Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

kumbam Rasi Rahu Ketu Peyarchi Palangal 2025 to 2026 Tamil

March 6, 2025 | Total Views : 549
Zoom In Zoom Out Print

உங்கள் ராசியில் ராகு பெயர்ச்சி ஆகிறார். மற்றும் உங்கள் ராசிக்கு ஏழாம் ராசியில் கேது பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும்  டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும்.  இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.

இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு என்ன பலன் தரும் என்று பார்க்கலாமா?

பொதுப்பலன்

நீங்கள் அலுவலகத்தில் பணி புரிபவர் என்றால் இந்த பெயர்ச்சிக்கான காலக்கட்டத்தில் சவால்களை சந்திப்பீர்கள். அதனை சமாளிக்க நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு அதிக பணிகள் வழங்கப்படலாம். ஒரு சிலருக்கு  தங்கள் உத்தியோகத்தை மாற்றிக் கொள்ளும் எண்ணம் இருக்கலாம். பதவி உயர்வு தாமதம் ஆகலாம். தொழிலில் முன்னேற்றம் மந்தமாக இருக்கலாம். உங்கள் கூட்டாளிகளை கண் மூடித்தனமாக நம்பாதீர்கள். இந்த பின்னடைவுகள் எல்லாம் தற்காலிகமானவை. பொறுமையுடன் செயல்பட்டால் எல்லாம் சுபமாக முடியும்.

உத்தியோகம்

நீங்கள் அதிக வேலைப் பளுவை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சில பிரச்சினைகள் இருக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க தாமதம் ஆகலாம். தொழிலில் சில நஷ்டங்கள் இருக்கலாம். முன்னேற்றத்தில் தாமதம் இருக்கலாம். கூட்டுத் தொழிலில் கவனமாக ஈடுபட வேண்டும்.

காதல் / குடும்ப  உறவு

காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கலாம். உங்கள் நண்பர்களிடம் கவனமாக இருங்கள். கருத்து வேறுபாடுகள் மோதல்களுக்கு வழிவகுக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஈகோ காரணமாக பிரச்சினைகள் எழலாம். அதனை தவிர்த்து விடுங்கள்.

நிதிநிலை

உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் அதிக பணத்தை செலவிடலாம். எனவே செலவில் கவனமாக இருங்கள். ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். ஆபத்தான நிதி நடவடிக்கைகளிலும் ஈடுபட இது நல்ல நேரம் அல்ல. நீங்கள் முதலீடு செய்வது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், நன்கு கவனமாக ஆராய்ந்து செயல்படுங்கள். ஒப்பந்தம் குறித்த ஆவணங்களில் கவனம் தேவை.

மாணவர்கள்

மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு சென்று படிக்க எண்ணும் மாணவர்களின் எண்ணம் ஈடேறலாம். கடினமாக உழைத்து படிப்பதன் மூலம்  சிறந்த பலன்களைக் காணலாம்.  இந்த ராகு-கேது பெயர்ச்சி காலம் புதிய விஷயங்களையும் திறன்களையும் கற்றுக்கொள்வதற்கான சிறந்த நேரமாகும். எனவே உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வழிகாட்டுதலைத் தேடுங்கள்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம்.  உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம். முறையான தூக்கம் மற்றும் சரியான உணவு அவசியம். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம்.

பரிகாரங்கள்:-

1. தினமும் கணபதி  (கேதுவின் அதிபதி ) மற்றும் துர்கா தேவி (ராகுவின் அதிபதி ) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

2. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் கணேஷ் சாலிசா மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

3. தினமும் பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவளிக்கவும்.

4. கருப்பு ஆடைகளைத் தவிர்த்து, தினமும் உங்கள் நெற்றியில் சந்தன திலகம் இடுங்கள்.

5. பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வெகுமதியையும் தரும்.

6. 'ஓம் ரம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் ரம் கேதுவே நமஹ' என்று ஏழு முறையும் தினமும் ஜெபிக்கவும்.

 

banner

Leave a Reply

Submit Comment