விலகி விடுங்கள். படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டும் தான் நீங்கள் வெற்றி இலக்கை அடைய இயலும். திருமணம் குறித்த முடிவுகளை நிதானமாக அவசரப்படாமல் எடுக்க வேண்டும். விவசாயத் துறையிலிருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
ரிஷபம்:
சுக்கிரனின் ஆட்சி வீடாகிய ரிஷபத்தை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! இதுவரை நீங்கள் சந்தித்து வந்த கஷ்டங்கள் யாவும் விலகும் காலம் வந்து விட்டது. உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தான அதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பிள்ளைகள் மூலம் நீங்கள் பெருமை அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு மூலம் அந்த வேலையை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். மாணவர்களின் ஞாபகத் திறன் அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். வெளி நாடு செல்ல விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்:
உபய ராசியான மிதுனத்தை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! உங்கள் ராசிக்கு ஏழில் சஞ்சரித்த சனி பகவான் இந்தப் பெயர்ச்சியில் அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். கஷ்டகாலம் முழுமையாக நீங்காமல் பனிமூட்டம் போல உங்களை சுற்றி இருக்கும் என்றாலும் உங்களுக்கு இருந்து வந்த அவப் பெயர் நீங்கும். பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பம், வேலை, தொழில் என அனைத்திலும் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் பேச்சு தான் உங்கள் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமையும் என்பதால் உங்கள் பேச்சில் அதிக கவனம் தேவை. யாரிடமும் வாக்கு வாதம் செய்யாதீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் தலை தூக்கும். நிதானம் தேவை. வேலையில் இருப்பவர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு மந்த நிலை இருக்கும். ஞாபக சக்தி குறையும். கவனம் சிதறாமல் படிக்கவேண்டும்.
கடகம்:
கால புருஷனுக்கு நான்காம் ராசியாக விளங்கும் கடக ராசியை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! உங்கள் ராசிக்கு ஏழுக்கும் எட்டுக்கும் அதிபதியாக விளங்கும் சனி பகவான் இந்த பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். சற்று சங்கடங்களையும் தரத் தான் போகிறார். எதிலும் நேர்மையாகச் செயல்படுங்கள். புயலுக்குப் பின் அமைதி என்பது போல சங்கடங்களுக்குப் பிறகு நீங்கள் சாதனைகளையும் படைக்க முடியும் கணவன் மனைவி பிரச்சினை தலை தூக்கும். கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். நல்ல நண்பர்கள் சகவாசம் தேடி அமைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. அவப் பெயர் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் பேச்சில் நிதானம் தேவை. மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். தொழில் செய்பவர்கள் குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்துச் செயல் பட வேண்டும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும்
சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே! சிங்கம் போல கர்ஜிக்கும் சிறப்பான நேரமாகத் தான் இந்த சனிபெயர்ச்சி உங்களுக்கு அமையப் போகின்றது. ஆறில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறார் என்றாலும் நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது. உங்கள் செல்வாக்கு கூடும். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை பிறக்கும். ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாகப் பழகும் காலக் கட்டமாக இந்த பெயர்ச்சிக் காலம் அமையும். நீங்கள் வேலைதேடிக் கொண்டிருப்பவர் என்றால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எதிர்பாராத முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அரசியலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களில், குறிப்பாக இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு இந்த பெயர்சிக் காலம் மிகவும் சாதகமான காலம் ஆகும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று உயர் கல்வியை விருப்பம் போல படிப்பீர்கள். திருமண முயற்சிகள் சிறிய தடங்கலுடன் வெற்றியைஅளிக்கும்.
கன்னி:
கால புருஷ ராசிக்கு ஆறாவது ராசியாக விளங்கும் கன்னி ராசியை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று கூறப்படும் ஐந்தாம் ராசியாகிய மகரத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். இதுவரை உங்கள் சுக போக வாழ்வில் பல சங்கடங்களை அளித்த சனி பகவான் தற்பொழுது உங்கள் சங்கடங்களை தீர்த்து சந்தோஷத்தை தரவிருக்கிறார். நீங்கள் வாழ்வில் ஏற்றம் பெறப் போகிறீர்கள். என்றாலும் நீங்கள் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். குழந்தைப் பேறு வேண்டுபவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருக்க முயல வேண்டும். திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் படிக்க வேண்டும்.
துலாம்:
தராசைக் குறியாகக் கொண்ட துலாம் ராசியை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! உங்கள் ராசிக்கு நான்காம் இடமாகிய கேந்திர ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி ஆகிறார். எனவே உங்கள் தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்வது கொள்வது நல்லது. உங்கள் மனதில் மந்த நிலை இருக்கும். நீங்கள் சோம்பலை தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வேலை தேடுபவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு வேலையை விடாமல் பணியாற்ற வேண்டும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேறுவார்கள். பகைவர்கள் விலகுவார்கள். வெற்றி பெற இயலும். மாணவர்கள் கவனமாகப் படித்தால் தான் படிப்பில் வெற்றி காண முடியும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
விருச்சிகம்:
கால புருஷனின் எட்டாவது ராசியாகிய விருச்சிகத்தை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில், அதாவது தனது சொந்த வீடாகிய மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு தைரியத்தை அளிப்பார். உங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை கிட்டும். கணிசமான பண வரவு இருக்கும். ஆனால் செலவுகளை கட்டுபடுத்த வேண்டும். கடன் கொடுப்பதும் வாங்குவதும் கூடாது. குடும்பத்தில் குதூகலம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இது நாள் வரை வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் கிட்டும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். உடன் வேலை செய்பவர்களிடம் அனாவசியமாக எந்த வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். தொழில் செய்வார்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள். தொழிலை விரிவு படுத்த எண்ணுபவர்களின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் என்பதால் கவனமாகப் படிக்க வேண்டும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்.
தனுசு:
தனுசு ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்த பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கவிருக்கிறார். இரண்டாம் வீடு என்பது உங்கள் பணம் மற்றும் குடும்பத்தைக் குறிக்கும். உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டின் அதிபதியான சனி பகவான், தனது சொந்த மற்றும் ஆட்சி வீடாகிய மகர ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் மனதில் தன்னம்பிக்கை பெருகும். பண வரவு சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். இளைய உடன் பிறப்புகளின் வாழ்வில் முன்னேற்றம் கிட்டும். மனதில் தைரியம் கூடும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தடைகளை எல்லாம் நீக்கும் தைரியம் உங்கள் மனதில் உருவாகும். சனி பகவான் அருளால் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த துன்பங்கள், குடும்ப குழப்பங்கள்,,சஞ்சலங்கள், பொருளாதார வீழ்ச்சி, பிரச்சினைகள் நீங்கி மனதில் நிம்மதி பெருகும். தொழில் செய்பவர்கள் பொருளாதார சீர்குலைவு நீங்கினாலும் சற்று கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். பயணங்கள்மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகம் செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும்
மகரம்:
சனி பகவான் ஆட்சி வீடாக இருக்கும் மகர ராசியை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சரிப்பதால் இந்தக் காலக் கட்டம் உங்களுக்கு ஜென்மச் சனி காலம் ஆகும். எனவே உங்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் குறையும். குடும்பத்தில் பிரச்சினைகள் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். உடல் நலம் பாதிக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை தேடுபவர்களுக்கு பொறுமை தேவை. வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடத்தில் கவனமாகப் பழக வேண்டும். சொந்த தொழில் செய்பவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கூட்டாளி உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மந்த நிலை இருக்கும். படிப்பில் கவனம் தேவை உயர்கல்வி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் விரும்பிய படிப்பில் சேர இடம் கிடைப்பது சிறிது கஷ்டமான விஷயம்தான். அரசியல்வாதிகள் மாற்றங்களை சந்திப்பார்கள். திருமண முயற்சி செய்ய விரும்புபவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமை காக்காக் வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்த பெயர்ச்சிக்குப் பிறகு அயன சயன போகம் மற்றும் விரய ஸ்தானம் என்று கூறப்படும் 12-ம் இடமான மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இது வீண் விரயம் ஏற்படும் காலம். உங்கள் குடும்ப விஷயம் குறித்து மூன்றாவது நபரிடம் ஆலோசனை கேட்காதீர்கள். இது சோதன காலம் என்பதால் குறுக்கு வழிகளை விட்டு விட்டு நேர் வழியில் செல்லுங்கள். எல்லா விஷயங்களிலும் அடக்கம், பணிவு, பொறுமை அவசியம் தேவை. உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளமும் கிடைத்துவிடும். ஆனால் செலவுகளும் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலை அப்படியே வழி நடத்தி செல்வது நல்லது. சங்கடங்களும் சோதனையும் நிறைந்த காலம் என்றாலும் உங்களுக்கு தேவைப்படும் மன வலிமையையும் அந்த சனி பகவானே அளிழித்துவிடுவார் என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயம். அடக்கம் பணிவு, பொறுமை மிகவும் அவசியம்.
மீனம்:
மோட்ச ராசி என்று கூறப்படும் மீன ராசியை ஜென்ம ராசியாகக் கொண்ட அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், இந்த பெயர்ச்சியில் லாப ஸ்தானம் என்று கூறப்படும் பதினொன்றாம் வீட்டில் அதாவது தனது சொந்த வீடான மகர ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிரார். எனவே இந்த பெயர்ச்சி உங்களுக்கு லாபம் அளிக்கும் பெயர்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். வாழ்வில் மேன்மை கிட்டும். நீங்கள் பல வகையிலும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள். என்றாலும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வீடு வாகன வசதிகள் அமையும். நீங்கள் விரும்பும் இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவை கிட்டும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிட்டும். தொழிலை விரிவு படுத்த ஏற்ற நேரமாக இந்த பெயர்ச்சி இருக்கும். வங்கிக் கடன்கள் கிட்டும். திருமணத் தடைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை காணப்படும். குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகள் வளர்ப்பில் கவனம்,கண்டிப்பு, அக்கறை தேவை.மாணவர்கள் சோம்பலை அறவே நீக்க வேண்டும். கடினமாக உழைத்துப் படிக்க வேண்டும்.
Leave a Reply