Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில், சிவபுரி

September 4, 2023 | Total Views : 684
Zoom In Zoom Out Print

சிவபுரி உச்சிநாதர் திருக்கோவில்:

மூலவர் உச்சிநாதர் / மத்யானேஸ்வரர்

அம்மன் கனகாம்பிகை

தீர்த்தம் கிருபாசமுத்திரம்

தல விருட்சம் நெல்லி

புராண பெயர் திருநெல்வாயில்

ஊர் சிவபுரி

மாவட்டம் கடலூர்

மறையினர் மழுவாளினார் மல்கு

பிறையினார் பிறையோடிலங்கிய

நிறையினார் நெல்வயிலார் தொழும்

இறைவானரெம் துச்சியரே.

                                            -----    திருஞான சம்பந்தர்

உச்சிநாதர் கோவில்

நெல் வயல்கள் அதிகமாக உள்ள இடமாதலால் ‘நெல்வாயில்‘ என்று பெயர் பெற்றது. தற்போது சிவபுரி என்று அழைக்கப்படுகிறது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 3 வது தேவாரத்தலம் ஆகும். அகஸ்தியர் மற்றும் கண்வ மகரிஷி ஆகியோர் இக்கோயிலின் இறைவனை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோவில் வரலாறு:

திருஞானசம்பந்தர் அருகாமையில் உள்ள பாடல் பெற்ற சிவ ஸ்தலமான திருவேட்களத்தில் தங்கி, அங்கிருந்து மற்ற கோயில்களுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் தன்னுடைய திருமணத்திற்காக 63 பேர்களுடன் இந்த தலம் வந்த போது சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோவில் அர்ச்சகர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். “உச்சி” என்றால் நண்பகல் என்றும், “நாதர்” என்றால் இறைவன் என்றும், “ஈஸ்வரர்” என்பது தமிழில் மரியாதைக்குரிய பின்னொட்டு என்றும் போற்றப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இறைவன் "ஸ்ரீ மத்யானேஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கனகாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக நெல்லி மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் கிருபா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சக்தியிடம் திருஞான சம்பந்தர் ஞானப் பால் அருந்திய தலமும் இதுவாகும்.  

உச்சிநாதர் கோவில் அமைப்பு

மூலவர் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். சிவலிங்கம் சுயும்பு மூர்த்தி.லிங்கத் திருமேனியின் பின்புறம் அம்மையப்பர் திருவுருவங்கள். சிவன் பார்வதி திருவுருவங்கள் திருமண கோலத்தில்] உள்ளன. அழகிய சிறிய மூர்த்தங்கள். கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம், ஒரு பிரகாரம், சிவபெருமான் கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். சிவன், பார்வதி அம்மன் சன்னதிகள் தவிர விநாயகர், முருகன், நர்த்தன விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பஞ்ச லிங்கங்கள், சனீஸ்வரன், சந்திரன், சூரியன், திருஞானசம்பந்தர், காசி விஸ்வநாதர், சண்டீக விஸ்வநாதர், காசி விஸ்வநாதர், சந்நிதிகள் மற்றும் சிலைகள் உள்ளன.

முக்கியமான திருவிழாக்கள்

இக்கோயிலில் கொண்டாடப்படும் சில முக்கியமான திருவிழாக்கள் –

தமிழ் மாதமான வைகாசியில் வைகாசி விசாகம் (மார்ச்-ஏப்ரல்)

தமிழ் மாதமான புரட்டாசியில் (செப்டம்பர்-அக்டோபர்) நவராத்திரி

தமிழ் மாதமான கார்த்திகையில் (நவ-டிசம்பர்) சோம வாரங்கள் (திங்கட்கிழமை).

பிரதோஷமும் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது.

பிரார்த்தனை:

குருவாயூர் போன்று இங்கும் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுகிறர்கள். இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

கோயில் அமைவிடம் அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

 

கோயில் முகவரி : அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி – 608002 அண்ணாமலை நகர் வழி கடலூர் மாவட்டம்

banner

Leave a Reply

Submit Comment