AstroVed Menu
AstroVed
search
search
x

மகரம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

dateAugust 30, 2023

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன.  ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது.  நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது.  கேது மோட்சகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது.   இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மகர ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 3 ஆம் வீடாகிய  மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள்  ராசியில் இருந்து 9 ஆம் வீடாகிய    கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப்  போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

உத்தியோகம் :-  

உங்கள் உத்தியோக வாழ்க்கையில் நீங்கள் அதிகமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் சிறப்பாக பிரகாசிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், அதே நேரத்தில் உங்கள் முயற்சிகள் தேவையான வளர்ச்சியைக் கொடுக்கும். இந்த பெயர்ச்சி  சில உற்சாகமான வாய்ப்புகளைக் கொண்டு வரக்கூடும், தயவுசெய்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதல் பணிச்சுமை மற்றும் பொறுப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகளை நீங்கள் தேடலாம். உத்தியோகத்தில்  மாற்றங்கள் காணப்படுகின்றன.  வணிகர்கள் நிலையான வளர்ச்சியைக் காணலாம் மற்றும் புதிய வாய்ப்புகள்  கதவைத் தட்டலாம். இந்த பெயர்ச்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படாமல் போகலாம், காத்திருக்க வேண்டியிருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க

காதல் / குடும்ப உறவு :-  

ஒற்றையர்களுக்கு இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.  தனிமையில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் மற்றும் உங்கள் துணையை கவர முடிந்த அனைத்தையும் செய்யலாம். நீங்கள் அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளலாம் மற்றும் உங்கள் துணையுடன் அதிக நேரத்தை அனுபவிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும் தேவையற்ற வதந்திகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையான அமைதி மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறலாம். உங்கள் குடும்பத் தேவைகளைப் புரிந்து கொள்ள முடியும், இணக்கமான உறவைப் பேண உதவும்.. குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியைத் தரும்  நிகழ்வுகளுக்கு நீங்கள் முன்முயற்சி எடுக்கலாம். புதிய விஷயங்களைத் தொடங்குவதற்கு முன் எப்போதும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். மனக் கவலைகளை ஏற்படுத்தும் ஒரே காரணி இளைய உடன்பிறப்பு. அவர்களின் கருத்து  உங்கள் கருத்துக்களுக்கு எதிராக இருக்கலாம். கருத்து வேறுபாடு இருக்கலாம், எனவே தயவு செய்து நெகிழ்வாக இருங்கள் மற்றும் அனைவரிடத்திலும்  எதிர்வினையாற்ற வேண்டாம்.

திருமண வாழ்க்கை :-

இந்த பெயர்ச்சிக்  காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன்  கலவையான முடிவுகளைப் பெறலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் வரலாம். உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, அது உங்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மூன்றாம் தரப்பினரின் தலையீட்டைத்தவிருங்கள். நட்புரீதியான பேச்சுக்கள் என்பது பிரச்சனைகளை எளிதாக்க உதவும் முக்கிய காரணியாகும்.

நிதிநிலை :-  

இந்த பெயர்ச்சி  உங்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவாக இருக்கக்கூடும். அதே நேரத்தில் செலவுகளும் காணப்படும்.  நீங்கள் குடும்ப நிகழ்வுகளின் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அதன் காரணமாக அதிக செலவுகளை செய்யலாம்.  தேவையான பண வரவு இருக்கும் என்பதால் அதிகம் கவலைப்பட வேண்டாம். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாண்மை ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாபம் காணப்படலாம் மற்றும்  வேலை தொடர்பான ஆர்டர்கள் வருவாயைச் சேர்க்கலாம். பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டி வர்த்தக முதலீடுகள் கூடுதலான வருமானம் மற்றும் நன்மைகளை அளிக்கலாம். எதிர்பாராத செல்வமும் இருக்கலாம், மேலும் நிதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள், அது எதிர்காலத்தில் அதிக வருமானத்தை சேர்க்கலாம். இந்த காலகட்டத்தில் சிலர் உயர் ரக வாகனங்களை வாங்கலாம்.

மாணவர்கள் :-   

கல்வியைப் பொறுத்தவரை மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் முயற்சிகள் பலனளிக்கும் வாய்ப்புகள் உள்ளது.  புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.ஆராய்ச்சி அடிப்படை ஆய்வுகள் குறிப்பாக மருத்துவத் துறையில் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம். கல்வியில் சிறந்து விளங்கலாம். நீட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராபவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறலாம். உயர்கல்வியில் இருப்பவர்கள் புதிய சாதனைகளை படைக்கலாம்.

ஆரோக்கியம் :-  

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.கூடுதல் பணிச்சுமையின் காரணமாக நீங்கள் பரபரப்பாக செயல்பட வேண்டியிருக்கலாம்.  இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும், எனவே மன அழுத்தத்தைத் தவிர்ப்பது முக்கியம்.. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.  தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் மற்றும் ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் இளைஞர்கள் பாதிக்கப்படலாம், அவை உங்களை மந்தமாக்கலாம். உங்களின்  பெரும்பாலான வேலைகள் கணினி  அடிப்படையிலும், ஏசி சூழல்  அடிப்படையிலும் அமைந்திருப்பதால், உங்கள் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உடற்பயிற்சி நடவடிக்கை மிகவும் அவசியம். எப்போதும் ஒரு சிறந்த உணவுத் திட்டத்தை வைத்திருங்கள் மற்றும் யோகா மற்றும் தியானத்திற்காக நேரத்தைச் செலவிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பரிகாரங்கள் :-

1) தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி ) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

2) செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரத்தையும், தினமும் கணேஷ பஞ்சரத்னம் மந்திரத்தையும்  பாராயணம் செய்யவும்  அல்லது கேட்கவும்.

3) செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தெரு நாய்களுக்கு ரொட்டியுடன் உணவளிக்கவும்.

4) தொழுநோயாளிகளுக்கு உங்கள் திறனுக்கு ஏற்ப உதவுவது நேர்மறையான முடிவுகளை அளிக்கும்.

5) தேவைப்படுபவர்களுக்கு அரிசியை தானமாக வழங்குங்கள் மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்யுங்கள்.

'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ' என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்.


banner

Leave a Reply