Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
வாழ்க்கையை மாற்றும் நவராத்திரி – பக்தி, பாரம்பரியம், பேரின்பம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வாழ்க்கையை மாற்றும் நவராத்திரி – பக்தி, பாரம்பரியம், பேரின்பம்

Posted DateSeptember 12, 2025

நவராத்திரி என்பது நம்முள் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை விதைக்கும் பண்டிகை ஆகும். நம் வாழ்வை புதிதாக மாற்றும் ஒரு அரும் பெரும் பண்டிகையாக இது அமைகிறது. நவராத்திரியின் ஒன்பது இரவுகளும், ஒன்பது சக்திகளும், ஒன்பது வண்ணங்களும், நம்மை புதிய பாதை நோக்கி, புதிய வாழ்வை நோக்கி இட்டுச் செல்கிறது. வாழ்க்கையை மாற்றும் நவராத்திரி என்பது வெறும் கூற்று அல்ல. நவராத்திரி என்பது  பக்தியையும், பாரம்பரியத்தையும், பேரின்பத்தையும் ஒருங்கே வழங்கும் அரிய வாழ்க்கைப் பாடமாகும்.

நவராத்திரியின் ஆன்மீக அதிசயம்

நவராத்திரி என்பது எங்கும் நிறைந்து இருக்கும் அன்னை பராசக்தியின் ஒன்பது வடிவங்களை பக்தியுடன் வழிபடும் பண்டிகை. துர்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று சக்திகளின் மூன்று வடிவங்கள் வாழ்க்கையின் மூன்று முக்கிய அடித்தளங்களை நினைவுபடுத்துகின்றன. துர்கை – தீமைகளை அழித்து நம்மை வலிமையாக்குகிறாள், லட்சுமி – செல்வம், வளம், குடும்ப நலன் ஆகியவற்றை அளிக்கிறாள். சரஸ்வதி – அறிவும் ஞானமும் கொடுத்து நம் வாழ்க்கையை உயர்த்துகிறாள். இவ்வாறு ஒன்பது நாட்கள் ஒவ்வொன்றும் நம் உள்ளத்தை சுத்திகரிக்கும் ஆன்மீகப் பயணமாகிறது.

பாரம்பரியத்தை பேணும் பெருவிழா

நவராத்திரி விழா காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தனித்துவமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கொலு வைத்து பொம்மைகள் அலங்கரிப்பது ஒரு பெரும் சிறப்பு. கொலுவின் அடுக்குகள் அல்லது படிக்கட்டுகள்  வாழ்க்கையின் படிகளைக் குறிக்கின்றன. பொம்மைகள் மூலமாக கடவுளின் கதைகள், புராணங்கள், நெறிமுறைகள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. கர்நாடகாவில் “தசரா” பேரணி, குஜராத்தில் “கர்பா” நடனம், வட இந்தியாவில் “ராம்லீலா” நாடகங்கள் – இவை அனைத்தும் நவராத்திரியின் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கின்றன. தலைமுறைகளை இணைக்கும் கயிறாக இந்த விழா விளங்குகின்றது. நவராத்திரி காலத்தில் வீடுகளில் கொலு வைப்பது, குமாரி பூஜை, சுண்டல் நைவேத்தியம், அக்கம் பக்கத்தவர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது போன்ற பழக்கவழக்கங்கள் தலைமுறைகள் தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இது சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. கொலு பொம்மைகள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை, புராணக் கதைகளையும், கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. பெண்கள் பாடும்  பாடல்கள் மங்கள கீதங்கள் ஆகியவை தெய்வீக சூழலை உருவாக்குகின்றன. அக்கம் பக்கத்தவர்களுக்கு நைவேத்யம் அளிப்பதும், ஒன்றாக வழிபடுவதும் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது. இதனால் நவராத்திரி ஒரு மத வழிபாடு மட்டுமல்ல; அது பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சார திருவிழாவாகவும் விளங்குகிறது.

 பக்தியின் பரிமாணம்

நவராத்திரி காலத்தில் மக்கள் விரதம் இருக்கின்றனர், மந்திர ஜபம் செய்கின்றனர், தேவியை ஸ்தோத்திரங்களால் புகழ்கின்றனர். பக்தியில் மூழ்கிய மனம் பேரின்பத்தைக் கண்டடைகிறது. நோன்பு இருப்பது  உடல் சுத்தத்தையும், மன அமைதியையும் அளிக்கிறது. ஒன்பது நாட்களும் வீட்டில் செய்யப்படும் பூஜைகள் குடும்ப பிணைப்பை வலுப்படுத்துகின்றன. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் இதில் பங்கெடுப்பதால், பக்தி ஒரு தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல், சமூக அனுபவமாக மாறுகிறது. நவராத்திரி விழாவை  ஒன்பது நாளும் பக்தியோடு கொண்டாடும் வகையில் நவராத்திரி வழிபாட்டுத் தொகுப்பை ஆஸ்ட்ரோவேத் வழங்குகிறது.

பேரின்பத்தை தரும் பண்டிகை

நவராத்திரி ஒரு பண்டிகை மட்டுமல்ல; அது மகிழ்ச்சியின் திருவிழா. வண்ணமயமான அலங்காரங்கள், இசை, நடனம், விளக்குகள் – இவை அனைத்தும் மனதில் பேரின்பத்தை விதைக்கின்றன. குஜராத்தில் கர்பா நடனம் ஒவ்வொரு இரவும் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கிறது. தமிழ் நாட்டில் “சுண்டல்” அளிப்பது  அன்பையும், பகிர்வையும் காட்டுகிறது. மகிழ்ச்சி, அன்பு, ஒன்றிணைவு ஆகியவை நவராத்திரியில் பூரணமாக வெளிப்படுகின்றன.

வாழ்க்கையை மாற்றும் பாடங்கள்

நவராத்திரி வெறும் மத பண்டிகை அல்ல; அது நம் வாழ்க்கைக்கு பாடமாகும்.

துர்கையின் வழிபாடு – வலிமை – சவால்களை எதிர்கொள்வதில் தைரியம் கற்றுக்கொடுக்கிறது.

லட்சுமி வழிபாடு – திருமகள்  அருள் – பணத்தை மட்டும் அல்லாமல் மனநிறைவும், குடும்ப ஒற்றுமையையும் பெறச் செய்கிறது.

சரஸ்வதி வழிபாடு –  ஞானம் – கல்வி, கலை, அறிவு ஆகியவற்றின் மதிப்பை உணர்த்துகிறது.

நவராத்திரி நேரத்தில் நாம் மேலே  குறிப்பிட்ட ஒவ்வொரு தேவியரையும்  மூன்று  மூன்று நாட்கள்  என ஒன்பது நாட்கள் வழிபடுகிறோம். இந்த ஒன்பது நாட்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவெனில் வாழ்க்கையை ஒவ்வொரு நேரத்திலும்  சமநிலையுடன் நடந்து கொள்வது. வெற்றியடைய வலிமை தேவை, வளம் தேவை, ஞானம் தேவை. இம்மூன்றும் ஒருங்கிணைந்தால்தான் மனித வாழ்க்கை முழுமை பெறும்.

உடல்–மனம்–ஆன்ம ஒருங்கிணைவு

நவராத்திரியின் சிறப்பு,  யோகிகள், சித்தர்கள் கூறும் “உடல், மனம், ஆன்மா சமநிலையை உருவாக்குவதாகும். விரதம் உடலை சுத்திகரிக்கிறது, ஜெபம் மனதை அமைதியாக்குகிறது, பூஜை ஆன்மாவை உயர்த்துகிறது. இதனால் நவராத்திரி மனிதனின் உள்ளமும் புறமும் மாற்றம் அடைய உதவுகிறது.

சமூக இணைப்பும் சேவையும்

நவராத்திரி காலத்தில் பலர் அன்னதானம் செய்கின்றனர், ஏழைகளுக்கு துணை நிற்கின்றனர், நல்லிணக்கம் பரப்புகின்றனர். இது பக்தி தனிப்பட்ட சுகத்திற்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

நவராத்திரி – நவீன வாழ்க்கைக்கு ஊக்கம்

இன்றைய அவசர கதி வாழ்க்கையில் நவராத்திரி நமக்கு ஓய்வையும், சிந்திக்கவும், புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பை தருகிறது. தொழில், குடும்பம், சவால்கள் என பிஸியாக இருந்தாலும், இந்த ஒன்பது நாட்கள் நம்மை நாம் உணர காரணமாக அமைகின்றது.  மன அழுத்தம் குறைக்கவும், ஆன்மிக உணர்வை மீண்டும் பெறவும் நவராத்திரி சிறந்த காலம்.

முடிவுரை

“நவராத்திரி உண்மையில் மனித வாழ்வை தெய்வீக பாதைக்கு இட்டுச் செல்லும் சக்தி கொண்ட பண்டிகை. இந்த ஒன்பது நாட்கள் நம்மை வெளியில் மட்டுமல்ல,  ஆன்ம ரீதியாகவும் செழிக்கச் செய்கின்றன. பக்தி நம்மை கடவுளோடு இணைக்கிறது, பாரம்பரியம் நம் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கிறது, பேரின்பம் நம் வாழ்க்கையை இனிமையாக்குகிறது. அதனால் நவராத்திரியை வெறும் பண்டிகையாகக் காணாமல், வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆன்மீகப் பயணமாக அனுபவிக்க வேண்டும்.