மேஷ ராசி அன்பர்களே! குருபகவான் உங்கள் ராசியிலிருந்து 3 ஆம் வீடாகிய மிதுனத்தில் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி மே 15, 2025 அன்று அதிகாலையில் தொடங்கி, ஜூன் 2, 2026 அன்று முடிவடையும். இந்த காலகட்டத்தில், உங்கள் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு மற்றும் 11வது வீட்டில் குருபகவானின் பார்வை இருக்கும். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடனான தொடர்பு நன்றாக இருக்கும். குடும்பப் பிணைப்பு வலுவடையும். இதன் விளைவாக நல்ல தருணங்கள் மற்றும் நினைவுகள் கிடைக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கலாம். மேலும் இந்த கட்டத்தின் முழு ஆற்றலையும் நீங்கள் அனுபவிக்கலாம். இது உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இது அவர்களுக்கு கல்வியில் சாதகமான காலமாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். உங்கள் நிதி நிலை சீராக இருக்கும். மற்றும் ஆதாயம் பெருகும். பணத்தை முறையாகக் கையாள்வதன் மூலம் .சேமிப்பு/முதலீடுகளை அதிகரிக்கலாம்.
இப்போது தொழில் வளர்ச்சிக்கான நேரம். உங்கள் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் வரலாம். உங்கள் தற்போதைய வேலை நிலையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். உங்கள் சக ஊழியர்களுடன் நல்ல தொழில்முறை உறவுகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். ஒரு ஆதரவான சூழ்நிலை உங்களைச் சுற்றி இருக்கும். குழுப்பணி சீராக இயங்கும். உங்கள் பங்களிப்பை மேலதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிட்டலாம். மொத்தத்தில், இது உங்கள் உத்தியோகம் மற்றும் தொழில் பயணத்தில் ஒரு திருப்புமுனை காலம் என்று கூறலாம். வேலை மற்றும் மக்களுடனான பொதுவான தொடர்புகளில் திருப்தி அடைவீர்கள். இந்த வலுவான பிணைப்புகள் உங்கள் வேலையை மேலும் சுவாரஸ்யமாக்கும். இது உங்களுக்கு மிகவும் பலனளிக்கும் காலமாக இருக்கும் என்பதால், அதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் இருக்கும் வயது முதிர்ந்த உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் சுமுகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கனிவும். மரியாதையும் கூடும். அனைவரும் அரவணைப்புடனும் இணக்கத்துடனும் கூடுவதால் குடும்ப நிலை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவையும் புரிதலையும் பெறுவீர்கள். கூடுதலாக, உங்கள் துணையின் அன்பு உங்களுக்கு கிட்டும். மேலும் அவர்கள் உங்களிடம் அக்கறை காட்டுவார்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் இருவரும் நம்பிக்கையும் பாசமும் வளர்வதைக் காண்பீர்கள்.
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் இருக்கும். நல்ல புரிந்துணர்வு இருக்கும். இருவரும் மகிழ்ச்சியான தரமான தருணங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பீர்கள். உங்கள் முதலீடுகளில் இருந்து கணிசமான லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் செல்வத்தை மேம்படுத்துவற்கான காலக்கட்டமாக இது இருக்கும். குடும்பம் மற்றும் நட்பு வட்டாரத்தின் சிறந்த ஆதரவு மூலம் உங்கள் பொருளாதார இலக்குகளை நீங்கள் அடைவீர்கள். உங்களின் வங்கி இருப்பை மேம்படுத்திக் கொள்ள அவர்களின் ஆதரவு உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் உதவிகரமாக இருக்கும்.
ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட முடியும். இளங்கலை பட்டதாரிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். முதுகலைப் பட்டதாரிகளுக்கும் இதே நிலைதான். மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க இதுவே சிறந்த நேரம். ஆராய்ச்சி மாணவர்கள் பல மணிநேரங்களை மிக ஆழமாக திட்டமிட்டு தங்கள் ஆய்வறிக்கைக்கு தயார்படுத்துவார்கள்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கலாம். தெருவோர வியாபாரிகளின் உணவு மற்றும் துரித உணவைத் தவிர்க்கவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், உப்புகள் மற்றும் சர்க்கரைகள் நிறைய இருப்பதால், இவை, பல உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தினசரி தியானம் ஒருவரை மனதளவில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மன அழுத்தத்தைக் குறைக்க 10 நிமிட தியானம் போதும். இது மனதை ரிலாக்ஸ் ஆக்கும். தியானத்துடன் இணைந்த சரியான உணவு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்கும்.
அனுமன் சாலிசாவை தினமும் ஜபிக்கவும். உங்கள் வீட்டில் சிங்கத்தின் சிலையை வைத்து தினமும் 10 நிமிடம் உற்றுப் பாருங்கள்.“ஓம் நாராயண மந்திரத்தை” தினமும் 10 முறை ஜபிக்கவும். ஓம் சுப்ரமண்யாய நம” என்னும் சுப்ரமணிய மந்திரத்தை தினமும் 15 முறை உச்சரிக்கவும்.
எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.
உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2025 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்
குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்