Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவில், திருவேடகம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருவேடகம் ஏடகநாதர

Posted DateMarch 18, 2024

பாண்டிய  நாட்டில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 276 படல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் வைகை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சமணர்கள் மீது சைவர்கள் பெற்ற வெற்றியைக் காட்டுவதற்காக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 4 ஆவது ஸ்தலமாக விளங்குவது திருவேடகம் ஆகும் இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. ஏடகநாதர் லிங்க வடிவில் சற்று சாய்ந்த நிலையில் தோற்றமளிக்கிறார். அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு என்பதால் ஏலவார்குழலி என அழைக்கப்படுகிறாள்.

தல வரலாறு:

கூன்பாண்டியன் என்னும் அரசன் மதுரையை அரசாண்டு வந்தான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி. அவள் ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் “வாழ்க அந்தணர் ” என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.

கோவிலின் சிறப்பம்சங்கள்:

மூலவர் – சிவலிங்கத் திருமேனி; கருவறை வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றன.நடராசர் சந்நிதியில் இத்தலத் தேவாரத் திருப்பதிகம் சலவைக் கல்லில் எழுதப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபடின் “சித்தப்பிரமை” நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும்.அம்மன் சந்நிதி கற்றூண் ஒன்றில் திருஞானசம்பந்தரின் சிற்பம் சின்முத்திரையுடனும், தலைமாலையுடனும் (கையில் தாளமின்றி) அழகாக காட்சித் தருகிறது.பங்குனி உத்திரம் முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஏடு எதிரேறிய விழா ஆவணி முதல் நாளில் நடைபெறுகிறது.இத்தலம் “பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்” என்றும், இறைவன் பெயர் “திருவேடகம் உடைய நாயனார்” என்றும் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

கோவில் அமைப்பு:

கோவில் வளாகம் ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இது கோபுரங்கள்   எனப்படும் இரண்டு நுழைவாயில் கோபுரங்களைக் கொண்டுள்ளது , ஒவ்வொன்றும் ஏடகநாதர் மற்றும் எலவர்குழலி சன்னதிக்கு எதிரே உள்ளது. இக்கோயிலில் ஏடகநாதர் மற்றும் அவரது துணைவியார் சன்னதிகள் மிக முக்கியமானவை. அசல் வளாகம் பாண்டியப் பேரரசால்  கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது , தற்போதைய கொத்து அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது .கிழக்கு நோக்கிய கோயில், வண்ண வளைவுள்ளது. அம்மையப்பருக்கு ஐந்து நிலை கோபுரங்கள் தனித்தனியே காட்சி தருகின்றன.ஸ்தல விருட்சம் வில்வம்.

கோவில் சந்நிதிகள்:

 சுயம்பு லிங்கம். பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஆறுமுகசுவாமி, சோமாஸ்கந்தர், கணபதி, திரு ஞானசம்பந்தர் போன்ற தெய்வங்களுக்கும் உபசன்னதிகளும் அறுபத்து மூவர் சந்நிதிகளும் உள்ளன.  

விநாயகர்கள் : இங்குள்ள ஒரு தூணில் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்த நிலையிலுள்ள விநாயகரின் சிற்பம் உள்ளது. இது காண்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த விநாயகரின் திருநாமம் “செவிசாய்த்த விநாயகர்’ ஆகும்.  தன்னிடம் வரும் அன்பர்களின் வேண்டுதல்களையும், மனக்குறைகளையும் கேட்கும் விதத்தில் தன் காதினை நமக்கு காட்டி அமர்ந்திருப்பதால் இந்தப்பெயர் ஏற்பட்டது. சம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏட்டினை திருவேடகத்தில் தடுத்து நிறுத்தி கரை சேர்க்க காரணமாக அமைந்தவர் விநாயகர். ஆற்றுநீரை எதிர்த்து வந்த ஏட்டின் நான்கு மூலைகளிலும் பாதுகாப்பாக நின்று, நான்கு மீன்களாக மாறி அதை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஏட்டை தன் துதிக்கையில் தாங்கி, படித்துறையில் அமர்ந்தார். இவரை “வாதில் வென்ற விநாயகர்’ என்கின்றனர். கோயிலுக்கு வெளியே தனிக்கோயிலில் தற்போது அருள் செய்கிறார்.

இங்கு வடக்கு நோக்கி ஒரு துர்க்கையும், தெற்கு நோக்கி ஒரு துர்க்கையும் சன்னதி கொண்டுள்ளனர். இருதுர்க்கைகள் இருப்பதும் மாறுபட்ட ஒரு அமைப்பாகும். இங்கு சுவாமிக்கு தனியாகவும், அம்பாளுக்கு தனியாகவும் ராஜகோபுரங்களுடன் தனித்தனி வாசல்கள் உள்ளன.

இரண்டு தீர்த்தங்கள் : பிரம்மன் உண்டாக்கிய பிரம்மதீர்த்தம் இங்குள்ளது. தற்போது இது காய்ந்து கிடக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு சித்தபிரமை நீங்கியதாம். இந்த பிரம்மதீர்த்தத்தில் தைமாதத்தில் மகத்தன்று தெப்பத்திருவிழா நடந்தது. தற்போது தண்ணீர் இல்லை என்பதால், தெப்பத்திற்குள் சுவாமியை வலம் வரச்செய்ய மட்டும் செய்கிறார்கள். இதுதவிர கோயில் முன்பு ஓடும் வைகைநதியும் மற்றொரு தீர்த்தமாக உள்ளது. இவ்வூரில் வைகைநதி தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறது. காசியிலுள்ள கங்கை இவ்வாறு தான் ஓடும். ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. இறந்தவர்களின் ஆன்மா மோட்சகதி அடைய வேண்டி வைகையில் அஸ்தி கரைக்கிறார்கள். மேலும், பிறவியை முடித்த உயிர்கள் நற்கதி அடைவதற்காக மோட்சதீபம் ஏற்றும் வழக்கமும் இந்தக் கோயிலில் உள்ளது.

திருவிழாக்கள்:

இந்தக் கோவிலில் காலை 6.00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பல்வேறு நேரங்களில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும்  நான்கு ஆண்டு விழாக்கள்  முத்து பந்தல் திருவிழா மகம் நாளில் (பிப்ரவரி – மார்ச்) கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஆகும்.இங்கு 12 மாதமும் திருவிழா உண்டு. புரட்டாசி நவராத்திரி தவிர எல்லா விழாக்களுமே ஒருநாள் மட்டுமே நடக்கும் என்பது விசேஷம். வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், நடராஜர் திருமஞ்சனம், சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.அமாவாசையன்று சித்தருக்கு குருபூஜை நடக்கிறது. சம்பந்தரின் அற்புதம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மாதமான  வைகாசியில் ஏடு எதிரேரிய உற்சவமாக கொண்டாடப்படுகிறது . மற்ற விழாக்களில் விநாயக சதுர்த்தி, ஆடி பூரம், நவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி, ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகம் ஆகியவை அடங்கும். ஏடு எதிரேரிய உற்சவத்தின் போது , ​​சம்பந்தரின் திருவிளையாடல் கோவிலில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. கார்த்திகையில் (நவம்பர் – டிசம்பர்) நடைபெறும் சங்காபிஷேகம் இப்பகுதியில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

வயிற்றுவலி தீர நீராகார நைவேத்யம் : சட்டைநாத சித்தர் இவர் ஏழு இடங்களில் சமாதியானதாகச் சொல்கிறார்கள். இவர் திருவேடகத்திற்கு வந்த போது, செல்லும் வழியெல்லாம் லிங்கங்கள் பூமிக்குள் பதிந்திருப்பதைப் பார்த்து கால் வைக்கவே அஞ்சினார். அவரை சிறுவர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கோயிலுக்குள் விடுவார்களாம். அவர்களுக்கு ஆற்று மணலை பண்டமாக மாற்றி தந்தார் சட்டை நாதர். சட்டைநாதரும் அவருடன் தங்கியிருந்த சாதுக்களும், நீராகாரத்தில் திருநீறைப் போட்டு மக்களின் வயிற்று நோயினை போக்கினர். இப்போதும், நீராகாரம் கொண்டு வந்து சித்தர் அதிஷ்டானத்தின் மேலுள்ள லிங்கத்தின் முன்பு வைத்து, திருநீறிட்டு குடித்தால், வயிற்றுவலி தீருமென்று பக்தர்கள் நம்புகின்றனர்.

பரிகாரங்கள்:

திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப்படுகிறது. திருமணஞ்சேரியைப் போல திருமணப் பிரார்த்தனைக்குரிய தலம் திருவேடகம்.

ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும்.

கோவில் செல்லும் வழி :

மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 Km தொலைவில் உள்ளது.