AstroVed Menu
AstroVed
search
search

Magaram Rasi Rahu Ketu Peyarchi Palangal 2025 to 2026 Tamil

dateMarch 6, 2025

உங்கள்  ராசிக்கு இரண்டாம் இடமான   கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும்,  8-ஆம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும்  நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும்  டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும்.  இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும். .

இந்த பெயர்ச்சி  உங்களுக்கு அளிக்கப் போகும் பலன்களைப் பார்க்கலாமா?

பொதுப்பலன்

அதிர்ஷ்டம் நிறைந்த சாதகமான சூழல் நிலவும்.  உங்க ஆசைகள் நிறைவேறும். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். நிலுவையில்  இருக்கும். உங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக சந்தையில் ஆதிக்கம் செலுத்த முயல்வீர்கள். போட்டிகளை சமாளிக்க முடியும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம். பணியிடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். அதனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பணியிட மாற்றம் இருக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிட்டாது. தொழிலை விரிவுபடுத்த இது சிறந்த நேரம் அல்ல. நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு, பதவி உயர்வுக்கான சிறந்த நேரமாக இருக்காது, எனவே பொறுமை மிக அவசியம்.

காதல் / குடும்ப வாழ்க்கை

ஒரு சிலர்  காதல் வலையில் விழக் கூடும். ஆனால் அது நீடித்த காதலாக இருக்க வாய்ப்பில்லை.உங்கள் குடும்பம் மற்றும் உடன்பிறந்தவர்கள் பெரும்பாலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எழலாம். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி  உறவில்  தேவையற்ற மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிதிநிலை

உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவுகளும் கூடும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.  கையிருப்பைக் கொண்டு செலவை சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.  புதிய முதலீடுகள் அல்லது புதிய நிதி முயற்சிகளைத் தொடங்க இது சிறந்த நேரமாக இருக்காது.

மாணவர்கள்

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில், இது சவாலானதாக இருக்கலாம். மேலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கவனத்தை சிதறடிப்பது அல்லது சோம்பேறியாக இருப்பது போன்ற விஷயங்கள் உங்களை மந்தமாக செயல்பட வைக்கலாம்.  எனவே கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியம்

இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக   நேரலாம்.  எளிய மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைபிடிக்கவும்.  

பரிகாரங்கள்:-

  1. தினமும் கணபதி  (கேதுவின் அதிபதி ) மற்றும் துர்கா தேவி (ராகுவின் அதிபதி ) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

  2. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் கணேஷ் சாலிசா மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

  3. தினமும் பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவளிக்கவும்.

  4. கருப்பு ஆடைகளைத் தவிர்த்து, தினமும் உங்கள் நெற்றியில் சந்தன திலகம் இடுங்கள்.

  5. பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வெகுமதியையும் தரும்.

  6. 'ஓம் ரம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் ரம் கேதுவே நமஹ' என்று ஏழு முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும் .

 


banner

Leave a Reply