உங்கள் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம், தொடரும் வெற்றிகளுக்காக
செப்டம்பர் என்பது, புதிய துவக்கங்களுக்கான பகவான் கணபதியின் பிறந்தநாள் ஆசிகளைப் பெறும் மாதமாகும். ‘ஆஸ்ட்ரோவேத் மாதம்’ என, இந்த செப்டம்பரைக் கொண்டாடும் நாம், ஆஸ்ட்ரோவேத் உடன் இணைந்து, புதிய துவக்கங்களின் அனுபவம் பெற, உங்களை அழைக்கிறோம்.
உங்களது புதிய துவக்கங்கள் மற்றும் தொடரும் வெற்றிகளில் நாங்கள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, எங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளில், குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அளிக்கிறோம்.
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆஸ்ட்ரோவேத் உடன் இணைந்து, அனைத்து வகைப் புதிய துவக்கங்களின் அனுபவத்தைப் பெறுங்கள். எங்களது தனிச்சிறப்பு வாய்ந்த, நல்ல பயன்தரக் கூடிய வேத சேவைகள், உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான – பொருளாதார வளர்ச்சி மற்றும் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளுதல்; இணக்கமான, மனநிறைவு தரக்கூடிய உறவுகள்; புதிய முயற்சிகளில் தொடரும் வெற்றிகள்; பலவகையிலும் செழுமையான வாழ்க்கை போன்றவற்றைப் பெற்றுத்தர வல்லவையாகும்.
ஹோமத் தொழில்நுட்பம் என்பது, உங்கள் வேண்டுதல்களை கடவுளிடம் வெகுவேகமாக எடுத்துச் சென்று, அவர்களது அபார ஆசிகளையும், அற்புதப் பலன்களையும், உங்கள் வாழ்க்கையில் பெற்றுத் தரும் என வேதங்கள் கூறுகின்றன. உங்கள் தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் கருத்தில் கொண்டு, நாங்கள் அளிக்கும் பல சேவைகளிலிருந்து, உங்களுக்கு ஏற்ற, பிரத்யேகமான ஹோமத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ‘ஆர்டர்’ செய்யுங்கள்.
கடவுளர்களின் ஆற்றல் நிறைந்திருக்கும் காலகட்டங்களில், அவர்களை வேண்டி வழிபடும் ஆஸ்ட்ரோவேத், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் மூலம் அவர்களுடன் தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், அவர்களது ஆசிகளை நீங்களும், உங்கள் அன்புக்குரியவர்களும் பெறவும் உதவுகிறது. புனித நாட்களில் நடத்தப்படும் இந்த விசேஷ வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொள்வது, வளமும், மனநிறைவும் கொண்ட வாழ்க்கைக்கான அவர்களது அபார அருளைப் பெற்றுத் தரும்.
பகவான் கணபதிக்கு உகந்த, மங்களகரமான தேய்பிறை சதுர்த்தி அன்று, ஆஸ்ட்ரோவேத், தீய கர்மாக்ளைத் தொலைப்பதற்கான எமர்ஜென்சி கர்மா க்ளினிக் வழிபாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் குறைந்த அளவு அன்பர்களே கலந்து கொள்ள முடியும். இது, உங்கள் முன்னேற்றம், வெற்றி போன்றவற்றைத் தடை செய்யும் தடங்கல்களையும், தீய கர்ம வினைகளையும் அழிக்க, கணபதியை வணங்கி வேண்டுகிறது.
ப்ரிஸீ ஆலயத்தில் அங்காளி அன்னைக்கு நடத்தப்பட்ட பிரம்மாண்டமான துவக்க வழிபாடுகளுக்குப் பின்னர், அமாவாசை நாட்களில் நடைபெறும் பிரத்யேகமான அங்காளி ஹோமங்களில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், எதிர்மறைகளை அழித்து, பயத்தைத் தொலைத்து, பாவங்களை நீக்கி, பல வெற்றிகளையும், பாதுகாப்பையும் அருளும் உலக அன்னையின் ஆசிகளை தொடர்ச்சியாக வேண்டிப் பெறலாம்.