Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

கனவு பலன்கள், Kanavu Palangal, Kanavu Palan in Tamil

April 2, 2020 | Total Views : 7,455
Zoom In Zoom Out Print

கனவு

கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். தான் கண்ட கனவுகளுக்கு பலன் என்ன என்று நாம் பல தடவை யோசிக்கிறோம். காலப் போக்கில் அவற்றை அப்படியே விட்டு விடுகிறோம். கனவுகள் வருவது மனித இயல்பு. காணும் ஒவ்வொரு கனவும் வாழ்க்கையில் நாம் செய்யும், செய்யத் தவறும் விஷயங்களை நமக்கு நினைவுப்படுத்துபவை. அதற்காக நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எதற்காக இப்படி கனவு வந்தது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்’’ என்கிறார் இயான் வாலஸ். ஒவ்வொரு இரவிலும்  90 நிமிடங்களிலிருந்து இரண்டு மணிநேரம் வரை அல்லது அதற்கும் மேலாக ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். கனவுகள் எப்பொழுதுமே நேரடியான அர்த்தங்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

உளவியலும் கனவுகளும்:

ஒருவருடைய கனவுக்கு ஒரு காரணி, காரணம் மட்டுமல்ல, பல காரணங்கள் இருக்கலாம். கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம்.  சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம். கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். சிக்மண்ட் ஃபிராய்ட் என்பவர் தான் கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அணுகி  விளக்கம்  கொடுத்தவர். அதற்கு பின் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன.

ஜோதிடமும் கனவுகளும்:

ஜோதிட ரீதியாக கனவுகளுக்கு உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல், கோள்களின் திசை புத்தி காலங்கள்.. எதைப் பற்றியாவது அதிகமாக நினைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டு இருத்தல், எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினைகள், உடலில் உள்ள ரகசிய நோய்கள், பிறருடன் முன் கொண்டுள்ள பழக்கம் மற்றும் விரோதம் .

நல்ல கனவுகள்:

ஆலயங்கள், அழகிய இளம் பெண்களா, மலர்கள், குழந்தைகள், கனிகள், பசுமையான வயல்கள் இவற்றைக் காண்பது சுபம்.

தெய்வங்கள், வேதம் கற்றவர்கள், பசுக்கள், எருதுகள், உயிருடன் உள்ள உறவினர்கள், அரசர்கள், நல்ல மனிதர்கள், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், வெண்ணிற ஆடையுடன் புன்னகை பூக்கும் சிறுவர்கள், அசுரர்கள், புத்திமான்கள், உற்சாகமானவர்கள், குடைகள், முகம் பார்க்கும் கண்ணாடி, மாடி வீடு, வீட்டின் கூரைகள், பழங்கள் காய்த்து தொங்கும் மரங்கள்,  ஆறு, கடல், ஆபத்தில் இருந்து தப்பித்தல், பித்ருக்கள், கீழே இருந்து மேலே எழுந்து கொள்ளல் இது போன்றவை சுப கனவுகள் ஆகும். கனவில் இவைகள் வந்தால் நன்மை, செல்வம் மற்றும் ஆரோக்கியம் கிட்டும்.

அசுப கனவுகள்:

இறந்த உடல்கள், நீரினால் வழுக்கி விழுதல், மேலிருந்து  கீழே விழுதல் , தண்ணீரால் இழத்துச் செல்லபப்டுதல்,உடலில் எண்ணெய் பூசியிருப்பது, வயதாவது  போன்ற காட்சி,மது அருந்துதல், இரும்பு தங்கம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளுதல், சிவப்பு நிற உடை அணிந்த மனிதர்கள், வாந்தி எடுத்தல், பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், சண்டையில் தோற்றுப் போதல், விவாதத்’தில் தோற்றுப் போதல், செருப்பு தொலைந்து போதல், வயதில் மூத்தவர்களுடன் சண்டை, இருளான பகுதிக்கு செல்லுதல், இறந்த உடல்கள், பிசாசு வடிவங்கள், வழி தவறி கரடு முரடன பாதை மற்றும் முள் இருக்கும் பாதையில் செல்லுதல்,விபத்துக்களில் சிக்கிக் கொள்ளுதல் போன்ற கனவுகள் தீய கனவுகள் ஆகும். 

கனவுகளின் பலன்  (Kanavu Palangal)

உளவியல் ரீதியாக  கனவு காண்பவருடைய அடி மனம் வரை தெரிந்தால் தான் கனவுக்கான அர்த்ததை கூற முடியும். ஆனால், சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கும். அவற்றுக்கு சற்றேறக்குறைய ஒரே அர்த்தம் இருக்கக்கூடும். அதே போல தற்கால வாழ்க்கை சூழல் கலந்த கனவுகளும் ஆராயப்பட்டுடள்ளன. 
நாம் மேலே ஏறுவது போல கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறலாம்.
கீழே விழுவது போல கனவு கண்டால் நாம் பிறரை சார்ந்து இருப்பதையும் உதவி கிடைப்பதில் சிரமம் இருப்பதையும் குறிக்கும்.

குயில் இனிமையான குரலில் கூவுவது போல கனவு கண்டால் இனிய மனைவி அமைவாள்.

சூரியன் சந்திரன் கனவில் வந்தால் ஆரோக்கியம் கூடும்.

தெளிந்த நீரைக் கண்டால் நம் மனம் தெளிவாக இருக்கிறது என்று அர்த்தம். பொங்கிப் பெருகும் நீரைக் கண்டால் நாம் குழப்பத்தில் உள்ளோம் என்று அர்த்தம்.

பூச்சி அல்லது அட்டை கடிப்பது போல கனவு கண்டால் செல்வம் அல்லது குழந்தை சேரும்.

பயன்படுத்தாத அறை அல்லது இடத்தைக் கண்டால், வாழ்க்கையில் நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். உங்களுக்கான தனிப்பட்ட திறமையை இப்போதுதான் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தேர்வுகளில் தோல்வி, மேடைப் பேச்சுகளில் சொதப்புவது மாதிரியான கனவுகள் வந்தால், நாம் ஒரு விஷயத்தில் அதிகமாகக் குழம்பிப் போய் இருக்கிறோம் என்று பொருள். 

பறப்பதுபோல் ஒருவருக்குக் கனவு வந்தால், அவர் வாழ்க்கையில் மிகச் சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்திருக்கலாம், இல்லையென்றால், இனி வரும் காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சுதந்திரமான முடிவை எடுக்கப்போகிறார் என்று பொருள். 

சிறுநீர் கழிக்கவேண்டிய நிர்ப்பந்தம்; ஆனால், கழிப்பிடம் கிடைக்காமல் அவஸ்தைப்படுவது போல கனவு வந்தால், அவர் தன்னுடைய பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் சங்கடத்தில் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்தச் சரியான சூழல் கிடைக்காதவராக அவர் இருக்கிறார் என்று அர்த்தம்.

பற்கள் அல்லது சிலைகள் போன்ற வேறு பொருட்கள் கீழே விழுவது போல கனவு வந்தால் தன்னம்பிக்கை குறைவைக் காட்டும்.

ஒரு விலங்கோ அல்லது ஒரு விஷயமோ அடிக்கடி துரத்துவதுபோல  கனவு வந்தால்  நாம் நிர்ணயத்து வைத்திருக்கும் இலக்கை நோக்கி நாம் பயணிக்காமல் இருக்கிறோம் என்பதை நம் ஆழ் மனதில் பதிந்து போயிருக்கிறது என்று அர்த்தம். 

நம்மை யாரோ துரத்துவது போல கனவு கண்டால் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தப்பிக்க நினைக்கிறோம் என்று அர்த்தம்.

ஒரு கார், விமானம், ரயில் அல்லது கப்பல், நம்  கனவில் உள்ள வாகனங்கள் நம்முடைய வாழ்க்கையில்  எந்த திசையை நோக்கி பயணம் மேற்கொள்கிறோம் என்பதை பிரதிபலிக்க முடியும். அது போல, அந்த வாகனத்தின் போக்கைப் பொறுத்து   நாம் எவ்வளவு தூரம் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து  கொள்ளலாம். 

நாம் இறப்பது போல கனவு வந்தால் புதிய ஒன்றை தொடங்கப் போகிறோம் என்று அர்த்தம்.

உயரத்தில் இருந்து கீழே விழுவது போல கனவு வந்தால் நாம் சில விஷயங்களை அல்லது உறவுகளை இஷ்டம் இன்றி பிடித்து வைத்திருப்பதாக அர்த்தம்.

படிப்பை முடித்த பின்னும் பள்ளி அல்லது கல்லூரி செல்வது போல தேர்வு எழுதுவது போல கனவு கண்டால் நாம் நமது அனுபவத்தில் இருந்து இன்னும் சில பாடங்களை கற்க வேண்டும் என்று அர்த்தம்.

கனவுக்கு பின் என்ன செய்ய வேண்டும்.:

நல்ல கனவுகள் வந்தால் உடனடியாக எழுந்து குளித்து இறைவனை வணங்கி பின் அந்த இரவு முழுவதும் தூங்காமல் கழிக்க வேண்டும். கெட்ட கனவுகள் காண நேர்ந்தால்எழுந்து கை கால் சுத்தம் செய்து திருநீறு அணிந்து தெய்வ நாமத்தை 12 தடவை உச்சரித்து வணங்க வேண்டும்.

கனவுகள் எப்பொழுது பலிக்கும்:

ஒரு இரவு என்பது  நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்தில் பலிக்கும்

இரண்டாம் ஜாமத்தில் கண்ட கனவு  எட்டுமாதத்திற்குள் பலிக்கும்

மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு மூன்று மாதத்திற்குள் பலிக்கும்

நான்காம் ஜாமத்தில் கண்ட கனவு பத்து நாட்களுக்குள் பலிக்கும்

அதிகாலைக் கண்ட கனவு உடனடியாக பலிக்கும்

பலன் தராத கனவுகள்

பகல் நேரத்தில் காணும் கனவுகள்

காலை எழுந்தவுடன் மறந்து விடும் கனவுகள்

நீண்ட நேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள்

நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள் 

கனவு கண்டவுடன் தூங்கிவிட்டால் கனவின் பலன் குறைவு

தீய கனவு கண்டால் இறை பிரார்த்தனை ஜெபம் , வழிபாடு முதலியவற்றைசெய்ய வேண்டும்.

banner

Leave a Reply

Submit Comment