Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

April 2, 2025 | Total Views : 288
Zoom In Zoom Out Print

பொதுப்பலன் :

உங்கள்  ராசியிலிருந்து 10 ஆம் வீடாகிய மிதுனத்தில் மே 15, 2025 அன்று குரு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி   ஜூன் 2, 2026 அன்று வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ராசிக்கு   2வது வீடு, 4வது வீடு மற்றும் 6வது வீட்டில் குருபகவானின் பார்வை இருக்கும்.

தொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும். உங்கள் நிர்வாகத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் தொழில் விரிவாக்கம் மேற்கொள்ள எண்ணலாம். ஆனால் நீங்கள் பல தடைகளை சந்திக்க நேரும். என்றாலும் உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிட்டும். நீங்கள் சரியான பாதையில் பயணிப்பீர்கள். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டலாம்.

கணவன் மனைவி உறவில் சில மோதல்கள் வரலாம். உங்கள் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நீங்கள் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்க வெளிப்படையான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். தரமான வாழ்க்கை முறை பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதன் மூலம் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

மாணவர்கள் ஈடுபாட்டுடன் கல்வி பயில்வதன் மூலம் நல்ல முறையில் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். இந்த காலக்கட்டம் உங்களுக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை ஸ்திரமானதாக இருக்கும். நீங்கள் படிப்படியாக ஏற்றம் காணலாம். பணத்தை நீங்கள் திறமையுடன் நிர்வகிப்பீர்கள்.  சேமிக்கவும் செய்வீர்கள். எனவே நீங்கள் பாதுகாப்பான நிதி நிலை இருப்பதை உணர்வீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது சவாலான காலக்கட்டமாக இருக்கும். பணியிடச் சூழல் அதிக சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.  நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்கள் பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்தை தீர்மானிக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உங்கள் உத்தியோகப்  பாதையில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக இருக்கும், அது வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

காதல் / குடும்ப உறவு

வீட்டில் உள்ள பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அதன் மூல நீங்கள் பயன் அடைவீர்கள். நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அன்பான உரையாடல், பிணைப்புகளை வலுப்படுத்தும். குடும்பத்தில்  நடைபெறும் கலந்துரையாடல்களில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். உங்கள் துணையும் உங்கள் மனம் மகிழும் வகையில் நடந்து கொள்ளலாம். உங்கள் காதல் காலப்போக்கில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

திருமண வாழ்க்கை

கணவன் மனைவி இணக்கமாக இருக்க இயலாமல் பல தடைகள் வரலாம். உங்களைச் சுற்றி இருக்கும் சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் உறவு நிலை காணப்படும். சில சமயங்களில் எளிய உரையாடலே சூடான வாக்குவாதமாக மாறலாம். அதனால் நீங்கள் உணர்ச்சி வசப்பட நேரலாம்.  தவறான புரிதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டை சச்சரவுகள் எழலாம். உங்கள் துணையின் எண்ணத்திற்கேற்ப செயல்படுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். பொறுமை மிகவும் அவசியம். சில சங்கடமான சூழ்நிலைகள் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கலாம். குடும்ப பொறுப்புகள், நிதி சார்ந்த விஷயங்கள் குறித்த கவலைகள் காரணமாக இந்த சூழ்நிலைகள் இருக்கலாம்.

நிதிநிலை

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நன்றாக சம்பாதிக்கலாம்.  கிடைக்கும் வருமானத்தை சேமிப்பது தான் புத்திசாலித்தனம். சிறந்த முதலீட்டு திட்டங்களில் பணத்தை சேமிக்க முயலுங்கள். உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவி புரிவார்கள். அவர்களின் உறுதியான ஆதரவு கடினமான காலங்களில் உங்களுக்கு கை கொடுக்கும்  

மாணவர்கள்

அனைத்துத் தரப்பு மாணவர்களும் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். குறிப்பாக  இளங்கலை மாணவர்கள் சிறந்த தரங்களைப் பெறலாம் மற்றும் ஆசிரியர்களிடம் நற்பெயரைப் பெறலாம். என்றாலும் முதுகலை மாணவர்களுக்கு கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும். இந்த கட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தேவைப்படலாம்.   மாணவர்கள் கல்வி கற்க தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.. ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை முடிக்க கணிசமான அளவு கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்  

உங்கள் உடல்நிலை சீராக இருக்கலாம். ஆரோக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினசரி தியானம் நல்ல மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை மௌனம் கடைப்பிடிப்பது மற்றும் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவது பதட்டத்தைக் குறைக்கும். உங்களின் கவனத் திறனை மேம்படுத்தி அமைதியைத் தரும்.

 

banner

Leave a Reply

Submit Comment