Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

Viruchigam Rasi Rahu Ketu Peyarchi Palangal 2025 to 2026 Tamil

March 5, 2025 | Total Views : 541
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, உங்கள்  ராசியில் இருந்து நான்காம் வீடான கும்பத்தில்  ராகுவின் பெயர்ச்சியும்,  10-ஆம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும்  நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும்  டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும்.  இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு தரும் பலன்களைப் பார்க்கலாமா?

பொதுப்பலன்

உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவான காலகட்டத்தை குறிக்கிறது. சிலருக்கு திருமணம் நடக்கலாம்.நீங்கள் தற்போது அரசாங்க பதவியில் இருந்தால், நீங்கள் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கு தயாராக  இருக்கலாம். உங்கள் சிறந்த  செயல்திறன் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டைப் பெறலாம். வணிக முயற்சிகள் அதிகரித்த லாபத்தைக் காணலாம். மாணவர்கள் படிப்பில் மெதுவான முன்னேற்றத்தை காணலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்,

உத்தியோகம்

நீங்கள் உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். உங்கள் பணிக்கான பாராட்டு கிடைக்கும். இடமாற்றம் இருக்கலாம். தொழில் மூலம் லாபம் கிட்டும். தொழிலை நீங்கள் விரிவுபடுத்தலாம். புதிய கிளைகளை நிறுவலாம்.

காதல்/ குடும்ப உறவு

காதலர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் இது. ஒரு சிலர் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்ளலாம். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்கலாம். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கலாம்.  உங்கள் தாயுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் பிணைப்பு வலுவாக இருக்கலாம். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை காணப்படலாம்.

நிதிநிலை

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் செல்வத்தை சேர்க்க. முன்னுரிமை கொடுக்கலாம். அதற்கு சாதகமாக இந்த பெயர்ச்சி உள்ளது. உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். முதலீடுகள் மூலம் நல்ல வருவாயைக் காணக்கூடும். பணபுழக்கம் சீராக இருக்கும்.

மாணவர்கள்

மாணவர்கள் படிப்பில் மெதுவான முன்னேற்றத்தை காணலாம். தேர்வில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை. உங்கள் படிப்பில் சில சவால்களை எதிர்பார்க்கலாம். அது உங்களை பலவீனப்படுத்தலாம்.உங்கள் திறமையில் சந்தேகம் கொள்ளாமல் செயல்படுங்கள்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்,ஆனால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது. முறையான ஒய்வு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  யோகா, தியானம் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் தக்க வைக்க உதவும்.

பரிகாரங்கள்:-

1. விநாயகப் பெருமானையும் (கேதுவின் அதிபதி விநாயகர்) மற்றும் துர்க்கையையும் (ராகுவின் அதிபதி) தினமும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.

2.  செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் கணேஷ் பஞ்சரத்னம் மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

3.  உங்கள் உடல்நிலை அனுமதித்தால், ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருங்கள்.

4.  கருப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்த்து, நெற்றியில் சந்தன திலகம் அணியவும்.

5.  ஆன்மீக குருவை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

6.) 'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ" என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்

 

banner

Leave a Reply

Submit Comment