AstroVed Menu
AstroVed
search
search

Kadagam Rasi Rahu Ketu Peyarchi Palangal 2025 to 2026 Tamil

dateMarch 5, 2025

கடகம்  ராசிபலன்

கடக ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் உங்கள்  ராசியிலிருந்து 8-ம் இடமான கும்ப ராசியிலும், கேது சஞ்சாரம் உங்கள்  ராசியில் இருந்து 2-ம் இடமான சிம்ம ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 18 மே 2025 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு தரும் பலன்களைப் பார்க்கலாமா?

பொதுப்பலன்

தம்பதிகள் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் மற்றும் உறவில் ஒற்றுமை நீடிக்க வெளிப்படையான தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்துங்கள்.ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரலாம். அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பணிகளை முடிப்பதை நீங்கள் சற்று சிரமமாக கருதலாம்.

உத்தியோகம்

புதிய பணிகள் அல்லது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு முன் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிக்க முடியுமா என்பதை யோசித்து செயல்படவும்.  தொழிலில் லாபங்கள் கிடைக்க தாமதம் ஆகலாம். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.புதிய தொழில் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை.

காதல்/ குடும்ப உறவு

உங்கள் வாழ்க்கைத் துணையின்  தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள். சிறிய விஷயங்கள்  கூட உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கலாம்.  உங்கள் பெற்றோரிடமிருந்து, குறிப்பாக உங்கள் தந்தையின் ஆதரவை எதிர்பார்க்கலாம். இந்த பெயர்ச்சி குடும்பத்தில் நெருக்கம் மற்றும் ஆதரவை வளர்க்கலாம்.

நிதிநிலை

இந்தப் பெயர்ச்சிக் காலத்தில்  நிலையான வருமான ஓட்டத்தை எதிர்பார்க்கலாம்.  பரஸ்பர நிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளை மேற்கொள்ள  இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். பங்குச் சந்தை மூலமும் சாத்தியமான லாபங்கள் கிட்டலாம்.  இந்த பெயர்ச்சியின் காலக்கட்டத்தில் கவனமாக திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்கள் லாபம் கணிசமாக அதிகரிக்கும்.

மாணவர்கள்

மாணவர்கள் படிப்பில் மெதுவான முன்னேற்றம் அல்லது தெளிவின்மை ஆகியவற்றை அனுபவிக்கலாம். கூடுதல் நேரத்தை ஒதுக்குவது மற்றும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு வழிவகுக்கும். பெற்றோரின் ஊக்கமும் வழிகாட்டுதலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருக்கும் மாணவர்களுக்கு  இது சாதகமான நேரமாக இருக்கும்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.. முதுகுவலி, முழங்கால் மற்றும் மூட்டு பிரச்சினைகள். இருக்கலாம்.  தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும். பாதுகாப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை கடைபிடிக்கவும், வேகத்தை தவிர்க்கவும்.

பரிகாரங்கள்:-

1. விநாயகப் பெருமானையும் (கேதுவின் அதிபதி விநாயகர்) மற்றும் துர்க்கையையும் (ராகுவின் அதிபதி) தினமும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.

2.  செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

3. சனிக்கிழமைகளில் பைரவரை வழிபடவும். வழிபாட்டின் போது பைரவ மந்திரங்களை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

4.  உடல்நலம் அனுமதித்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் அனுசரித்து, ஏழைகளுக்குப் போர்வைகளை வழங்குங்கள்.


banner

Leave a Reply