கௌரி பஞ்சாங்கம் 2026
நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள் என்ற பழமொழி உள்ளது. அந்த அளவிற்கு ஒரு நாள் நமது வாழ்வில் பல்வேறு மாற்றத்தைக் கொண்டு வரும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நல்ல நேரம் என குறிப்பிட்டுள்ளனர். எந்த ஒரு சுப வேலைகளை ஆரம்பிப்பதற்கும் இந்த சுப நேரத்தை தேர்ந்தெடுத்துச் செய்வது வழக்கம்.கெளரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வந்த முறை ஆகும். கெளரி நல்ல நேரம் என்பது ஒரு நாளை 16 முகூர்த்தங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதில் பகலில் 8 முகூர்த்தமும், இரவில் 8 முகூர்த்தங்களும் அடங்கும். ஒரு முகூர்த்தம் என்பது 1.30 மணி நேரமாகும். எட்டு முகூர்த்தங்கள் : உத்தி, அமுதம், ரோகம், லாபம், தனம், சுகம், விஷம், சோரம் என எட்டு வகையான முகூர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன. சுப முகூர்த்தங்கள் : அமுதம், லாபம், தனம், சுகம், உத்தி ஆகிய முகூர்த்தங்கள் வரக்கூடிய நேரங்களில் சுபகாரியங்களைச் செய்யலாம்.
| கிழமை | காலம் | 6.00-7.30 | 7.30-9.00 | 9.00-10.30 | 10.30-12.00 | 12.00-1.30 | 1.30-3.00 | 3.00-4.30 | 4.30.-6.00 |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஞாயிறு | பகல் இரவு | உத்தி தனம் | அமுதம் சுகம் | ரோகம் சோரம் | லாபம் விஷம் | தனம் உத்தி | சுகம் அமுத | சோரம் ரோகம் | விஷம் லாபம் |
| திங்கள் | பகல் இரவு | அமுத சுகம் | விஷம் சோரம் | ரோகம் உத்தி | லாபம் அமுத | தனம் விஷம் | சுகம் ரோகம் | சோர லாபம் | உத்தி தனம் |
| செவ்வாய் | பகல் இரவு | ரோகம் சோரம் | லாபம் உத்தி | தனம் விஷம் | சுகம் அமுத | சோரம் ரோகம் | உத்தி லாபம் | விஷம் தனம் | அமுத சுகம் |
| புதன் | பகல் இரவு | லாபம் உத்தி | தனம் அமுத | சுகம் ரோகம் | சோரம் லாபம் | விஷம் தனம் | உத்தி சுகம் | அமுத சோரம் | ரோகம் விஷம் |
| வியாழன் | பகல் இரவு | தனம் அமுத | சுகம் விஷம் | சோரம் ரோகம் | உத்தி லாபம் | அமுத தனம் | விஷம் சுகம் | ரோகம் சோரம் | லாபம் உத்தி |
| வெள்ளி | பகல் இரவு | சுகம் ரோக | சோரம் லாபம் | உத்தி தனம் | விஷம் சுகம் | அமுத சோரம் | ரோகம் உத்தி | லாபம் விஷம் | தனம் அமுத |
| சனி | பகல் இரவு | சோர லாபம் | உத்தி தனம் | விஷம் சுகம் | அமுத சோரம் | ரோகம் உத்தி | லாபம் விஷம் | தனம் அமுத | சுகம் ரோகம் |
