AstroVed Menu
AstroVed
search
search

Meenam Rasi Rahu Ketu Peyarchi Palangal 2025 to 2026 Tamil

dateMarch 5, 2025

மீன ராசிக்கு பன்னிரண்டாம் வீடாகிய  கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும்,  ஆறாம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும்  நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும்  டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும்.  இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.

இந்த பெயர்ச்சி  உங்களுக்கு தரும் பலன்களைப் பார்க்கலாமா?

பொதுப்பலன்

இந்த காலக்கட்டத்தில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்கொண்ட கடினமான நேரங்கள் முடிவுக்கு வரக்கூடும். மேலும் நீங்கள் சில சாதகமான மாற்றங்களைக் காணத் தொடங்கலாம். உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உட்பட உங்கள் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும், உங்கள் குழந்தைகளுடனான உங்கள் உறவு நிச்சயமற்றதாக இருக்கலாம்.

உத்தியோகம்

வெளி நாட்டில் வேலை செய்பவர்கள்  சில வெற்றிகளைப் பெறலாம்.  உங்கள் சக பணியாளர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் நீங்கள் கொண்டிருந்த  முரண்பாடுகள் முடிவிற்கு வரும். நீங்கள் சொந்தமாக வியாபாரம் செய்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் இந்த காலக்கட்டத்தில் பொருத்தமானதாக இருக்கும், என்றாலும் அபாயகரமான முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள்.

காதல் / குடும்ப வாழ்க்கை

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் சொந்த ஊருக்கு வெளியே நீங்கள் வெற்றியைக் காணலாம். இந்த நேரத்தில், உங்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகள் உங்களிடம் அன்பையும் ஆதரவையும் காட்டலாம். காதலர்களுக்கு மகிழ்ச்சியான காலக் கட்டம். நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது காதல் திருமணம் இரண்டும் உங்களுக்கு பலனளிக்கும். குடும்பப் பிரச்சனைகள் தீர்க்கப்படும், மேலும் உங்கள் துணையுடனான உங்கள் தொடர்பு சிறப்பாக இருக்கும். உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் இருக்கும். இந்த காலகட்டத்தில் சில தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கூடும்.

நிதிநிலை

நல்ல வருமானம் காண்பீர்கள். அதே சமயத்தில் எதிர்பாராத செலவுகளும் இருக்கலாம். உங்கள் செலவினங்களில் கவனமாக இருங்கள், குறிப்பாக உங்கள் கடன் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படாமல் போக வாய்ப்பு உள்ளது. உங்களிடம் ஏற்கனவே உள்ள நிதியை நீங்கள் நம்ப வேண்டியிருக்கலாம். உங்கள் முதலீடுகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வரலாம்.

மாணவர்கள்

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின் புதுமையான சிந்தனை கல்வியில் வெற்றியை அடைய உதவும். மருத்துவத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம், எனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் முன்கூட்டியே அதனை குணப்படுத்திக்கொள்வது நல்லது.

பரிகாரங்கள்:-

1. தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி ) மற்றும் துர்கா தேவி (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

2. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் கணேஷ் சாலிசா மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

3. தினமும் பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவளிக்கவும்.

4. கருப்பு ஆடைகளைத் தவிர்த்து, தினமும் உங்கள் நெற்றியில் சந்தன திலகம் இடுங்கள்.

5. பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வெகுமதியையும் தரும்.

6. 'ஓம் ரம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் ரம் கேதுவே நமஹ' என்று ஏழு முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்.


banner

Leave a Reply