Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

Dhanusu Rasi Rahu Ketu Peyarchi Palangal 2025 to 2026 Tamil

March 6, 2025 | Total Views : 580
Zoom In Zoom Out Print

உங்கள்  ராசியில் இருந்து மூன்றாம் வீடான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும்,  9-ஆம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும்  நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும்  டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும்.  இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.

இந்த பெயர்ச்சி தரும் பலன்களை பார்க்கலாமா?

பொதுப்பலன்

இந்த காலக்கட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை உயரும். இருப்பினும், உங்கள் 9 ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால், வெளியூர் பயணம் செய்வதிலும் வெற்றியை அடைவதிலும் சில தடைகள் ஏற்படலாம். வெளிநாட்டில் அல்லது இணையம் மூலமோ உங்கள் மனம் கவர்ந்த  நபரை நீங்கள் சந்திக்கலாம். திருமண பந்தம் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் மாறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின்  தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ளலாம். இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்தலாம். நீங்கள் சொத்துக்களை விற்க நினைத்தால், இப்போது லாபகரமான நேரமாக இருக்கும்.

உத்தியோகம்

உங்களில் ஒரு சிலருக்கு அரசு உத்தியோகம்  கிட்டும். வெளிநாட்டு நிலங்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், வெளிநாட்டு தொடர்புகள், வெளிநாட்டு நண்பர்கள்  மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மூலம் லாபம் ஈட்டும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.பணியிடத்தில்/ தொழில் செய்யும் இடத்தில்  உங்கள் தகவல் தொடர்புத் திறன் மூலம் வெற்றி காண்பீர்கள். உங்கள் தொழில் அல்லது வியாபாரத்திலிருந்து நிலையான வருமானம் வரக்கூடும் 

காதல் / குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை ஒட்டுமொத்தமாக நிலையானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும், உங்கள் தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவுகள் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு வளரும்.

நிதிநிலை

முதலீடுகள் நல்ல வருவாயைக் காணக்கூடும், மேலும். பல ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்கும் வாய்ப்பும் இருக்கும். 2025-2026ல் திடீர் வருமான ஆதாரம் உருவாகலாம். எதிர்கால நலன் கருதி  பணத்தை சேமிக்கவும் மற்றும் ஆடம்பரமான செயல்களைத் தவிர்க்கவும். வணிக உரிமையாளர்கள் அதிக மதிப்புள்ள வாடிக்கையாளர்களுடன் வெற்றியைக் காணலாம். முதலீடுகள், பேரம் பேசுதல், கணக்கிடப்பட்ட நிதி முடிவுகளை எடுப்பது மற்றும் கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுப்பதற்கு இது ஒரு நல்ல நேரம். இந்த காலகட்டத்தில் ஊக வணிகம்  உங்களுக்கு வெகுமதிகளைத் தரக்கூடும்.

மாணவர்கள்

மாணவர்கள்  இந்த காலக்கட்டத்தில் படிப்பில் முன்னேற்றம் காணலாம். என்றாலும் ஒரு சிலருக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை குறையலாம். . மாணவர்கள் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரங்கள்:-

1. விநாயகப் பெருமானையும் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்கா தேவியையும் (ராகுவின் அதிபதி) தினமும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.

2. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் கணேஷ் சாலிசா மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

3. தினமும் பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவளிக்கவும்.

4. கறுப்பு ஆடைகளை அணிவதைத் தவிர்த்து, தினமும் சந்தன திலகத்தை நெற்றியில் தடவவும்.

5. பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வெகுமதியையும் தரும்.

6. 'ஓம் ரம் ராஹ்வே நமஹ' என்று 18 முறையும், "ஓம் ரம் கேதுவே நமஹ' என ஏழு முறையும் ஒரு நாளில் உச்சரிக்கவும்.

banner

Leave a Reply

Submit Comment