தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடாப்படுகிறது. இந்தத் திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வருகிறது. இந்த விழா பெரும்பாலும் கோவில்களில் அதிகமாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.
ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு மகா விரதங்களில் பங்குனி உத்திரம் மிகவும் மங்களகரமான விரதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதமான பங்குனியில் சுக்ல பக்ஷத்தின் போது உத்திர நட்சத்திரத்தில் மீன ராசியில் சூரிய ஒளி படும் போது பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை பங்குனி மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.
சூரனை வதைத்த நாள்:
பங்குனி மாதத்தில் தான் முருகப் பெருமான் தனது தாய் தந்தையரை வணங்கி வஜ்ர வேலைப் பெற்றுக் கொண்டு அசுர குலத்தை வதைக்க புறப்பட்டார். அசுரர்களுடன் போரிட்டு சூர சம்ஹாரம் செய்த நாள். தேவர்களின் குலத்தைக் காத்த நாள்.
தெய்வீகத் திருமண வைபவங்கள்:
பங்குனி உத்திரம் என்றால் நமது நினைவிற்கு முதலில் வருவது முருகர். அன்று தான் முருகன் சூரனை சம்ஹாரம் செய்த நாள். தேவர்களைக் காத்த நாள். அதற்கு பதிலாக தேவேந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்த நாள். இந்த நாளில் முருகனுடன் தேவசேனா அல்லது தெய்வானையின் திருமணம் நடைபெற்றது, மேலும் இந்த நாளில் சிவபெருமானும் அன்னை பார்வதியும் திருமணத்தின் புனித பந்தத்தில் இணைக்கப்பட்டனர். ராமர் மற்றும் சீதையின் அனைத்து விருப்பங்களும் பங்குனி உத்திரம் நாளில் நிறைவேறியதாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த திருவிழா திருமணத்துடன் தொடர்புடையது என்பதால், இந்த திருவிழா சமயத்தில் கோயில்களில் தெய்வங்களுக்கும் திருகல்யாணம் நடத்தி வைக்கப்படுகிறது.
கல்யாண விரத நாள்:
பங்குனி உத்திர நாளில் தான் முருகன் தெய்வானையை மணந்ததாக நாம் அறிவோம். மேலும், பல தெய்வீகத் திருமணங்கள் அன்று நடை பெற்றது. பங்குனி உத்திர நாளை கல்யாண விரத நாள் என்றும் கூறலாம். . பார்வதி-பரமசிவன் திருக்கல்யாணம், முருகன்-தெய்வயானை திருக்கல்யாணம் ராமர்-சீதா திருக்கல்யாணம் ரங்கமன்னார் -ஆண்டாள் திருக்கல்யாணம் என தெய்வீகத் திருமணங்கள் நடை பெற்ற நாள். அதனால் இந்த நாளை கல்யாண விரத நாள் என்றும் கூறலாம். பல ஆலயங்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
பங்குனி உத்திர விழா:
இந்தப் பண்டிகை இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, முருகன் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர் இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகளில் முருகர் திருக்கல்யாணம் சிறப்பாக நடை பெறும். மேலும் மதுரை, வேதாரண்யம், திருவாரூர், திருநெல்வேலி , பேரூர், காஞ்சீபுரம் ஆகிய அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இந்தக் கோயில்கள் அனைத்தின் பெரும்பகுதியிலும், தெய்வீகத் திருமணம் முழு சடங்குகளுடனும் முழு ஆற்றலுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்குனி உத்திரம் திருவிழா மகாலட்சுமி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நாளில்தான் மகாலட்சுமி தேவி பூமியில் பாற்கடலை கடைந்த போது அவதரித்தாள்.
சிவபெருமானும் விஷ்ணுவின் பெண் வடிவமான மோகினியும் இணைந்ததால் அய்யப்பன் பிறந்தார். இந்த நாள் ஐயப்பன் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திர விரதம்:
தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணம் நடைபெற இந்த விரதம் மேற்கொள்ளலாம். திருமண வாழ்வில் சிக்கல்கள் மற்றும் பிரிவினைகள் நீங்க இந்த விரதம் மேற்கொள்ளலாம்.
பங்குனி உத்திரம் அன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்.
அன்று பக்தர்கள், குறிப்பாக முருக பக்தர்கள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால் மற்றும் பழம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆலயம் சென்று வழிபட வேண்டும்.
வீட்டில் பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.
அன்று மாங்கலய சரடு வாங்கி தானம் அளித்தல் நல்லது.
Leave a Reply