கருப்புசாமி என்பவர், பெரும் ஞானமும், பலமும் நிறைந்த, சக்தி வாய்ந்த கடவுளாவார். நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையைக் குறிக்கும் இவர், மக்களைக் காப்பாற்றக் கூடிய, காக்கும் கடவுளாக, கிராமப்புற மக்களால் மிக்க பக்தியுடன் வழிபடப்படுகிறார். கால பைரவர், நரசிம்மர்,, வீரபத்திரர், ருத்ரர் போன்ற தெய்வங்களின் இணைந்த சக்தியாக விளங்கும் இவர், பக்தர்களின் துன்பங்களைத் துடைத்து, அவர்கள் குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பவர் ஆவார்.
இந்தக் கடவுள் குறித்துச் செய்யப்படும் கருப்புசாமி ஹோமம், தீமை, பொய், துரோகம் போன்ற எதிர்மறை சக்திகளை நம்மிடமிருந்து விலக்கி, நமக்கு நன்மை செய்யக் கூடிய ஹோம வழிபாடாகும்.
கையில் அரிவாளுடன், குதிரையில் அமர்ந்து காட்சி தரும் கருப்புசாமி, தர்மத்தைக் காத்து, பக்தர்களின் துன்பத்தைத் துடைத்து, அவர்களுக்கு நலம் செய்யும் கடவுளாக விளங்குகிறார். இந்த ஆற்றல் வாய்ந்த தெய்வத்தை மகிழ்விப்பதற்காகச் செய்யப்படும் கருப்புசாமி ஹோமம், உங்கள் பிரச்சினைகளை எளிதில் தீர்க்கக் கூடியது. சாதகமான பலன்களை விரைவில் அளிக்கக் கூடியது. இதன் ஆன்மிக சக்தி, உங்களுக்குள் ஊடுருவி, கண் திருஷ்டி, சாபம், சூனியம், பொறாமை போன்ற தீய சக்திகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசமாக இருந்து, ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் போன்றவற்றை உங்களுக்கு அருளக் கூடியது.
கருப்புசாமி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டுடன் கூட, ஏழைகளுக்கு உணவளித்து, அவர்கள் பசி போக்குவது, மேலும் நன்மை தரும். உங்கள் ஜன்ம நட்சத்திர நாளில் இதைச் செய்வது, பல தெய்வீக ஆசிகளைப் பெற்றுத் தரும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
சாபம், சூனியம், பொய், புரட்டு, பித்தலாட்டம் போன்ற பல தீமைகளுக்கு எதிராக பாதுகாப்பு தரும்
பிரச்சினைகளை எளிதாகத் தீர்த்து, துன்பங்களைக் குறைக்க உதவும்
வழக்குகளிலும், வாழ்க்கையிலும் நியாயம் கிடைக்க உதவும்
சுய கட்டுபாட்டை வளர்க்கும்
பிரார்த்தனைகளுக்கு சாதகமான பதில்களைப் பெற்றுத் தரும்
நல்ல ஆரோக்கியம், செல்வம், நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை அடைய உதவும்