ராகு சஞ்சாரம் உங்கள் ராசியிலிருந்து 11 ஆம் வீடான கும்பத்திலும், கேது சஞ்சாரம் உங்கள் ராசியிலிருந்து 5 ஆம் வீடான சிம்ம ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 18 மே 2025 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.
இந்த பெயர்ச்சி மூலம் உங்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாமா?
பொதுப்பலன்
உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் வருமானம் பெருகும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எதிர்வரும் சவால்களை தைரியமாக சமாளிப்பீர்கள். உங்கள் பணியில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி காண்பீர்கள். பெரியோர்கள், அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.யாருக்கும் வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். உங்களில் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். அதே சமயத்தில் பொறுப்புகளும் அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் ரெட்டிப்பாகும். உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை கூடும். சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். தொழில்மூலம் தன லாபம் ஏற்படும். மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். உங்கள் பெயர் புகழ் மற்றும் அந்தஸ்து கூடும்.
காதல் / குடும்ப உறவு
இந்த காலக்கட்டத்தில் உங்கள் காதல் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி காக்க இயலும். குடும்ப உறவுகள் தொடர்ந்து அன்பு மற்றும் ஆதரவுடன் வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் மூத்த உடன்பிறப்பு உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.
நிதிநிலை
கையில் பணம் புழங்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆடம்பர தேவைகளுக்கு பணம் செலவு செய்ய விரும்புவீர்கள். புத்திசாலித்தனமாக பட்ஜெட்டை அமைத்து செயல்படுங்கள். மற்றும் அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். முன்னேற்றம் ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும், விடாமுயற்சி பலனளிக்கும் மற்றும் கல்வி வெற்றிக்கு வழிவகுக்கும். பெற்றோர்களின் வழிகாட்டல் மற்றும் ஆதரவு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக இருக்கும். கடந்த கால உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைக்க நீங்கள் தியானம் மற்றும் யோகா மேற்கொள்ளுங்கள்.
பரிகாரங்கள்:-
1. தினமும் விநாயகப் பெருமானையும், துர்கா தேவியையும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.
2. வாரம் ஒருமுறை ராகு மற்றும் கேதுவிற்கு 100 கிராம் உளுந்து மற்றும் கொள்ளு அர்ப்பணம் செய்யவும்.
3. முதியோர் இல்லங்களுக்கு மாதம் ஒருமுறை இனிப்பு வழங்குங்கள்.
4. தினமும் கணேஷ சூக்தம் மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

Leave a Reply