கன்னி ராசியில் பிறந்தவர்கள் யதார்த்தமாக நடந்து கொள்வார்கள். எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள், சிறு விஷயங்களிலும் முழுமையை நாடுபவர்கள். சூழ்நிலை எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் அதை சமாளிக்கும் திறமை இவர்களிடம் இருக்கும். வணிக உணர்வு, பலதரப்பட்ட திறமைகள், கூர்மையான புத்தி இவர்களின் அடையாளமாகும்; ஆனால் மனநிலையிலும் விருப்பங்களிலும் அடிக்கடி மாற்றம் காணப்படும். நிர்வாகம், சட்டம், கணிதம், கணக்கியல் போன்ற துறைகளில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மேற்கொள்வதும், பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுவதும் இவர்களின் இயல்பான தன்மையாகும்.
சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வது நல்ல ஆரோக்கியத்தையும் தம்பதியருக்குள் நல்ல ஒற்றுமையையும் அளிக்கும். ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது நல்ல நித்திரை, மன அமைதி மற்றும் குடும்பத்தில் ஆரோக்கியத்தை வழங்கும். தினமும் அல்லது குறைந்தபட்சம் புதன்கிழமையும் சனிக்கிழமையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஜபிப்பது நல்ல பலன்களை அளிக்கும்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
உத்தியோகத்தில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகத்தில் மேன்மை பெற : கேது பூஜை
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர்பூஜை
கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : மகா விஷ்ணு பூஜை
சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, நவம்பர் டிசம்பர்.
சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட், அக்டோபர், செப்டம்பர்.