AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

பழனி முருகர் கோவில்

dateMarch 19, 2024

பழனி முருகர் கோவில் அறிமுகம்

சிவபெருமானின் மகனான கார்த்திகேயன் தென்னிந்திய பக்தர்களால் மிகவும் போற்றி வணங்கப்படும் தெய்வம் ஆவார். முருகன் என்றும் அழைக்கப்படும் அவர் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பரவலாக வழிபடப்படுகிறார். இங்கு அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏராளமான கோவில்கள் அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு பல பிரம்மாண்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன, ஒவ்வொன்றும் மிகுந்த ஆடம்பரத்துடனும், கொண்டாட்டத்துடனும் முழு மனதுடன் கொண்டாடப்படுகின்றன.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ள பழனி கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அல்லது பழனி தண்டாயுதபாணி கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த பழமையான கோயில் பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இருந்து சுமார் 67 கிமீ தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.

பழனி முருகர் கோயில் புராணங்கள்

பழனி முருகர் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனி கோயிலும் ஒன்று என்பதே இதன் சிறப்பு. பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு  பஞ்சாமிர்தம் என்ற சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம், கற்கண்டு உள்பட 5 பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பழனி கோயிலின் தோற்றம் தொடர்பாக பல புராணக்கதைகள் உள்ளன. நாரத முனிவர் ஒருமுறை சிவபெருமானுக்கு ஞானப் பழத்தை அளித்ததாக நம்பப்படுகிறது. பின்னர் அவர் அதை தனது மகன்களான முருகன் மற்றும் விநாயகப் பெருமானுக்கு அளிக்க முடிவு செய்தார். இருப்பினும், இந்த பழத்தை இரண்டு சகோதரர்களிடையே பகிர்ந்து கொள்வது கூடாது ஒருவர் தான் உன்ன வேண்டும். ஏனெனில் அதை பாதியாக வெட்டுவது கூடாது.எனவே  சிவபெருமான் உலகம் முழுவதையும் மூன்று முறை சுற்றி வரும் ஒரு பந்தயத்தை நடத்த முடிவு செய்தார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு பழம் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார். . இரண்டு மகன்களும் சவாலை ஏற்றுக்கொண்டனர், முருகப்பெருமான் உடனடியாக தனது மயில் மீது ஏறிஉலகை சுற்றி வர புறப்பட்டார்.

இருப்பினும், விநாயகப் பெருமான் புத்திசாலித்தனமாக தனது பெற்றோரான சிவன் மற்றும் பார்வதியை மூன்று முறை சுற்றி வந்தார். முழு உலகத்திற்கும் சமமான தனது தெய்வீக பெற்றோரை சுற்றி வந்ததால் போட்டியில் வெற்றி பெற்றதாக அவர் கருதப்பட்டார்.

விநாயகப் பெருமானின் செயல் சிவபெருமானைக் கவர்ந்தது. எனவே அவருக்கு ஞானப் பழத்தை வழங்கினார். முருகப்பெருமான் உலகத்தை மூன்று முறை சுற்றி விட்டுத் திரும்பியபோது நடந்ததை அறிந்து  ​​அவர் கோபமடைந்தார். எனவே தனது வீட்டை விட்டு பழனி மலைக்கு சென்றார். பின்னர் இது தான் தனது புதிய வீடு என்று முடிவு செய்தார். இந்த வகையில்  பழனி மலை முருகனின் இருப்பிடங்களில் ஒன்றாக மாறியது, மேலும் மக்கள் இன்றும் இங்கு அவரை வணங்குகிறார்கள். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் இங்கு முருகன் சிலையை நிறுவியதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

பழனி கோயிலின் கட்டிடக்கலை

2 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சேர வம்சத்தின் மன்னர் பெருமாளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. ஒருமுறை அவர் கனவில் முருகன், கோயிலை புனரமைக்கச் சொன்னார் என்று புராணக்கதை கூறுகிறது. கண்விழித்த பிறகு அரசன் இறைவன் சிலையைத் தேடினான். அதைக் கண்டுபிடித்து, பழனியில் உள்ள இரண்டு மலைகளில் மிக உயரமான சிவகிரி மலையில் உள்ள கோயிலைப் புனரமைத்தார்.

இக்கோயிலின் கட்டிடக்கலை சேரர்கள் மற்றும் பாண்டியர்களின் கட்டிடக்கலை பாணியை வலுவாக பிரதிபலிக்கிறது. இங்குள்ள விக்கிரகத்தின் சிறப்பு என்னவெனில், நவ பாஷான மூலிகைகளால் ஆனது. ஒன்பது வகையான விஷங்ளை சரியான விகிதத்தில் கலந்தால் அதுவே சக்தி வாய்ந்த மருந்தாக மாறும். உலகத்தையும் அதன் அனைத்து இன்பங்களையும் துறந்த ஒரு துறவியின் வடிவில் எளிய உடையை அணிந்த முருகன் கையில் ஒரு கோலைப் பிடித்திருப்பதைக் காணலாம். இந்த சிலை ஒரு கல் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருவறையின் சுவர்களில் பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. கருவறையின் மேல் ஒரு தங்க கோபுரம் உள்ளது, இதில் முருகன் மற்றும் பிற தெய்வங்களின் பல சிற்பங்கள் உள்ளன.

விநாயகப் பெருமான் கோயிலின் நுழைவாயிலில் ஒரு சன்னதியில் அமர்ந்திருக்கிறார், மேலும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வதற்கு முன்பு அவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் உள்ளன. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலை ஏறிச் செல்லலாம் அல்லது அதற்கு மாற்றாக வின்ச் பயன்படுத்தி கோயிலை அடையலாம்.

பழனி கோவில் திருவிழாக்கள்

பழனி கோவிலின் மிக முக்கியமான திருவிழா தை பூசம் ஆகும், இங்கு மக்கள் நடைபயணமாக மலை உச்சியை அடைகிறார்கள். பழனி கோயிலில் பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, அக்னி நட்சத்திரம், வைகாசி விசாகம் மற்றும் ஆனி அன்னாபிஷேகம் ஆகியவை பிற பிரபலமான திருவிழாக்கள். ஆடி மாதத்தில் சில திருவிழாக்கள் தவிர, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை மற்றும் மார்கழி பூஜை ஆகியவை மிகவும் பிரபலமான விழாக்கள்.

இந்த கோவில் காவடிகள் கொண்டு வருவதற்குப் பெயர் பெற்றது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்துச் செல்கின்றனர். தெய்வீக சடங்காகக் கருதப்படும் தலையை மொட்டையடிப்பதையும் இங்கு மக்கள் தேர்வு செய்கிறார்கள்.

பழனி கோயிலில் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பழனி முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு வரம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இங்கு முருகனை வழிபடுவதன் மூலம் நவக்கிரக தோஷங்களின் தாக்கம் கணிசமாகக் குறையும். முருகப் பெருமான் தனது உலகத் தொடர்புகளை எல்லாம் துறந்து ஞானப் பழமாகப் பழனியில் குடி கொண்டார்.  எனவே, அறிவையும் ஞானத்தையும் பெற செல்ல வேண்டிய இடம் இது.

பழனி கோயிலுக்கு எப்படி செல்வது?

விமானம் மூலம்

கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்கள் பழனிக்கு அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆகும். மதுரை விமான நிலையம் 114 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து பழனிக்கு ரயில் அல்லது பேருந்தில் செல்லலாம்.

ரயில் மூலம்

பழனி ரயில் நிலையம், அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். இக்கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையங்களும் பழனிக்கு அருகில் உள்ளன.திண்டுக்கல் ரயில் நிலையம் சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ளது.

சாலை வழியாக

கோவிலை அடைய, நீங்கள் திண்டுக்கல் மாவட்டம், கோயம்புத்தூர் அல்லது தமிழ்நாட்டின் மதுரையை அடைய வேண்டும். பழனிக்கு நீங்கள் ஒரு தனியார் டாக்ஸியையும் வாடகைக்கு எடுக்கலாம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடியிலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன.

பழனி கோவிலின் நேரம்

பழனி கோயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5.45 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் திறக்கப்படும்.


banner

Leave a Reply