அற்புதங்கள், ஸித்த சக்தி மற்றும் பாதுகாப்பு வேண்டி அங்காளி அம்மன் வழிபாடு
அமாவாசை அன்று நடைபெறவிருக்கும் அங்காளி ஹோமத்தின் உபயதாரர் ஆகுங்கள்
ப்ரிஸீ ஆலயத்திற்கு அன்னை அங்காளி வருகிறார்
"எனது ப்ரிஸீ ஆலயத்தில் அன்னையின் நல்வரவு
எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்து வழிபடுவதில் ஒரு சூட்சுமம் மறைந்துள்ளது. நம்மால் கடவுளைக் காண முடியாது. எனவே கடவுள் இருக்கிறார் என உணரவும் கடவுளுடன் நாம் எப்போதும் இருப்பது போன்ற ஒரு அனுபவத்தை பெருவதற்காகவும் கடவுளுக்கு ஒரு உருவம் அளிக்கப்படுகின்றது. அதன் காரணமாகவே நாங்கள் அங்காளியின் பெரிய சிலையை உருவாக்கியிருக்கிறோம்.
காளி அன்னையே அங்காளியாக உள்ளார். தெய்வத் தாயான இவர், ஸித்தி எனப்படும் ஆற்றல்களை வழங்கக்கூடியவர். இவர், பலவற்றையும் நமக்குக் கற்பிப்பவர். கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் வடிவமாகவும், இவர் இருக்கிறார். இவரது அருள், படிப்பறிவில்லாதவரையும், காளிதாசர் போன்ற பெரும் கவிஞராக மாற்றக் கூடிய வல்லமை படைத்தது...... அங்காளி சத்ய யுகத்தைச் சேர்ந்த கடவுளாவார். இதன் காரணமாகவே, இவர், அறிவாற்றல் அல்லது ஞானம் போன்றவற்றின் மிக உயர்ந்த நிலையைக் குறிக்கிறார். இது அற்புதங்கள் நிகழ்த்துவதைக் காட்டுகிறது. எனவே இவர் அதிசயங்களின் கடவுளாக உள்ளார்.
அன்னை அங்காளியின் முன்னிலைக்கு உங்களை அழைத்துச் செல்வதே, மிக முக்கியமான பணியாகும்; உங்களை முழு உணர்வுடன் அங்கு இருக்கச் செய்வதே, இதன் நோக்கம். இது எவ்வாறு சாத்தியமாகும்? உங்கள் சார்பாக நீங்கள் அனுப்பி வைக்கும் உங்கள் புகைப்படம் மூலம் இது சாத்தியம் ஆகும். இது மிகப் பழைய வேத நுட்பம் ஆகும். இதன் மூலம், அன்னையின் அருளாசி உங்களுக்கு கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை புகைப்படம் அங்கு வைக்கப்படும்” – டாக்டர் பிள்ள "
- டாக்டர் பிள்ளை
இந்தியாவில் அமைந்துள்ள ப்ரிஸீ ஆலயத்தில், பெண் தெய்வமான அங்காளியின் புதிதாக வடிக்கப்பட்டுள்ள,அழகிய விக்கிரகத்தை, டாக்டர் பிள்ளை அவர்கள், பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேவி அங்காளி, ஸித்தி எனப்படும் அசாதாரணமான ஆற்றல்களின் தெய்வமாக விளங்குகிறார். உலக அன்னையாகத் திகழும் இவர், எதிர்மறைகளை அழித்து, பயங்களை நீக்கி , பாவங்களைப் போக்கக் கூடியவர்; அனைத்துவகை வெற்றிகளையும், பாதுகாப்பையும் அருளக்கூடியவர். ஜூலை 31, 2019 (இந்திய நேரம்) அன்று, பிரம்மாண்டமான ஹோமம் ஒன்றை நடத்தி, அங்காளி தேவியை புதிய விக்கிரகத்தில் ஆவாஹனம் செய்கிறோம். இந்த ஹோம வழிபாட்டில்,‘காளி சகஸ்ரநாமம்’ என்ற புனித நூலில் உள்ள, அன்னையின் 1008 சிறப்பு நாமங்கள் ஓதப்படும். மேலும், 4 சக்திவாய்ந்த அன்னை அங்காளியின் ஆலயங்களில், விசேஷ பூஜைகளும் நடத்தப்படும்.
டாக்டர் பிள்ளையின்வழிகாட்டுதலின் படி,மாற்று வேத நுட்பத்தைப் பயன்படுத்தி, அங்காளி தேவியின் முன்னிலையை நீங்கள் சென்றடைய,ஆஸ்ட்ரோவேத் உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது. இதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ளும் பொழுது, உங்களுடைய புகைப்படத்தை எங்களுக்கு அனுப்ப வேண்டும். இது, கணிமண்ணால் ஆன ஒரு உருவத்தின் மீது ஒட்டப்பட்டு, அங்காளியின் முன் வைக்கப்படும். பழைய வேத நுட்பமான இது, டாக்டர் பிள்ளை அவர்களால் தற்பொழுது புத்துணர்வூட்டப்பட்டுள்ளது. இந்த வகை வழிபாட்டில் நீங்கள் நேரில் இருந்து வழி படிவதற்கு சமம் என்பது ஐதீகம்;45 நாட்களுக்கு அங்காளி அன்னையின் பூரண ஆசிகளும், உங்களுக்குக் கிடைக்கும்.
புராணங்களின் படி,அங்காளியின் 1008 சிறப்பு நாமங்களை பாராயணம் செய்து,அன்னை அங்காளிக்கு விசேஷ ஹோமம் நடத்துவது, எதிர்மறைகளை அழித்து, அறியாமையையும், துன்பத்தையும் நீக்கி,பயத்தை நீக்கி, பாவங்களைப் போக்கி, பல வெற்றிகளையும், தெய்வீக பாதுகாப்பையும் கொடுக்கும்.
புனித நூல்களின் படி,அவரது 1008 நாமங்களைப் பாராயணம் செய்து, அங்காளி தேவிக்கு அர்ச்சனை செய்வது,தீய சக்திகளின் பாதிப்புகளைப் போக்கும்; துன்பங்களை அழிக்கும்; நல்லதிர்ஷ்டம், அறிவாற்றல் அளிக்கும்; உங்களைச் சுற்றி,ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கும்.
ஆலய புராணங்களின் படி, அன்னை அங்காளிக்கு அர்ச்சனை செய்வது, கீழ்க்கண்ட அற்புதப் பலன்களை அருளும்:
கேரள ஆலய புராணங்களின் படி, புனித மந்திரங்களை பாராயணத்துடன் பகவதி தேவியை மலர்களைக் கொண்டு பூஜிப்பதன் மூலம் பெரியம்மை போன்ற கொடிய நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும் ; கண் திருஷ்டியையும், பகைமையையும் போக்கும்; மன அமைதியையும், சந்தோஷத்தையும் தரும்
பசு என்பது,தெய்வீகப் பசுவான காமதேனுவின் அவதாரமாக விளங்குகிறது என புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய புனிதத் தன்மை வாய்ந்த பசுவிற்கு, இந்த நேரத்தில் விசேஷ பூஜை செய்வது, மங்களங்களைத் தரும்; விருப்பங்களை நிறைவேற்றும்; செழிப்பையும், வளத்தையும் அருளும்
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்மணிகளை வணங்குவதன் மூலம், பெண் தெய்வங்களின் அருளை வேண்டிப் பெறலாம். அதன் மூலம் குடும்ப நலன் காக்கப்படும் என்று நம்பப்படுகிறது. புனிதமான ‘மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்வதால், எதிர்மறைகள், பாவங்கள், பகைமை, துயரம் தொலைந்து, பாதுகாப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை
ப்ரிஸீ ஆலயத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்குப் பிறகு, பிரதி அமாவாசை நடைபெறவிருக்கும் அங்காளி ஹோமத்தில் பங்கு கொண்டு அன்னையின் அருளைத் தொடர்ந்து பெறும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்மறை ஆற்றலை அழித்து, அச்சங்களை விரட்டி, பாவங்களை கரைத்து பாதுகாப்பையும் வெற்றியையும் அளிக்கும் அன்னை அங்காளியை வணங்க கூட்டாக நடைபெறும் ஹோமத்தின் உபயதாரராக நீங்கள் பங்கு கொண்டு அன்னையின் அருளைப் பெறுங்கள்.
3 மாத உபயம்
6 மாத உபயம்
12 மாத உபயம்
பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ,மற்ற நேரங்களிலோஉங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: :அனைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்ட பிறகு, மூன்று மாதங்களூக்கு ஒருமுறை,உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
ப்ரிஸீ ஆலயத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்குப் பிறகு, பிரதி அமாவாசை நடைபெறவிருக்கும் தனிப்பட்ட அங்காளி ஹோமத்தில் பங்கு கொண்டு அன்னையின் அருளைத் தொடர்ந்து பெரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுதித்திக் கொள்ளுங்கள். எதிர்மறை ஆற்றலை அழித்து, அச்சங்களை விரட்டி, பாவங்களை கரைத்து பாதுகாப்பையும் வெற்றியையும் அளிக்கும் அன்னை அங்காளியை வணங்க தனிப்பட்ட முறையில் ஹோமத்தின் உபயதாரராக நீங்கள் பங்கு கொண்டு அன்னையின் அருளைப் பெறுங்கள்.
3 மாத உபயம்
6 மாத உபயம்
12 மாத உபயம்
பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ,மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்ட பிறகு, மூன்று மாதங்களூக்கு ஒருமுறை,உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.