பஞ்சாங்கம் என்பது இந்து கால கணிப்பு முறைப்படி கணிக்கப்படும் கால அட்டவணை ஆகும். பஞ்ச + அங்கம் என்பதே பஞ்சாங்கம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள். ஐந்து அங்கங்களைக் கொண்ட சாஸ்திரம் பஞ்சாங்க சாஸ்திரம் ஆகும். இந்த ஐந்து அங்கங்கள் முறையே:
பஞ்சாங்கத்தின் மூலம் நீங்கள் அன்றன்றைய வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை அறியலாம்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் தினசரி வாழ்வின் முக்கியமான காரியங்களை செய்வதற்கு உகந்த கால நேரத்தையும், வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும் சுப காரியங்களை செய்வதற்கான முகூர்த்தம் எனப்படும் நல்ல நேரம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
தினசரி வாழ்வில் நல்ல நேரம் பற்றி அறியவும், மேலும் தவிர்க்க வேண்டிய காலங்களான ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை பற்றி அறியவும் இந்தப் பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும் சந்திராஷ்டம நாட்களை அறிந்து நீங்கள் எச்சரிக்கையாக செயல்பட உங்களுக்கு உதவும்.
முகூர்த்த நாட்களைப் பற்றியும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் விழா நாட்கள் பற்றியும், விரதம் மற்றும் உபவாசம் இருக்கும் நாட்கள் பற்றியும் அறியலாம்.
பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை விரதம், சங்கடஹர சதுர்த்தி, கிரிவல நாட்கள், சிவராத்திரி போன்ற சிறப்பு நாட்களை நீங்கள் முன் கூட்டியே அறிந்து உங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் இயற்கை வானியல் நிகழ்வுகளான கிரகணம் போன்ற சிறப்பு நாட்களைப் பற்றியும் அறியலாம்.
வாரம் என்பது கிழமை எனப்படும். கிழமைகள் ஏழு என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று ஆகும். முக்கியமான கிரகங்கள் ஒன்பது அவற்றுள் ராகு, கேது என்ற இரண்டும் நிழல் கிரகங்கள் ஆகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,குரு, சுக்கிரன், சனி என்ற ஏழு கோள்களும் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
வாரத்தின் நாட்கள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. அவை முறையே சாத்வீக நாள், ராஜச நாள், தாமச நாள் ஆகும். திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை சாத்வீக நாட்கள் ஆகும். செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ராஜச நாட்கள் ஆகும். ஞாயிறு, புதன் மற்றும் சனி தாமச நாட்கள் ஆகும்.
பஞ்சாங்கத்தின் இரண்டாவது அங்கம் திதி. திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை வைத்து கணக்கிடுவது ஆகும். சூரியனில் இருந்து சந்திரன் 180 பாகை தூரத்தில் இருந்தால் அன்று பௌர்ணமி திதி ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே பாகையில் இணைந்தால் அன்று அமாவாசை எனப்படும். இதன் அடிப்படையில் திதிகளை 1. சுக்ல பட்சம் 2. கிருஷ்ண பட்சம் என்று இரண்டாகப் பிரித்து கூறப்படுகின்றது. அதாவது வளர்பிறை திதி 14 மற்றும் தேய்பிறை திதி 14 மற்றும் பௌர்ணமி மற்றும் அமாவாசை என மொத்தம் 30 திதிகள்
பிரதமை
அக்னி
துவிதியை
துவஷ்டா
திருதியை
கெளரி
சதுர்த்தி
கணபதி
பஞ்சமி
சர்ப்பம்
சஷ்டி
குமாரன்
சப்தமி
சூரியன்
அஷ்டமி
பரமேஸ்வரன்
நவமி
வசு
தசமி
நாகம்
ஏகாதசி
தர்மதேவதை
துவாதசி
விஷ்ணு
திரயோதசி
காமன்
சதுர்த்தசி
கலி புருஷன்
பௌர்ணமி
சந்திரன்
அமாவாசை
பித்ருக்கள்
மேலும் திதிகளை நந்தா, பத்ரா, ஜெயா, ரிக்தா, பூரண என்று ஐந்து பிரிவுகளாக பிரித்து உள்ளார்கள்.
பிரதமை
ஷஷ்டி
ஏகாதசி
துவிதியை
சப்தமி
துவாதசி
திரிதியை
அஷ்டமி
திரயோதசி
சதுர்த்தி
நவமி
சதுர்த்தசி
பஞ்சமி
தசமி
பௌர்ணமி/
அமாவாசை
பஞ்சாங்கத்தின் மூன்றாவது அங்கமாகத் திகழ்வது நட்சத்திரம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கும் ஒன்பது கோள்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ அதுவே அந்தக் குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.
கேது
அசுவினி
மகம்
மூலம்
சுக்கிரன்
பரணி
பூரம்
பூராடம்
சூரியன்
கார்த்திகை
உத்திரம்
உத்திராடம்
சந்திரன்
ரோகிணி
திருவோணம்
அஸ்தம்
செவ்வாய்
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
ராகு
திருவாதிரை
சுவாதி
சதயம்
குரு
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
சனி
உத்திரட்டாதி
பூசம்
அனுஷம்
புதன்
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அசுவினி, ரோகிணி, பூசம், அஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி.
பரணி, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சுவாதி, கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம் மற்றும் சதயம்.
கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் பூரட்டாதி.
“ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்பூரம் கேட்டை
தீதுறு விசாகஞ் ஜோதி
சித்திரை மகம் மீராறும்
மாதனங் கொண்டார் தாரார்,
வழிநடைப்பட்டார் மீளார்
பாய்தனிற்படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே"
பஞ்சாங்கத்தின் நான்காம் அங்கம் யோகம் ஆகும். யோகம் என்பது சேர்க்கை என்று பொருள் ஆகும். வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள மொத்த தூரமே யோகம் எனப்படும். இந்த யோகங்கள் 27 ஆகும். இவற்றை நாம யோகங்கள் என்று கூறுவார்கள்.
1 | விஷ்கம்பம் | எமன் |
2 | ப்ரீதி | விஷ்ணு |
3 | ஆயுஷ்மான் | நிசாசரன் |
4 | சௌபாக்யம் | தாதா |
5 | சோபனம் | பிருஹஸ்பதி |
6 | அதிகண்டம் | சந்திரன் |
7 | சுகர்மம் | இந்திரன் |
8 | திருதி | தோயன் |
9 | சூலம் | சர்ப்பம் |
10 | கண்டம் | அக்னி |
11 | விருத்தி | அர்கன் |
12 | துருவம் | பூமி |
13 | வியாகாதம் | மருத் |
14 | ஹர்ஷனம் | பகன் |
15 | வஜ்ரம் | வருணன் |
16 | சித்தி | கணேசன் |
17 | வ்யதீபாதம் | ருத்திரன் |
18 | வரீயான் | குபேரன் |
19 | பரிகம் | துவஷ்டா |
20 | சிவம் | மித்திரன் |
21 | சித்தம் | முருகன் |
22 | சாத்தியம் | சாவித்திரி |
23 | சுபம் | லட்சுமி |
24 | சுப்பிரமம் | கெளரி |
25 | பிராம்ஹம் | அசுவினி தேவர்கள் |
26 | ஐந்திரம் | பித்ருக்கள் |
27 | வைதிருதி | அதிதி |
ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம். சுகர்மம், விருத்தி, ஹர்ஷனம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிராம்ஹம், ஐந்திரம், ஆகியவை சுப நாம யோகங்கள் ஆகும்.
விஷ்கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வ்யாகாதம், வ்யதீபாதம், பரீகம், மற்றும் வைதிருதி ஆகியவை அசுப நாம யோகங்கள் ஆகும்.
பஞ்சாங்கத்தில் ஐந்தாவது அங்கம் கர்ணம் ஆகும். திதியில் பாதி கர்ணம் ஆகும். கர்ணங்கள் மொத்தம் பதினொன்று. அவை சர கரணங்கள். ஸ்திர கரணங்கள் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
கர்ணங்களில் பிறந்தவர்களின் தன்மைகள், செய்யக் கூடியவைகள் செய்யக் கூடாதவைகள் போன்றவற்றை அறியலாம்.
பவம்
இந்திரன்
பாலவம்
நான்முகன்
கௌலவம்
மித்திரன்
தைதுலை
பித்ருக்கள்
கரசை
பூமி
வணிசை
ஸ்ரீதேவி
பத்திரை
எமன்
சகுனி
விஷ்ணு
சதுஷ்பாதம்
மனிபத்ரன்
நாகவம்
சர்ப்பம்
கிம்ஸ்துக்னம்
வாயு
ஒவ்வொரு நாளும் ராகு பகவானின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும் நேரம் ராகு காலம் எனப்படும், இந்த காலம் 1½ மணி நேரம் இருக்கும். நல்ல காரியங்கள் செய்ய உகந்த நேரம் அன்று. எந்த காரியத்தையும் ராகு காலத்தில் செய்தல் கூடாது.
எமன் என்பவர் குருவின் துணைக் என்ற போதிலும் இந்த நேரம் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நேரம் அல்ல. ஒரு நாளில் எமகண்டம் 1½ மணி நேரம் இருக்கும். எம கண்டம் என்பது மாறன் காரியங்கள் செய்வதற்கு மட்டுமே ஏற்ற நேரம் ஆகும்.
குளிகன் என்பது சனியின் துணைக் கோளாகும். குளிகை காலம் என்பது ஒரு நாளில் 1 ½ மணி நேரம் இருக்கும். குளிகைக் காலத்தில் செய்யப்படும் காரியம் மீண்டும் மீண்டும் நிகழும் என்பதால் இந்த நேரத்தில் அசுப காரியங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக சவ அடக்கத்தைதவிர்க்க வேண்டும் சுப காரியங்களை தாராளமாக செய்யலாம் என்ற போதிலும் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.