Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

அனுமன் ஜெயந்தி அன்று இதை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு

December 7, 2019 | Total Views : 1,726
Zoom In Zoom Out Print

அனுமன் ஜெயந்தி:

குஞ்சரன் என்னும் சிவ பக்தனின் மகளாகிய அஞ்சனை எனும் அஞ்சனா தேவிக்கு சிவ பெருமான் அருளால் மார்கழி மாதம்  “மூலம்”  நட்சத்திர நாள் அன்று ஆஞ்சநேயர் பிறந்தார். இவருக்கு மாருதி அனுமார், ஹனுமான், சிரஞ்சீவி என்ற பெயர்களும் உண்டு. இவரை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.  வைணவக் கோவில்களில்  அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. பல இடங்களில் இவருக்கு தனிக் கோவிலும் அமைத்துள்ளனர். 

சதா சர்வ காலமும் ராமரையே நினைத்துக் கொண்டு அவர் நாமத்தையே ஜெபித்துக் கொண்டும் தன் பக்தியை உணர்த்திய ஆஞ்சநேயர், தன் மார்பையும் பிளந்து அதில் சீதா சகிதமாய் ராமர் இருப்பதை வெளிப்படுத்தி பக்தியின் உச்சத்தை தொட்டுவிட்டார். பக்திக்கு சிகரமாய் விளங்கும் அனுமன் பிறந்த நாளே அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகின்றது. அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி.

பொதுவாக தெய்வங்களின் அவதார நாள் அன்று அந்தத் தெய்வங்களை ஆராதிப்பதும், பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்துவதும், விரதம் இருப்பதும் தொன்று தொட்டு நாம் கடைபிடித்து வரும் சடங்கு என்று கூடக் கூறலாம்.

ராம நாம மகிமை:

அனுமன் என்றாலே ராமர் என்பது தனித்து பிரிக்க முடியாதது. அனுமன் வழிபாட்டில் ராம நாம ஜெபத்தை விட சிறந்த ஒன்று இருந்து விட முடியாது.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூரண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

எங்கெல்லாம் ராம நாமம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அனுமன் சூட்சும ரூபத்தில் வந்து அருள் புரிகிறார்.

எனவே தாரக மந்திரமாகிய ராம நாம ஜெபம் எல்லா வகையான பேறுகளையும் அளிக்க வல்லது. ராம நாம ஜெபம், அனுமன் ஜெயந்தி அன்று  செய்வது மிக நல்லது. உடல் மன வலிமை, ஆத்ம பலம், என அனுமனின் அளவில்லாத அருள் கிட்டும்.

வெற்றியை அளிக்கும் ஜெய பஞ்சகம்:

தசரதன் மைந்தனாகிய ரகுராமன், தந்தை சொல் காப்பாற்ற சீதையுடன் வனம் வந்து சீதையை ராவணன் கவர்ந்து செல்ல , அவள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கும் பொறுப்பை அனுமன் மேற்கொள்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறார். சீதா தேவியை  கண்டுபிடிக்க கடலை தாண்டுவதற்கு முன் அவர் கூறிய சுலோகம்  சுந்தரகாண்டத்தில் உள்ளது. இதனை “ஜெய பஞ்சகம்” என்று கூறுவார்கள். இந்த “ஸ்ரீ ஜெய பஞ்சகம்” சொல்லி ஆஞ்சநேயரை வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். காரியங்களில் வெற்றி கிட்டும். அனுமன் மனம் மகிழ்ந்து வேண்டும் வரங்களை அளிப்பார்.

ஜெய பஞ்சகம்

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஷ்ச மஹாபலஃ.

ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ ৷৷

தாஸோஹஂ ம்கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ.

ஹநுமாந்ஷத்ருஸைந்யாநாஂ ம் நிஹந்தா மாருதாத்மஜஃ ৷৷

ந ராவணஸஹஸ்ரஂ மே யுத்தே ப்ரதிபலஂ ம்பவேத்.

ஷிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஷ்ச ஸஹஸ்ரஷஃ৷৷

அர்தயித்வா புரீஂ ம்லங்காமபிவாத்ய ச மைதிலீம்.

ஸமரித்தார்தோ கமிஷ்யாமி மிஷதாஂ ம் ஸர்வ ரக்ஷஸாம்৷৷

தஸ்ய ஸந்நாதஷப்தேந தேபவந்பயஷங்கிதாஃ.

ததரிஷுஷ்ச ஹநூமந்தஂ ம் ஸந்த்யாமேகமிவோந்நதம் ||

 

ராம நாராயணம்:

ராமாயணத்தை தினமும் ஒருமுறை படித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் தினமும் ராமாயணத்தை முழுவதுமாகப் படிக்க முடியுமா என்றால் முடியாது என்று தான் கூற முடியும்.  என்றாலும்  அதற்கும் ஒரு மாற்று வழி உண்டு. ராமாயணத்தை முழுமையாக படித்த பலனைப் பெற கீழ் கண்ட ஸ்லோகங்களை ஒருமுறை தினமும் பாராயணம் செய்தால் அது முழு ராமாயணத்தையும் படித்ததற்கு சமம் என்று கூறுவார்கள்.  படிக்க முடியாவிட்டாலும் இதைக் கேட்டாலும் பலன் தரும்.

 

பால காண்டம்

ஸூக்தப் பிரும்ம பராத்பர ராம்       காலாத்மக பரமேஸ்வர ராம்

ஷேஷதல்ப ஸுக நித்ரித ராம்       பரஹ்மாத்மயமர பிராப்தித ராம்

சண்டகிரண குல மண்டன ராம்        ஸ்ரீமத் தசரத நந்தன ராம்

கௌசல்யா ஸுக வர்தன ராம்        விஸ்வாமித்ர பிரயதன ராம்

கோர தாடகா காதக ராம்             மாரீசாதி நிபாதக ராம்

கௌசிக மகஸம் ரஷக ராம்          ஸ்ரீமதஹல்யோத் தாரக ராம்

கௌதமமுனி ஸம்பூஜித ராம்         ஸ்ரீரமுனிவரகண ஸம்ஸ்துத ராம்

நாவிக தாவித ம்ருதுபத ராம்          மிதிலாபுரஜன மோஹக ராம்

விதேக மானஸ ரஞ்ஜக ராம்          த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம்

ஸூதார்பித வர மாலிக ராம்          க்ருதவை வாஹிக கௌதுக ராம்

பார்கவ தர்ப்ப வினாஸக ராம்         ஸ்ரீமதயோத்யா பாலக ராம்

அயோத்யா காண்டம்

அகனித குணகண பூஷித ராம்         அவனீதனயா காமித ராம்

ராகசந்த்ர ஸமானன ராம்             பித்ருவாக்யச்ரித கானன ராம்

ப்ரியகுஹ வினிவே திதபத ராம்       தத்ஷாலிதநிஜ ம்ரிதுபத ராம்

பரத்வாஜ முகனந்தக ராம்             சித்ரகூடாத்ரி நிகேதன ராம்

தஸரத ஸந்தத சிந்தித்த ராம்         கைகேயி தன யார்தித ராம்

விரஜித நிஜப்பித்ரு கர்மக ராம்        பாரதார்பிதநிஜ பாதுக ராம்

ஆரண்ய காண்டம்

தண்டகாவனஜன பாவனா ராம்        துஷ்ட விராத வினாசன ராம்

ஸரபங்க ஸூதீஷண அர்சித ராம்     அகஸ்த்யா னுக்ரஹ வர்த்தித ராம்

க்ரித்ராதிப ஸம்வேவித ராம்          பஞ்சவடி தட ஸூஸ்திக ராம்

சூர்பணகார்த்தி விதாயக ராம்          கரதூஷணமுக ஸூதக ராம்

ஸீதாப்ரிய ஹரி ணாணுக ராம்        மாரிசார்த்தி க்ருதாஸூக ராம்

வினஷ்ட ஸூதான் வேஷக ராம்      க்ருத்ராதிப கதி தாயக ராம்

ஸபரி தத்த பலாஸன ராம்           கபன்த பாஹீச் சேதக ராம்

கிஷ்கிந்தா காண்டம்

ஹனுமத் ஸேவித நிஜாவ்பத ராம்     நதஸூக்ரீவா பிஷ்டத ராம்

கர்வித வாலி சம்ஹார ராம்           வானர தூதா ப்ரேஷக ராம்

ஸுந்தர காண்டம்

குபிவர ஸன்தக ஸம்ஸம்ருத ராம்    தத்கதி விக்ன த்வம்சக ராம்

ஸீதா ப்ராணா தாரக ராம்             துஷ்ட தாஸனன தூஷித ராம்

ஷிஷ்ட ஹனுமத் பூஷித ராம்         ஸீதாவேதித ககவன ராம்

க்ருத சூடாமணி தர்ஸன ராம்         கபிவர வசனாஸ் சாந்தித ராம்

யுத்த காண்டம்

ராவண நிதன ப்ரஸ்தித ராம்          வானர ஸைன்ய ஸமாவ்ருத ராம்

சோஷித ஸரிதீ ஸார்த்தித ராம்       விபீஷணாபய தாயக ராம்

பர்வத ஸேது நிபன்தக ராம்           கும்பகர்ண சிரஸ் சேதக ராம்

ராக்ஷஸ ஸங்க விமர்தக ராம்        ஹஹி மஹி ராவண சராண ராம்

சம்ஹ்ருத தஸமுக ராவண ராம்      விதிபவமுகஸூர ஸம்ஸ்துத ராம்

ஸ்வஸ்தித தஸரத விஷித ராம்

ஸூதா தர்ஸன மோதித ராம்

அபீஷ்க்த விபீஷண நத ராம்          புஷ்பக யானா ரோஹண ராம்

பாரத்வாஜாபி நிஷேவண ராம்         பரத ப்ராண ப்ரியகர ராம்

ஸாகேதாபுரி பூஷண ராம்             ஸகல ஸ்வீய ஸமானத ராம்

ரத்ன லஸத் பீடாஸ்தித ராம்          பட்டாபிஷே காலங்கித ராம்

பார்த்திலகுல ஸம்மானித ராம்        விபீஷணார்பித ரங்கக ராம்

கிஸகுலானுக ஹகர ராம்             ஸஹலஜீவ ஸம்ரஷக ராம்

ஸமஸ்த லோகா தாரக ராம்

உத்தர காண்டம்

அஹத முனிகண ஸம்ஸ்துத ராம்     விஸ்ருத தஸகண்டோத்பவ ராம்

ஸீதாலிங்கன நிரவ்ருத ராம்           நீதி ஸூரஷித ஜனபத ராம்

விபீன த்யாஜித ஜனகஜ ராம்          காரித லாவணா ஸூரவத ராம்

ஸ்வர்கத ஸூம்புக ஸம்ஸ்துப ராம்   ஸ்வதனய குஸல வநன்தித ராம்

அஸ்வமேது க்ரது தீஷித ராம்         காலாவேதித ஸூரபத ராம்

அயோத்யா கஜன முக்தித ராம்        விதிமுக விபுதா நந்தக ராம்

தேஜோமய நிஜரூபக ராம்             ஸம்ஸ்ருதிபந்த விமோசக ராம்

தர்மஸ்தாபன தத்பர ராம்             பக்தி பாராயண முக்தித ராம்

ஸர்வஸராசர பாலக ராம்             ஸர்வ பவாமய வாரக ராம்

வைகுண்டாலய ஸம்ஸ்தித ராம்      நித்யானந்த பதஸ்தித ராம்

ராம ராம ஜெயா ராஜா ராம்           ராம ராம ஜெயா ஸீதா ராம்

மங்களம்

பயஹர மங்கள தஸரத ராம்          ஜயஜய மங்கள ஸீதா ராம்

மங்களகர ஜய மங்கள ராம்           ஸங்கத ஸூபவிபவோ தய ராம்

அனந்தாம்ருத வர்ஷக ராம்           ஆஸ்ரித வத்ஸல ஜய ஜய ராம்

ரகுபதி ராகவா ராஜாராம்              பதீத பாவன ஸீதா ராம்

ஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்

 

அனுமன் சாலீசா:

அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் மகிமை கூறும் அனுமான் சாலீசா – இதைக் கேட்பதும் பாராயணம் செய்வதும் நாம் வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைய வழி வகுக்கும்.

banner

Leave a Reply

Submit Comment